priya pandees
Moderator
அத்தியாயம் 1
திருச்செந்தூர் ஆண்டவனே முருகையா
திருப்பங்கள் அருள்பவனே குமரையா
சண்முகனே வேலவனே கந்தையா
சம்கார நாயகனே சுப்பையா
என்ற பாடல் ஒலிபெருக்கியில் ஓடிக்கொண்டிருக்க, திருச்செந்தூர் முருகனை தரிசிக்க வந்தவர்கள் கோயிலின் உள்ளேயும், வெளியேயும் என பக்தி மயமாக உலாத்திக் கொண்டிருந்தனர்.
அந்த மாலை வேலையிலும் கடலில் சிறுவர்களும், பெரியவர்களும் குளித்துக் கொண்டிருந்தனர், அவரவருக்கான அவரவர் வேண்டுதல்களுடன் முருகனிடம் வந்திருந்தவர்களும் அதில் அடக்கம்.
இதெல்லாமே கண்ணில் பட்டாலும், கருத்தில் எடுக்காமல், இல்லையெனில் எடுக்கமுடியாமல் தன்னுள் பல சிந்தனைகளோடு அமர்ந்திருந்தாள் ப்ரகதீஸ்வரி.
பக்கத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு அப்படி, அவள் ஏதோ தீவிர சிந்தனையில் இருப்பது போல் தான் தோன்றும், தெரியும்.
ஆனால் அவளோ, மனதினுள் அவள் கணவனை, கண் கண்ட தெய்வத்தை, எண்ணையே ஊற்றாமல் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள். மனம் முழுவதும் அவன்மேல் அவ்வளவு கடுப்பு, '௭னக்கு நல்லா வேணும், இதும் வேணும் இன்னமு வேணும். அவர பத்தி தெரிஞ்சுமே ரொம்ப எதிர்பாத்தீல? உனக்கு நல்லா வேணும்டி. அஞ்சு வருஷமா நடக்காதது தான் இந்த வருஷம் நடந்துரும்ன்னு மட்டி கணக்கா உக்காந்திருந்தியே!! நீ எவ்ளோ பெரிய ஃபூல்'டி(fool)' அவளால் இப்போது நடந்த விஷயத்தை இதற்குமுன் எடுத்து கொண்டதை போல் ௭ளிதாக ௭டுத்து கடந்து செல்ல முடியவில்லை.
'ஐயோ… இந்த தடவ நா வாய்விட்டே கேட்டனே, அப்டி கூட என்னை நினைக்கலயா அவரு? அப்றம் என்ன வாழ்க்கை வாழ்றேன் நா? இத்தன நாள் பொறுத்து போனமாதிரி இந்த டைம் இருக்க கூடாதுடி ப்ரகி., உன் கோவத்த பாத்தே ஆகணும் அந்த மனுஷன். எப்பயும் என்ன இன்சல்ட் பண்றதே வேலையா வச்சிருக்காரு. ஒவ்வொரு தடவையும், நம்பி எதிர்பார்த்து ஏமாந்து போறதே ௭ன் பொழப்பாயிட்டு. இவரு பெரியதுரை, வீட்டுக்கு வாரேன்னு மெசேஜ் போட்டவுடனே நாங்க உள்ளேன் ஐயான்னு டைம்க்கு ஆஜராகிடணும். அப்படி அவர் என்ன செஞ்சாலும் நா போய் தாங்குறதனால தான என்ன பத்தின யோசனை இல்ல? இனி யோசிக்க வைக்கிறேன்!', ௭ன இருந்த கடுப்பில் முடிவெடித்துக் கொண்டாள். செயல்படுமா ௭ன்பது அவன் முன் சென்று நின்றபின் தான் தெரியும்.
மறுபடியும் வறுத்தெடுக்க தொடங்கினாள் 'அவரு நினச்சிருந்தா, ஒருநா, அது கூட வேணாம் ஒரு, ஒருமணிநேரம் பெர்மிசன் போட்டு வந்துட்டு போயிருக்கலாமே. எவ்வளவு ஆசையா கல்யாண புடவல்லாம் கட்டி ரெடியாகி, இவர எதிர்பார்த்து உக்காந்திருந்தேன். எல்லோரு முன்னையும் எவ்வளவு அசிங்கமா போச்சு' என நினைக்கையில் கண்கள் வேறு கலங்கி பார்வையை மறைக்க, சுற்றுப்புறத்தை உணர்ந்து அதை உள்ளிழுத்தாள்.
பின் சற்று நிதானித்து, மணியை திருப்பி பார்த்தாள், அது 7.30 என காட்ட, நன்றாக இருட்டி விட்டது தெரிய, ‘இந்நேரம் வீட்டுக்கு வந்திருப்பார். இந்த மாமியார் லிஸ்ட் போட்டு கம்ப்ளைன்ட் லெட்டர சார் கிட்ட ஒப்பிசிட்டுருக்கும். திட்டு வாங்குறதுன்னு ஆகிட்டு இன்னும் கொஞ்சம் லேட்டா போயே திட்டு வாங்குவோம்' ௭ன நினைத்துக் கொண்டிருக்கும் போதே மறுபடியும் எண்ணம், கணவன் தன்னை ஒவ்வொரு முறையும் உதாசீனப்படுத்துவதை தான் எடுத்து வந்து முன் நின்றது.
ப்ரகதீஸ்வரி, எவ்வளவு ஆசையோடும், கனவுகளோடும், எதிர்பார்ப்புகளோடும் இந்த கல்யாண வாழ்க்கைக்குள் நுழைந்தாள் என்பது இன்றுவரை அவள் மட்டுமே அறிந்த ரகசியமாக உள்ளது. அதில் ஒன்று கூட நிறைவேறவில்லை என்பது தான் கோபமாகி, பின் கண்ணீராகி, விரக்தியாகி, இப்போது வெறுப்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
அது தான் அவளின் தற்போதைய பயமே, “௭ன் வாழ்க்கை இப்டியே போயிடுமோ” என பயப்பட தொடங்கியிருந்தாள். தன் மனதை பகிர்ந்துகொண்டு ஆறுதலோ, அறிவுரையோ பெறவும் ஆட்கள் இல்லை. மொத்தமும் தன் மனதுக்குள் மட்டுமே என பூட்டி வைத்திருக்கிறாள். அது ௭வ்வாறு வெளிபடுமோ ௭ன்ற பயம் வர தொடங்கி இருந்தது.
அவள் துணையாக, நண்பனாக, காதலனாக, அம்மாவாக என எல்லாவற்றையும் எதிர்பார்த்தது கணவனிடம் மட்டுமே. அது நடக்காததால் வாழ்க்கையே முடிந்து விட்டதாக எண்ணி இப்படி வந்து அமர்ந்து இருக்கிறாள்.
ஆயிரத்து நூற்று எண்பத்தெட்டாவது முறையாக “நினைப்பியா? அவர் காக்க காக்க சூர்யா, நீ அதுல வர்ற ஜோதிகான்னு இனி நினைப்பியாடி. லூசு லூசு ஆச படலாம், பேராச படலாமா? அதான் இப்டி வந்து புலம்புற” என தன்னையே கேட்டு வெளிப்படையாகவே முன் நெற்றியில் அறைந்து கொள்ள.
“எதுக்குமா நீயே உன்ன அடிச்சிக்குற. தப்பு பண்ணிட்டியா?” என ஓடி வந்து அவள் மேல் விழுந்தான் அவளின் நான்கு வயது மகன் கர்ணன், அவளின் முழுநேர ஆறுதல். அவ்வளவு நேரமும் அவளை உரசி கொண்டமர்ந்து மண்ணில் விளையாடி களைத்து போயிருந்தான்.
“எதுக்கு அடிச்ச, வலிச்சும்ல" ௭ன சொல்லி, அவள் நெற்றியை வேறு கையிலிருந்த மண்ணோடு தேய்த்து விட்டான்.
“மூஞ்செல்லாம் மண்ணாகுதுடா கர்ணா, கொண்டா கைய” என இழுத்து புடவை முந்தானையால் துடைத்துவிட்டாள். வந்து இரண்டு மணி நேர இந்த மண் விளையாட்டிலும், அவளை தொந்தரவு செய்யாத, எதையும் காட்டி வாங்கித்தா என கேட்காத அறிவு குழந்தை அவன். யார் யாருக்கோ பயந்து பிள்ளையின் ஆசைகளையும் அடக்கி வைக்க தொடங்கியிருக்கிறாள். அது இன்னுமே அதிக வேதனையை தந்தது.
ஒரு பெரு மூச்சுடன், கையை உதறிக் கொண்டு, “வீட்டுக்கு போலாமா குட்டி? இருட்டிருச்சி?” என ௭ழ முயன்று கொண்டு கேட்கவும்,
“ஓகே மா” என அவள் மேலிருந்து எழுந்து நின்று கொண்டான் கர்ணன்.
இன்னைக்கு தான் break the rules முடிவை ௭டுத்திருந்தாளே, அதனால் “ஏதாது சாப்ட்டு போவமா குட்டி?” என தானும் புடவையை உதறியவாறு எழுந்து மகன் கையை பிடித்துக்கொண்டு கேட்க,
“நீ அடிப்ப” என்றான் அவன் ௭ன்றோ வாங்கியதை வைத்து.
“அடம் பண்ணா தான் அம்மா அடிப்பேன். இன்னைக்கு நானே தான உன்ட்ட கேக்றேன், அதனால அடிக்க மாட்டேன். அன்னைக்கு அடிச்சதுக்கும் சாரி கேட்டேன்ல டா” என்றாள்.
அதற்கு ஒரு தலையசைப்புடன், பெருந்தன்மையான ஒரு “ஓகே ம்மா, போலாம்”வை கொடுத்துவிட்டு, பெரிய அப்பளம் பொறிக்கும் கடைக்கு அவளை இழுக்காத குறையாக இழுத்துக்கொண்டு ஓடினான்.
அந்த கடை முன் சென்று கை காட்டவும், “கடையெல்லாம் பார்த்து வச்சுட்டு தான் கேட்காம இருந்துருக்கியா நீ” என மீண்டும் கண்கலங்கும் போலிருந்தது அவளுக்கு.
அவனோ குஷியில் குதித்துக் கொண்டிருந்தான். அதில் கண்ணீரை அடக்கி சிரித்தவள், கடை போர்டை பார்த்து விட்டு, “சரி வாங்கலாம், ஆடாம நில்லு. இங்க பஜ்ஜியா? அப்பளமா? எது வேணும் உனக்கு” என்றாள் கடையையும் ஆராய்ந்து கொண்டு.
“அப்பளம் பெடிய அப்பளம் வேணும்.....வேணும்” என மீண்டும் குதிக்க,
“குதிக்காம நில்லு வாங்கித்தரேன்” என்றவள், “ஒரு அப்பளம், பொடி லேசா போட்டு கொடுங்க” என்றவள் அங்கு ஓரத்திலிருந்த தண்ணீர் குடத்திலிருந்து தண்ணீர் ௭டுத்து இருவர் கையையும் கழுவினாள்.
அவர்கள் போட்டு தரவும், இவள் வாங்கி மகனை நோக்கி குனிய, அவனுக்கு முகத்தில் அப்படி ஒரு பரவசம். ‘பாவம் எவ்வளவு ஏங்க விட்டுருக்கேன் என் பையன’ என தோன்றவும், ஒரு கையில் அப்பளத்தோடு, மறு கையால் மகனை இழுத்து முத்தினாள்.
“ம்மா அப்பளம் நொறுங்கும்” என அவன் கவனம் அதில் தான்.
இப்போது கை பொறுக்கும் சூடு வரவும், கொஞ்சமாக நொறுக்கி எடுத்து அவன் கையில் கொடுக்க ஆசையும், ஆர்வமுமாக சாப்பிட்டான்.
அவனையே பார்த்திருந்தவள், 'என்னோட ஆசைகள் நடக்காம போறதால உன்னோட சின்ன சின்ன ஆசைகளையும் நானே அடக்றேனா?' என பெரும் மூச்செரிந்தாள். லேசாக தூவப்பட்ட பொடியானாலும் அவனுக்கு அது உறைக்கவே, உஸ் தஸ்ஸென வாயை குவித்தாலும் கையில் உள்ளது காலியாக ஆக, அடுத்ததற்கு நீட்டினான்.
முக்கால்வாசி காலியான பின்பே தாயின் நினைப்பு வந்தது போலும், “அம்மா நீ சாப்பிடு”,
“உனக்கு போதுன்னப்புறம் தான் நா கண்ணுக்கு தெரிறேன்ல” என பொய்யாக அவள் கேக்கவுமே.
“இல்ல இல்லம்மா இந்தா..” என தன் கையில் வைத்திருந்ததோடு அவள் வாயில் கொடுக்க எக்கினான்.
“வேணாம் போ” என அவள் முகம் திருப்பவும்,
“ம்மா சாரி” என கையில் வைத்திருந்ததோடு அவளின் இடுப்பை கட்டிக்கொண்டான்.
“அச்சோ கையயும் எம்மேலயே தொடச்டியா? கள்ளன்டா நீ” என அவன் தலை கலைக்கவும், நிமிர்ந்து சிரித்தான் அவன்.
“சரி இந்தா சாப்டு, வீட்டுக்கு போவோம்” என்றதும் தலையசைத்து மறுத்தான். அவனுக்கு அதற்கு மேல் இறங்காது என புரிந்து தன் வாயில் போட்டு பேக்கில் இருந்து வாட்டர் பாட்டில் எடுத்து மறுபடியும் இருவர் கையையும், கழுவி விட்டு. அவனுக்கு குடிக்கக் கொடுத்து தானும் குடித்து விட்டே சுற்றுப்புறத்தை பார்க்க, பலர் அவர்களை தான் சிரித்தவாறு பார்த்திருந்தனர். அப்போதுதான் ரோடு என்பது ஞாபகம் வந்து மகனை வேகமாக கிளப்பிக் கொண்டு ஸ்கூட்டி நிற்கும் இடம் அடைந்து, அவனை முன் தூக்கி நிறுத்தி வண்டியை வீட்டை நோக்கி வேகமெடுத்தாள்.
திருச்செந்தூர் ஆண்டவனே முருகையா
திருப்பங்கள் அருள்பவனே குமரையா
சண்முகனே வேலவனே கந்தையா
சம்கார நாயகனே சுப்பையா
என்ற பாடல் ஒலிபெருக்கியில் ஓடிக்கொண்டிருக்க, திருச்செந்தூர் முருகனை தரிசிக்க வந்தவர்கள் கோயிலின் உள்ளேயும், வெளியேயும் என பக்தி மயமாக உலாத்திக் கொண்டிருந்தனர்.
அந்த மாலை வேலையிலும் கடலில் சிறுவர்களும், பெரியவர்களும் குளித்துக் கொண்டிருந்தனர், அவரவருக்கான அவரவர் வேண்டுதல்களுடன் முருகனிடம் வந்திருந்தவர்களும் அதில் அடக்கம்.
இதெல்லாமே கண்ணில் பட்டாலும், கருத்தில் எடுக்காமல், இல்லையெனில் எடுக்கமுடியாமல் தன்னுள் பல சிந்தனைகளோடு அமர்ந்திருந்தாள் ப்ரகதீஸ்வரி.
பக்கத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு அப்படி, அவள் ஏதோ தீவிர சிந்தனையில் இருப்பது போல் தான் தோன்றும், தெரியும்.
ஆனால் அவளோ, மனதினுள் அவள் கணவனை, கண் கண்ட தெய்வத்தை, எண்ணையே ஊற்றாமல் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள். மனம் முழுவதும் அவன்மேல் அவ்வளவு கடுப்பு, '௭னக்கு நல்லா வேணும், இதும் வேணும் இன்னமு வேணும். அவர பத்தி தெரிஞ்சுமே ரொம்ப எதிர்பாத்தீல? உனக்கு நல்லா வேணும்டி. அஞ்சு வருஷமா நடக்காதது தான் இந்த வருஷம் நடந்துரும்ன்னு மட்டி கணக்கா உக்காந்திருந்தியே!! நீ எவ்ளோ பெரிய ஃபூல்'டி(fool)' அவளால் இப்போது நடந்த விஷயத்தை இதற்குமுன் எடுத்து கொண்டதை போல் ௭ளிதாக ௭டுத்து கடந்து செல்ல முடியவில்லை.
'ஐயோ… இந்த தடவ நா வாய்விட்டே கேட்டனே, அப்டி கூட என்னை நினைக்கலயா அவரு? அப்றம் என்ன வாழ்க்கை வாழ்றேன் நா? இத்தன நாள் பொறுத்து போனமாதிரி இந்த டைம் இருக்க கூடாதுடி ப்ரகி., உன் கோவத்த பாத்தே ஆகணும் அந்த மனுஷன். எப்பயும் என்ன இன்சல்ட் பண்றதே வேலையா வச்சிருக்காரு. ஒவ்வொரு தடவையும், நம்பி எதிர்பார்த்து ஏமாந்து போறதே ௭ன் பொழப்பாயிட்டு. இவரு பெரியதுரை, வீட்டுக்கு வாரேன்னு மெசேஜ் போட்டவுடனே நாங்க உள்ளேன் ஐயான்னு டைம்க்கு ஆஜராகிடணும். அப்படி அவர் என்ன செஞ்சாலும் நா போய் தாங்குறதனால தான என்ன பத்தின யோசனை இல்ல? இனி யோசிக்க வைக்கிறேன்!', ௭ன இருந்த கடுப்பில் முடிவெடித்துக் கொண்டாள். செயல்படுமா ௭ன்பது அவன் முன் சென்று நின்றபின் தான் தெரியும்.
மறுபடியும் வறுத்தெடுக்க தொடங்கினாள் 'அவரு நினச்சிருந்தா, ஒருநா, அது கூட வேணாம் ஒரு, ஒருமணிநேரம் பெர்மிசன் போட்டு வந்துட்டு போயிருக்கலாமே. எவ்வளவு ஆசையா கல்யாண புடவல்லாம் கட்டி ரெடியாகி, இவர எதிர்பார்த்து உக்காந்திருந்தேன். எல்லோரு முன்னையும் எவ்வளவு அசிங்கமா போச்சு' என நினைக்கையில் கண்கள் வேறு கலங்கி பார்வையை மறைக்க, சுற்றுப்புறத்தை உணர்ந்து அதை உள்ளிழுத்தாள்.
பின் சற்று நிதானித்து, மணியை திருப்பி பார்த்தாள், அது 7.30 என காட்ட, நன்றாக இருட்டி விட்டது தெரிய, ‘இந்நேரம் வீட்டுக்கு வந்திருப்பார். இந்த மாமியார் லிஸ்ட் போட்டு கம்ப்ளைன்ட் லெட்டர சார் கிட்ட ஒப்பிசிட்டுருக்கும். திட்டு வாங்குறதுன்னு ஆகிட்டு இன்னும் கொஞ்சம் லேட்டா போயே திட்டு வாங்குவோம்' ௭ன நினைத்துக் கொண்டிருக்கும் போதே மறுபடியும் எண்ணம், கணவன் தன்னை ஒவ்வொரு முறையும் உதாசீனப்படுத்துவதை தான் எடுத்து வந்து முன் நின்றது.
ப்ரகதீஸ்வரி, எவ்வளவு ஆசையோடும், கனவுகளோடும், எதிர்பார்ப்புகளோடும் இந்த கல்யாண வாழ்க்கைக்குள் நுழைந்தாள் என்பது இன்றுவரை அவள் மட்டுமே அறிந்த ரகசியமாக உள்ளது. அதில் ஒன்று கூட நிறைவேறவில்லை என்பது தான் கோபமாகி, பின் கண்ணீராகி, விரக்தியாகி, இப்போது வெறுப்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
அது தான் அவளின் தற்போதைய பயமே, “௭ன் வாழ்க்கை இப்டியே போயிடுமோ” என பயப்பட தொடங்கியிருந்தாள். தன் மனதை பகிர்ந்துகொண்டு ஆறுதலோ, அறிவுரையோ பெறவும் ஆட்கள் இல்லை. மொத்தமும் தன் மனதுக்குள் மட்டுமே என பூட்டி வைத்திருக்கிறாள். அது ௭வ்வாறு வெளிபடுமோ ௭ன்ற பயம் வர தொடங்கி இருந்தது.
அவள் துணையாக, நண்பனாக, காதலனாக, அம்மாவாக என எல்லாவற்றையும் எதிர்பார்த்தது கணவனிடம் மட்டுமே. அது நடக்காததால் வாழ்க்கையே முடிந்து விட்டதாக எண்ணி இப்படி வந்து அமர்ந்து இருக்கிறாள்.
ஆயிரத்து நூற்று எண்பத்தெட்டாவது முறையாக “நினைப்பியா? அவர் காக்க காக்க சூர்யா, நீ அதுல வர்ற ஜோதிகான்னு இனி நினைப்பியாடி. லூசு லூசு ஆச படலாம், பேராச படலாமா? அதான் இப்டி வந்து புலம்புற” என தன்னையே கேட்டு வெளிப்படையாகவே முன் நெற்றியில் அறைந்து கொள்ள.
“எதுக்குமா நீயே உன்ன அடிச்சிக்குற. தப்பு பண்ணிட்டியா?” என ஓடி வந்து அவள் மேல் விழுந்தான் அவளின் நான்கு வயது மகன் கர்ணன், அவளின் முழுநேர ஆறுதல். அவ்வளவு நேரமும் அவளை உரசி கொண்டமர்ந்து மண்ணில் விளையாடி களைத்து போயிருந்தான்.
“எதுக்கு அடிச்ச, வலிச்சும்ல" ௭ன சொல்லி, அவள் நெற்றியை வேறு கையிலிருந்த மண்ணோடு தேய்த்து விட்டான்.
“மூஞ்செல்லாம் மண்ணாகுதுடா கர்ணா, கொண்டா கைய” என இழுத்து புடவை முந்தானையால் துடைத்துவிட்டாள். வந்து இரண்டு மணி நேர இந்த மண் விளையாட்டிலும், அவளை தொந்தரவு செய்யாத, எதையும் காட்டி வாங்கித்தா என கேட்காத அறிவு குழந்தை அவன். யார் யாருக்கோ பயந்து பிள்ளையின் ஆசைகளையும் அடக்கி வைக்க தொடங்கியிருக்கிறாள். அது இன்னுமே அதிக வேதனையை தந்தது.
ஒரு பெரு மூச்சுடன், கையை உதறிக் கொண்டு, “வீட்டுக்கு போலாமா குட்டி? இருட்டிருச்சி?” என ௭ழ முயன்று கொண்டு கேட்கவும்,
“ஓகே மா” என அவள் மேலிருந்து எழுந்து நின்று கொண்டான் கர்ணன்.
இன்னைக்கு தான் break the rules முடிவை ௭டுத்திருந்தாளே, அதனால் “ஏதாது சாப்ட்டு போவமா குட்டி?” என தானும் புடவையை உதறியவாறு எழுந்து மகன் கையை பிடித்துக்கொண்டு கேட்க,
“நீ அடிப்ப” என்றான் அவன் ௭ன்றோ வாங்கியதை வைத்து.
“அடம் பண்ணா தான் அம்மா அடிப்பேன். இன்னைக்கு நானே தான உன்ட்ட கேக்றேன், அதனால அடிக்க மாட்டேன். அன்னைக்கு அடிச்சதுக்கும் சாரி கேட்டேன்ல டா” என்றாள்.
அதற்கு ஒரு தலையசைப்புடன், பெருந்தன்மையான ஒரு “ஓகே ம்மா, போலாம்”வை கொடுத்துவிட்டு, பெரிய அப்பளம் பொறிக்கும் கடைக்கு அவளை இழுக்காத குறையாக இழுத்துக்கொண்டு ஓடினான்.
அந்த கடை முன் சென்று கை காட்டவும், “கடையெல்லாம் பார்த்து வச்சுட்டு தான் கேட்காம இருந்துருக்கியா நீ” என மீண்டும் கண்கலங்கும் போலிருந்தது அவளுக்கு.
அவனோ குஷியில் குதித்துக் கொண்டிருந்தான். அதில் கண்ணீரை அடக்கி சிரித்தவள், கடை போர்டை பார்த்து விட்டு, “சரி வாங்கலாம், ஆடாம நில்லு. இங்க பஜ்ஜியா? அப்பளமா? எது வேணும் உனக்கு” என்றாள் கடையையும் ஆராய்ந்து கொண்டு.
“அப்பளம் பெடிய அப்பளம் வேணும்.....வேணும்” என மீண்டும் குதிக்க,
“குதிக்காம நில்லு வாங்கித்தரேன்” என்றவள், “ஒரு அப்பளம், பொடி லேசா போட்டு கொடுங்க” என்றவள் அங்கு ஓரத்திலிருந்த தண்ணீர் குடத்திலிருந்து தண்ணீர் ௭டுத்து இருவர் கையையும் கழுவினாள்.
அவர்கள் போட்டு தரவும், இவள் வாங்கி மகனை நோக்கி குனிய, அவனுக்கு முகத்தில் அப்படி ஒரு பரவசம். ‘பாவம் எவ்வளவு ஏங்க விட்டுருக்கேன் என் பையன’ என தோன்றவும், ஒரு கையில் அப்பளத்தோடு, மறு கையால் மகனை இழுத்து முத்தினாள்.
“ம்மா அப்பளம் நொறுங்கும்” என அவன் கவனம் அதில் தான்.
இப்போது கை பொறுக்கும் சூடு வரவும், கொஞ்சமாக நொறுக்கி எடுத்து அவன் கையில் கொடுக்க ஆசையும், ஆர்வமுமாக சாப்பிட்டான்.
அவனையே பார்த்திருந்தவள், 'என்னோட ஆசைகள் நடக்காம போறதால உன்னோட சின்ன சின்ன ஆசைகளையும் நானே அடக்றேனா?' என பெரும் மூச்செரிந்தாள். லேசாக தூவப்பட்ட பொடியானாலும் அவனுக்கு அது உறைக்கவே, உஸ் தஸ்ஸென வாயை குவித்தாலும் கையில் உள்ளது காலியாக ஆக, அடுத்ததற்கு நீட்டினான்.
முக்கால்வாசி காலியான பின்பே தாயின் நினைப்பு வந்தது போலும், “அம்மா நீ சாப்பிடு”,
“உனக்கு போதுன்னப்புறம் தான் நா கண்ணுக்கு தெரிறேன்ல” என பொய்யாக அவள் கேக்கவுமே.
“இல்ல இல்லம்மா இந்தா..” என தன் கையில் வைத்திருந்ததோடு அவள் வாயில் கொடுக்க எக்கினான்.
“வேணாம் போ” என அவள் முகம் திருப்பவும்,
“ம்மா சாரி” என கையில் வைத்திருந்ததோடு அவளின் இடுப்பை கட்டிக்கொண்டான்.
“அச்சோ கையயும் எம்மேலயே தொடச்டியா? கள்ளன்டா நீ” என அவன் தலை கலைக்கவும், நிமிர்ந்து சிரித்தான் அவன்.
“சரி இந்தா சாப்டு, வீட்டுக்கு போவோம்” என்றதும் தலையசைத்து மறுத்தான். அவனுக்கு அதற்கு மேல் இறங்காது என புரிந்து தன் வாயில் போட்டு பேக்கில் இருந்து வாட்டர் பாட்டில் எடுத்து மறுபடியும் இருவர் கையையும், கழுவி விட்டு. அவனுக்கு குடிக்கக் கொடுத்து தானும் குடித்து விட்டே சுற்றுப்புறத்தை பார்க்க, பலர் அவர்களை தான் சிரித்தவாறு பார்த்திருந்தனர். அப்போதுதான் ரோடு என்பது ஞாபகம் வந்து மகனை வேகமாக கிளப்பிக் கொண்டு ஸ்கூட்டி நிற்கும் இடம் அடைந்து, அவனை முன் தூக்கி நிறுத்தி வண்டியை வீட்டை நோக்கி வேகமெடுத்தாள்.
Last edited: