Krishna Tulsi
Moderator
இனியவளே - 1
ஓர் இருண்ட நள்ளிரவு. மேகக்கூட்டங்கள் திரண்டு, செவ்வானமாக காட்சியளித்து மழை வரும் அறிகுறியை உணர்த்தின. சற்று நேரத்தில் ஆயிரம் ஊசிகள் வின்னிலிருந்து தரையிறங்குவதுபோல் கனத்த மழை பெய்யத் துவங்கியது. புயல் மழையிலும் அந்த நீண்ட சாலையில் ஒரு டாக்ஸி வேகமாக சென்றுகொண்டிருந்தது.
அன்று தன்னுடைய கடைசி சவாரியை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த அந்த ஓட்டுனர் மழையையும் பொருட்படுத்தாமல் மின்னலென வாகனத்தை ஓட்டினார். அப்போது சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருந்த பெண் வாகனத்தை நிறுத்துமாறு தன் கையை நீட்டி சைகை செய்தாள். அவளைக் கண்டதும் அந்த ஓட்டுனருக்கு குழப்பமும், பயமும் உண்டாயிற்று. எனினும் அவளுடைய நிலையைக் கண்டு அவளருகே நிறுத்தினார்.
அவள் ஒரு நிமிடம்கூட தாமதிக்காமல் அந்த வண்டியினுள் ஏறினாள். வாகனம் மீண்டும் பயணிக்க அந்த ஓட்டுனர், "நீங்க எங்க போகணும் மேடம்?" என்று கேட்க அவள் ஒரு பிரபலமான நட்சத்திர விடுதி ஒன்றிற்கு செல்லவேண்டும் என்று சுருக்கமாக பதிலளித்தாள். அவளுடைய செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் அவர் முன்கண்ணாடியின் மூலமாக கவனித்துக்கொண்டே இருந்தார்.
அவளுடைய கைகால்கள் பதற்றத்தால் நடுங்கின. அந்த டாக்சியின் இரு பக்கங்களிலும் உள்ள கதவுக் கண்ணாடிகளை வேகமாக ஏற்றினாள். அவள் கண்ணாடியின் வழியாக வெளியே பார்த்துக்கொண்டே வந்தாள். அப்போது தற்செயலாக அவளுடைய பார்வை முன்கண்ணாடியின் பக்கம் சென்றது. அந்த ஓட்டுனர் தன்னை கவனிக்கிறார் என்பதை அறிந்து பதற்றத்தைக் குறைத்துக்கொண்டு இயல்பாக அமர்ந்தாள். பின் தன்னுடைய கைபேசியில் எதையோ செய்துகொண்டிருந்தாள்.
நட்சத்திர விடுதி வந்ததும் அவசர அவசரமாக டாக்சியிலிருந்து இறங்கினாள். தன் கைக்கு வந்த பணத்தை அவரிடம் கொடுத்துவிட்டு அந்த ஹோட்டலினுள் நுழைந்தவள் தன் அறைக்குச் செல்ல அந்த லிஃடினுள் புகுந்தாள். அறை இருக்கும் தளத்தின் எண் பொறிக்கப்பட்ட அந்த பொன்னிற பொத்தானை பலமுறை வேகமாக அழுத்தினாள். அடிக்கடி அவளுடைய கண்கள் அந்த லிஃடின் வெளியே பதற்றத்துடன் நோக்கியது. சிறிதுநேரத்தில் அந்த லிஃடின் உலோக கதவுகள் தாமாக மூடிக்கொண்டன.
அவள் தன் தளத்தை அடைந்ததும் விரைந்து வெளியேறி தன்னுடைய அறையை நோக்கிச் சென்று கதவை தாழிட்டாள். உள்ளே வந்தவள் செய்வதறியாது கைகளைப் பிசைந்தவாறு அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள். அந்த குளிர்ந்த அறையிலும் அவளுக்கு வியர்த்துக் கொட்டியது.
ஏதோ தோன்ற விரைந்து லக்கேஜை எடுத்து தன்னுடைய துணிமணிகளை அதனுள் அவசர அவசரமாக நிரப்பத் துவங்கினாள். அப்போது அந்த அறையின் அழைப்புமணி ஒலித்தது. அதைக் கேட்டவுடன் அவளுடைய நெஞ்சத்தில் குளிர் பரவியது, இதயம் இயல்பைவிட பலமடங்கு வேகமாக துடித்தது.
அந்த கதவையே வெறித்தவண்ணம் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள். அழைப்புமணி மூன்றுமுறை ஒலித்துவிட்டு பின் நின்றது. அப்போது அவள் பயத்துடன் மெதுவாக கதவை நோக்கி அடியெடுத்து வைத்தாள். கைப்பிடியை மெல்ல திருகி கதவைத் திறந்தபோது அவளுடைய கண்கள் அதிர்ச்சியால் விரிந்தன.
ஒரு வாரம் கழிந்தது. அன்று காலைப் பொழுதில் அந்த பெரிய நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த வாடிக்கையாளர்கள் சிலர் வரவேற்புப் பகுதிக்குச் சென்று மானேஜரை அழைக்குமாறு கோபத்துடன் கத்திக்கொண்டிருந்தனர். வரவேற்பில் இருந்த பெண், மானேஜரை அழைக்கவும் அங்கு விரைந்து வந்தவர், "எக்ஸ்கியூஸ்மீ லேடீஸ் அண்ட் ஜென்டில்மென்...ஐ ஆம் தி மேனேஜர் ஃப் திஸ் ஹோட்டல். எனி பிராப்லம்" என்று அங்கு இருந்தவர்களைப் பார்த்துக் கேட்டார்.
அப்போது கூட்டத்திலிருந்த ஒருவர், "உங்க சர்வீசஸ் இவ்வளவு மட்டமா இருக்கும்னு நான் நினைச்சி பாக்கல. இது தான் நீங்க உங்க கஸ்டமர்ஸ பாத்துக்குற லட்சணமா? இப்படிப்பட்ட மோசமான சர்வீஸ நான் எந்த ஹோட்டல்லயும் பார்த்ததில்ல..." என்று சரமாரியாக மானேஜரை திட்டினார். அவருடைய வசைகளை வாங்கியபோதும் அந்த மானேஜர் தன் முகத்தில் எந்தஒரு சலனமும் காட்டாமல், "ஐ அம் ரியல்லி சாரி ஃர் தி இன்கன்வீணியன்ஸ் சார். என்ன பிரச்சனன்னு சொன்னீங்கன்னா அத உடனே நாங்க சரி செஞ்சிடுவோம்" என்று பதிலுரைத்தார்.
உடனே, "இன்னைக்கு காலைல நான் ஃஸ் வாஷ் பண்ணும்போது தண்ணி ரொம்பவே பேட் ஸ்மெல் அடிச்சது. அத சீக்கிரமா பாத்து சரிபண்ணுங்க" என்று எரிச்சலுடன் கூறவும், "டோன்ட் வொரி சார். நீங்க உங்க ரூம்க்கு போங்க, அத நாங்க இப்பவே பாத்துடறோம்" என்று கூறவும் அங்கிருந்த அனைவரும் கலைந்து தங்களுடைய அறைக்குச் சென்றனர்.
அந்த மானேஜர் தனக்கு கீழ் பணிபுரியும் இருவரை என்னவென்று பார்ப்பதற்காக தன்னுடன் அழைத்துச் சென்றார். அப்போது, "ராஜு, இந்த பிரச்சனை எப்பயிருந்து இருக்கு?" என்று அதிகாரக் குரலில் கேட்டவுடன் அவன், "எங்களுக்கே, இப்ப தான் சார் தெரியும்.." என்று தயங்கியவாறே கூறவும் அவனை ஓரக்கண்ணால் முறைத்தார். மூவரும் அந்த ஹோட்டலின் மேற்கூரையை அடைந்தனர்.
அந்த பறந்து விரிந்த மொட்டை மாடியின் ஒரு பகுதியில் பத்திற்கு பத்து அடி உருளை வடிவத்தில் நான்கு தொட்டிகள் இருந்தன. அதிலிருந்து சில அறைகளின் பயன்பாட்டிற்கு நீர் சேகரிக்கப்பட்டிருந்தது. மானேஜர் சைகை செய்ய ராஜு ஒவ்வொரு தொட்டியாக ஏறிப்பார்த்தான். அப்போது ஒரு தொட்டியை திறந்தபோது அவன், 'ஆ' என அலறினான். ஏனென்றால் அதில் பாதி அழுகிய நிலையில் சடலம் ஒன்று மிதந்தது. அது வேறுயாருமல்ல அன்று பதற்றத்துடன் டாக்சியில் ஏறிய அதே பெண்.
வருடங்கள் சில உருண்டோடின. அழகிய காலை பொழுது. கீழ்வானில் ஆதவன் தன்னுடைய கிரணங்களை மெல்ல படரவிட்டுக்கொண்டிருந்தான்.
'கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்...'
என்று எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்கள் பாடிய வெங்கடேச சுப்ரபாதம் ஹாலிலுள்ள தொலைக்காட்சியில் ஒலித்துக்கொண்டிப்பது அவளுடைய செவியில் விழுந்தது. கண்கள் மூடியவண்ணம் தன் வலதுகையை நெஞ்சில் வைத்து, 'இறைவா! என்னை எப்போதும் நல்ல வழியில் நடத்திச் செல்வாயாக' என்று வணங்கி உள்ளங்கைகளை தேய்த்து கண்களில் ஒற்றிக்கொண்டு தாமரை மலர்போன்ற தன் நயனங்களை மெல்லத் திறந்தாள் சங்கமித்ரா.
பின் தன்னுடைய படுக்கையிலிருந்தவாறே பூமாதேவியை கைகளால் தொட்டுவணங்கி செந்நிறப் பாதங்களை தரையில் பதித்தாள். பல்துலக்கி முகம் கழுவிவிட்டு தன்னுடைய காலை காப்பிக்காக சமையலறைக்குச் சென்றாள். அவள் வருவது தெரிந்ததும் அதுவரையில் கேட்டுக்கொண்டிருந்த பேச்சுச்சத்தம் அப்படியே நின்றது.
அங்கு நின்றுகொண்டிருந்த தன்னுடைய தந்தை தங்கராஜிற்கும் தாய் வனஜாவிற்கும் காலைவணக்கத்தை தெரிவித்தவள் காப்பி கோப்பையை தாயிடமிருந்து வாங்கிக்கொண்டு ஹாலிலுள்ள சோஃவில் அமர்ந்து மிடறுகளாக அருந்தத்துவங்கினாள். அப்போது சமையலறையில் மீண்டும் பேச்சுச்சத்தம் கேட்க ஆரம்பித்தது.
"அஞ்சு வருஷத்துக்கு முன்னால இன்னைக்கு நம்ம மித்ராவுக்கு கல்யாணம் முடிஞ்சிருக்கும்" என்று அவளுடைய அன்னை வனஜா சோகத்துடன் கூறவும் மித்ராவின் கண்கள் தாமாகவே எதிரே உள்ள கண்ணன் புகைப்படம் உள்ள நாட்காட்டியின் பக்கம் சென்றது. அதில் ஜூன் ஏழு என்று இருப்பதைக் கண்டதும் அவளுடைய மனம் ஐந்து வருடங்களுக்கு முன் பயணித்தது.
மணமேடையில் கழுத்தில் மாலையும் கண்களில் கண்ணீருமாக நின்றது நினைவிற்கு வந்தது. நிகழ்காலத்திற்கு வந்தவள் தன் கையால் கன்னத்தை தொட்டபோதுதான் அவள் கண்களிலிருந்த கண்ணீர் கன்னத்தை நனைத்திருப்பதை உணர்ந்தாள்.
சமையலறையில் தாயின் பேச்சுச்சத்தம் இன்னும் கேட்டுக்கொண்டுதான் இருந்தது. கண்ணீரை துடைத்துக்கொண்டு மீண்டும் தன் கவனத்தை அங்கு செலுத்தினாள். "என் பிள்ள வாழ்க்கை இப்படியா ஆகணும்?" என்று அவளுடைய தாய் ஆற்றாமையால் புலம்பிக்கொண்டிருப்பதைக் கேட்டாள். ஐந்து ஆண்டுகள் கடந்தும் தாயின் வேதனை சிறிதும் குறையவில்லை என்பதை உணர்ந்தவள் தன் சோகத்தை மறைத்துக் கொண்டு மீண்டும் சமயலறைக்குச் சென்றாள்.
தன் பெற்றோரை அழைத்து ஹாலிலுள்ள சோஃவில் அமரச்செய்தாள். அவர்களின் முன் மண்டியிட்டு இருவரின் கைகளைப் பற்றிக்கொண்டு, "நீங்க ரெண்டுபேரும் இன்னும் அத மறக்கலையா? முடிஞ்ச விஷயத்தப்பத்தி பேசுறதுல எந்த பிரயோஜனமும் இல்ல. அத யாராலும் மாத்த முடியாது; வேதனையும், வலியும் மட்டும் தான் மிஞ்சும். இப்படி உங்கள பார்க்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அதனால இனிமேல் பழச மறந்துட்டு நாம எல்லாரும் சந்தோஷமா இருப்போம். சரியா?" என்று கேட்பதைப் பார்த்ததும் அவள் தாய் கண்களிலிருந்து நீர் பெருகியது.
"ஆனாலும் உன் வாழ்க்கைல இப்படி நடந்திருக்க கூடாது மித்ரா" என்று தன் வருத்தத்தை மீண்டும் வெளிப்படுத்த அவளோ, "அம்மா யார் வாழ்க்கைல எப்போ என்ன நடக்கும்னு சொல்லமுடியாது. ஆனா நடக்குறது எல்லாமே நல்லதுக்குதான்…வருத்தப்படாதீங்க" என்று கூறி தாயைத் தேற்றினாள்.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த மித்ராவின் தந்தை தங்கராஜன் தன் மனைவி வனஜாவின் கண்ணீரை துடைத்துவிட்டு, "இனிமேல் யாரும் பழச நினைக்கவும் கூடாது, அழவும் கூடாது. சந்தோஷம் மட்டும் தான் இருக்கணும்" என்று கட்டளையிடுவதுபோல் நகைச்சுவையாகக் கூறவும் பெண்கள் இருவரும் புன்னகையுடன் ஒப்புக்கொண்டனர். சமையல் வேலை இருப்பதாகக் கூறிவிட்டு வனஜா சென்றுவிட மித்ராவிடம் அவளுடைய தந்தை, “மித்து இன்னைக்கு ரெண்டு இன்டர்வியூ இருக்குன்னு சொன்னியே. எங்க?" என்று விசாரித்தவாறே தன்னுடைய மகளுடன் சோஃவில் சேர்ந்து அமர்ந்தார்.
அவள் இரண்டு பள்ளிகளின் பெயர்களைக் கூறினாள். சிறு அமைதிக்குப் பின், "மதுரைல அந்த ஸ்கூல்ல வேல பார்த்தமாதிரியே இருந்திருக்கலாம். ஒரு மாசமா இங்க சென்னைல வேல தேடி அலையுற, ஆனா ஒரு வேலகூட கிடைக்கல. ஏன் அந்த வேலைய விட்டுட்ட?" என்று தந்தை மகளைப் பார்த்துக் கேட்டார்.
அதற்கு, "அப்பா, எனக்கு நீங்க ரெண்டுபேரும்தான் உலகம். லோ-சுகர்னால மயக்கமாகி கீழவிழுந்துட்டீங்கன்னு கேள்விப்பட்டதும் நான் எப்படி பதரீட்டேன் தெரியுமா? அதனால உங்கள பத்திரமா பாத்துக்க இங்க வந்திருக்கேன். கவல படாதீங்கப்பா, நான் கோல்ட் மெடலிஸ்ட். எனக்காக ஒரு வேல கண்டிப்பா காத்திருக்கும். சோ பீ ஸ்ட்ராங், பீ பாசிடிவ்" என்று நம்பிக்கையுடன் கூற தங்கராஜன் புன்னகை புரிந்தார்.
நேர்காணலுக்காக தயாராகியவள் தன்னுடைய தந்தையிடம் ஆசிர்வாதங்களைப் பெற்றாள். பின் தாயைப் பார்ப்பதற்காக சென்றபோது, “இன்னைக்கு இன்டர்வியூ இருக்குன்னு சொன்னீல. ஆல் தி பெஸ்ட்" என்று வனஜா தன் மகளை வாழ்த்த, மித்ரா தன் தாயை கட்டியணைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டாள்.
மாலை ஐந்துமணிக்கு சோர்வு படிந்த முகத்துடன் மித்ரா வீட்டினுள் நுழைந்தாள். தன் அறைக்குச் சென்று முகம் கைகால்களை அலம்பிவிட்டு மீண்டும் ஹாலிலுள்ள சோபாவில் அமர்ந்தாள். அதே சமயம் அவளுடைய தந்தை தங்கராஜனும் அலுவலக வேலையை முடித்துவிட்டு வீடுதிரும்பினார். மகள் சோர்வுடன் அமர்ந்திருப்பதைக் காணவும், "என்னடா ரொம்ப அலைச்சலா?" என்று வினவ மித்ராவோ 'ஆம்' என்று மேலும் கீழுமாக தன் தலையை அசைத்தாள்.
அப்போது தன் கையில் மூன்று காப்பி கோப்பைகளைக் கொண்ட ட்ரேயை ஏந்தியவாறு வனஜாவும் அங்கு வந்தார். ஒவ்வொருவருக்குமான அந்த கோப்பைகளை கொடுத்துவிட்டு தானும் அந்த பேச்சை கவனிக்கத்துவங்கினார். "இன்டர்வியூ என்ன ஆச்சு?" என்று தந்தை வினவ அதற்கு, "இங்க பணத்துக்கும் சிபாரிசுக்கும் இருக்குற மதிப்பு படிப்புக்கும், திறமைக்கும் இல்லவே இல்லப்பா" என்று சிறிது கோபாம்கலந்த வருத்தத்துடன் கூறினாள்.
அவளுடைய மனநிலையை நன்கு உணர்ந்த தங்கராஜன் ஒரு புன்முறுவலுடன், "மித்ரா, உன் திறமைக்கும் புத்திசாலித்தனத்துக்கும் நல்ல வேல கண்டிப்பா கிடைக்கும்" என்று பெருமிதத்துடன் கூறவும் மகள் சாந்தமடைந்தாள்.
இரவு உணவுமுடிந்ததும் மித்ரா இணையதளத்தில் வேலை தேடும் வேட்டையில் ஈடுபட்டாள். பலமணி நேரத்திற்குப்பிறகு ஒரு விளம்பரம் அவளுடைய கருத்தை ஈர்த்தது. 'வசுந்தரா இன்டர்நேஷனல் ஸ்கூல்' என்ற பள்ளியிலிருந்து 'திறமையான ஆசிரியர்கள் தேவை' என்றும் நாளை மறுநாள் நேர்காணல் நடக்கவிருப்பதாகவும் பெரிதாக விளம்பரம் செய்திருந்தனர். 'திறமையான ஆசிரியர்கள்' என்ற வார்த்தைகளைக் கண்டதும் அங்கு செல்ல தீர்மானித்தாள்.
அப்போது அவளுடைய கைபேசிக்கு அழைப்பு வர யாரென்று பாராமலேயே அதை எடுத்து காதில் வைத்தாள். "மேடம் எங்களை எல்லாம் மறந்துட்டீங்க போல?" என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது. யாரென தெரிந்ததும் மித்ரா ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தில், "பானுமதி!" என்று அவளுடைய பெயரைக் அழைக்க மற்றவளோ, "ஓ! என் பெயர்லாம் நியாபகம் இருக்கா?" என்று பொய்கோபத்துடன் கேட்டாள்.
அதற்கு, "நான் சென்னைக்கு வந்தத சொல்லணும்னுதான் இருந்தேன் ஆனா.." என்று பேசியவளை இடைமறித்து, "சரி அதெல்லாம் விடு. நாளைக்கு பார்க் ஹோட்டல் வந்துரு. உன்ன பாத்தே ரொம்ப நாளாச்சி. உன்கூட நிறைய பேசவேண்டியதிருக்கு. ஒழுங்கா வந்துரு" என்று கூறவும் மித்ரா சம்மதித்தாள்.
திட்டமிட்டபடியே தோழியர்கள் இருவரும் பார்க் ஹோட்டலில் சந்தித்தனர். அவள் இளம் மஞ்சள் நிறத்தில் முக்கால் கை சுடிதார் அணிந்திருக்க ஒரு தோள்பட்டையிலிருந்து நீலநிற துப்பட்டா மிதந்தது. இடைவரை இருந்த கார்மேகக் கூந்தல் அவளுடைய நடைக்கேற்றாற்போல் இடமும் வலமுமாக அசைந்தது. காதருகே இருந்த சுருள் கேசங்கள் மாம்பழநிறக் கன்னங்களை அவ்வப்போது வருடின.
பிறை நெற்றியில் வில்லாக வளைந்திருக்கும் இரு புருவங்களுக்கு மத்தியில் வெண்ணிற சாந்துப் பொட்டு வைத்திருந்தாள். அளவாக மைதீட்டப்பட்ட கண்களும், புன்னகை புரிந்தவாறே இதழ்களும் இருந்தது. தான் அணிந்திருந்த உடைக்கு ஏற்றாற்போல் காதுகளில் அழகான ஜிமிக்கியை அணிந்திருந்தாள். தன்னுடைய கைப்பையை ஒரு தோள் சுமக்க நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையுடன் அந்த ஹோட்டலினுள் நுழைந்தாள்.
உணவு உண்ணும் பகுதிக்கு வந்தவளின் கண்கள் பானுவைத் தேடின. வெகுநாட்கள் கழித்து தன் தோழியை கண்டதால் பானு வேகமாக இருக்கையிலிருந்து எழுந்து வந்து மித்ராவை அணைத்துக்கொண்டாள். பின் தங்களுடைய இருக்கையில் அமர்ந்து ஐந்து வருட நிகழ்வுகளை பேச ஆரம்பித்தனர்.
தோழிகள் இருவரும் தாங்கள் ஆர்டர் செய்த உணவை உண்டவாறே பேசி சிரித்துக்கொண்டிருந்தனர். அப்போது தவறுதலாக பானுவின்மீது அவள் வைத்திருந்த பனிக்கூழ் சிந்தியது. அதை சுத்தம் செய்வதற்காக கைகழுவும் இடத்தை நோக்கிச் சென்றாள். வெகு நேரம் ஆகியும் பானு வராத காரணத்தினால் மித்ரா அவளைத் தேடிச் சென்றாள்.
அது மிகப்பெரிய ஹோட்டல் என்பதால் பானுவைத் தேட சற்று நேரம் பிடித்தது. இறுதியில் பானுவைக் கண்டதும் மித்ரா அவளை நோக்கி விரைந்தாள். "இவ்வளவு நேரமாடி உனக்காக வெயிட் பண்றது? நான் பேசிக்கிட்டே இருக்கேன் நீ எதுவும் பேசாம எங்கயோ பாக்குற?" என்று தானும் அவ்விடத்தை நோக்கியபோது அவளுடைய கண்கள் அதிர்ச்சியால் விரிந்தன.
அன்று தன்னுடைய கடைசி சவாரியை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த அந்த ஓட்டுனர் மழையையும் பொருட்படுத்தாமல் மின்னலென வாகனத்தை ஓட்டினார். அப்போது சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருந்த பெண் வாகனத்தை நிறுத்துமாறு தன் கையை நீட்டி சைகை செய்தாள். அவளைக் கண்டதும் அந்த ஓட்டுனருக்கு குழப்பமும், பயமும் உண்டாயிற்று. எனினும் அவளுடைய நிலையைக் கண்டு அவளருகே நிறுத்தினார்.
அவள் ஒரு நிமிடம்கூட தாமதிக்காமல் அந்த வண்டியினுள் ஏறினாள். வாகனம் மீண்டும் பயணிக்க அந்த ஓட்டுனர், "நீங்க எங்க போகணும் மேடம்?" என்று கேட்க அவள் ஒரு பிரபலமான நட்சத்திர விடுதி ஒன்றிற்கு செல்லவேண்டும் என்று சுருக்கமாக பதிலளித்தாள். அவளுடைய செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் அவர் முன்கண்ணாடியின் மூலமாக கவனித்துக்கொண்டே இருந்தார்.
அவளுடைய கைகால்கள் பதற்றத்தால் நடுங்கின. அந்த டாக்சியின் இரு பக்கங்களிலும் உள்ள கதவுக் கண்ணாடிகளை வேகமாக ஏற்றினாள். அவள் கண்ணாடியின் வழியாக வெளியே பார்த்துக்கொண்டே வந்தாள். அப்போது தற்செயலாக அவளுடைய பார்வை முன்கண்ணாடியின் பக்கம் சென்றது. அந்த ஓட்டுனர் தன்னை கவனிக்கிறார் என்பதை அறிந்து பதற்றத்தைக் குறைத்துக்கொண்டு இயல்பாக அமர்ந்தாள். பின் தன்னுடைய கைபேசியில் எதையோ செய்துகொண்டிருந்தாள்.
நட்சத்திர விடுதி வந்ததும் அவசர அவசரமாக டாக்சியிலிருந்து இறங்கினாள். தன் கைக்கு வந்த பணத்தை அவரிடம் கொடுத்துவிட்டு அந்த ஹோட்டலினுள் நுழைந்தவள் தன் அறைக்குச் செல்ல அந்த லிஃடினுள் புகுந்தாள். அறை இருக்கும் தளத்தின் எண் பொறிக்கப்பட்ட அந்த பொன்னிற பொத்தானை பலமுறை வேகமாக அழுத்தினாள். அடிக்கடி அவளுடைய கண்கள் அந்த லிஃடின் வெளியே பதற்றத்துடன் நோக்கியது. சிறிதுநேரத்தில் அந்த லிஃடின் உலோக கதவுகள் தாமாக மூடிக்கொண்டன.
அவள் தன் தளத்தை அடைந்ததும் விரைந்து வெளியேறி தன்னுடைய அறையை நோக்கிச் சென்று கதவை தாழிட்டாள். உள்ளே வந்தவள் செய்வதறியாது கைகளைப் பிசைந்தவாறு அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள். அந்த குளிர்ந்த அறையிலும் அவளுக்கு வியர்த்துக் கொட்டியது.
ஏதோ தோன்ற விரைந்து லக்கேஜை எடுத்து தன்னுடைய துணிமணிகளை அதனுள் அவசர அவசரமாக நிரப்பத் துவங்கினாள். அப்போது அந்த அறையின் அழைப்புமணி ஒலித்தது. அதைக் கேட்டவுடன் அவளுடைய நெஞ்சத்தில் குளிர் பரவியது, இதயம் இயல்பைவிட பலமடங்கு வேகமாக துடித்தது.
அந்த கதவையே வெறித்தவண்ணம் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள். அழைப்புமணி மூன்றுமுறை ஒலித்துவிட்டு பின் நின்றது. அப்போது அவள் பயத்துடன் மெதுவாக கதவை நோக்கி அடியெடுத்து வைத்தாள். கைப்பிடியை மெல்ல திருகி கதவைத் திறந்தபோது அவளுடைய கண்கள் அதிர்ச்சியால் விரிந்தன.
ஒரு வாரம் கழிந்தது. அன்று காலைப் பொழுதில் அந்த பெரிய நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த வாடிக்கையாளர்கள் சிலர் வரவேற்புப் பகுதிக்குச் சென்று மானேஜரை அழைக்குமாறு கோபத்துடன் கத்திக்கொண்டிருந்தனர். வரவேற்பில் இருந்த பெண், மானேஜரை அழைக்கவும் அங்கு விரைந்து வந்தவர், "எக்ஸ்கியூஸ்மீ லேடீஸ் அண்ட் ஜென்டில்மென்...ஐ ஆம் தி மேனேஜர் ஃப் திஸ் ஹோட்டல். எனி பிராப்லம்" என்று அங்கு இருந்தவர்களைப் பார்த்துக் கேட்டார்.
அப்போது கூட்டத்திலிருந்த ஒருவர், "உங்க சர்வீசஸ் இவ்வளவு மட்டமா இருக்கும்னு நான் நினைச்சி பாக்கல. இது தான் நீங்க உங்க கஸ்டமர்ஸ பாத்துக்குற லட்சணமா? இப்படிப்பட்ட மோசமான சர்வீஸ நான் எந்த ஹோட்டல்லயும் பார்த்ததில்ல..." என்று சரமாரியாக மானேஜரை திட்டினார். அவருடைய வசைகளை வாங்கியபோதும் அந்த மானேஜர் தன் முகத்தில் எந்தஒரு சலனமும் காட்டாமல், "ஐ அம் ரியல்லி சாரி ஃர் தி இன்கன்வீணியன்ஸ் சார். என்ன பிரச்சனன்னு சொன்னீங்கன்னா அத உடனே நாங்க சரி செஞ்சிடுவோம்" என்று பதிலுரைத்தார்.
உடனே, "இன்னைக்கு காலைல நான் ஃஸ் வாஷ் பண்ணும்போது தண்ணி ரொம்பவே பேட் ஸ்மெல் அடிச்சது. அத சீக்கிரமா பாத்து சரிபண்ணுங்க" என்று எரிச்சலுடன் கூறவும், "டோன்ட் வொரி சார். நீங்க உங்க ரூம்க்கு போங்க, அத நாங்க இப்பவே பாத்துடறோம்" என்று கூறவும் அங்கிருந்த அனைவரும் கலைந்து தங்களுடைய அறைக்குச் சென்றனர்.
அந்த மானேஜர் தனக்கு கீழ் பணிபுரியும் இருவரை என்னவென்று பார்ப்பதற்காக தன்னுடன் அழைத்துச் சென்றார். அப்போது, "ராஜு, இந்த பிரச்சனை எப்பயிருந்து இருக்கு?" என்று அதிகாரக் குரலில் கேட்டவுடன் அவன், "எங்களுக்கே, இப்ப தான் சார் தெரியும்.." என்று தயங்கியவாறே கூறவும் அவனை ஓரக்கண்ணால் முறைத்தார். மூவரும் அந்த ஹோட்டலின் மேற்கூரையை அடைந்தனர்.
அந்த பறந்து விரிந்த மொட்டை மாடியின் ஒரு பகுதியில் பத்திற்கு பத்து அடி உருளை வடிவத்தில் நான்கு தொட்டிகள் இருந்தன. அதிலிருந்து சில அறைகளின் பயன்பாட்டிற்கு நீர் சேகரிக்கப்பட்டிருந்தது. மானேஜர் சைகை செய்ய ராஜு ஒவ்வொரு தொட்டியாக ஏறிப்பார்த்தான். அப்போது ஒரு தொட்டியை திறந்தபோது அவன், 'ஆ' என அலறினான். ஏனென்றால் அதில் பாதி அழுகிய நிலையில் சடலம் ஒன்று மிதந்தது. அது வேறுயாருமல்ல அன்று பதற்றத்துடன் டாக்சியில் ஏறிய அதே பெண்.
வருடங்கள் சில உருண்டோடின. அழகிய காலை பொழுது. கீழ்வானில் ஆதவன் தன்னுடைய கிரணங்களை மெல்ல படரவிட்டுக்கொண்டிருந்தான்.
'கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்...'
என்று எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்கள் பாடிய வெங்கடேச சுப்ரபாதம் ஹாலிலுள்ள தொலைக்காட்சியில் ஒலித்துக்கொண்டிப்பது அவளுடைய செவியில் விழுந்தது. கண்கள் மூடியவண்ணம் தன் வலதுகையை நெஞ்சில் வைத்து, 'இறைவா! என்னை எப்போதும் நல்ல வழியில் நடத்திச் செல்வாயாக' என்று வணங்கி உள்ளங்கைகளை தேய்த்து கண்களில் ஒற்றிக்கொண்டு தாமரை மலர்போன்ற தன் நயனங்களை மெல்லத் திறந்தாள் சங்கமித்ரா.
பின் தன்னுடைய படுக்கையிலிருந்தவாறே பூமாதேவியை கைகளால் தொட்டுவணங்கி செந்நிறப் பாதங்களை தரையில் பதித்தாள். பல்துலக்கி முகம் கழுவிவிட்டு தன்னுடைய காலை காப்பிக்காக சமையலறைக்குச் சென்றாள். அவள் வருவது தெரிந்ததும் அதுவரையில் கேட்டுக்கொண்டிருந்த பேச்சுச்சத்தம் அப்படியே நின்றது.
அங்கு நின்றுகொண்டிருந்த தன்னுடைய தந்தை தங்கராஜிற்கும் தாய் வனஜாவிற்கும் காலைவணக்கத்தை தெரிவித்தவள் காப்பி கோப்பையை தாயிடமிருந்து வாங்கிக்கொண்டு ஹாலிலுள்ள சோஃவில் அமர்ந்து மிடறுகளாக அருந்தத்துவங்கினாள். அப்போது சமையலறையில் மீண்டும் பேச்சுச்சத்தம் கேட்க ஆரம்பித்தது.
"அஞ்சு வருஷத்துக்கு முன்னால இன்னைக்கு நம்ம மித்ராவுக்கு கல்யாணம் முடிஞ்சிருக்கும்" என்று அவளுடைய அன்னை வனஜா சோகத்துடன் கூறவும் மித்ராவின் கண்கள் தாமாகவே எதிரே உள்ள கண்ணன் புகைப்படம் உள்ள நாட்காட்டியின் பக்கம் சென்றது. அதில் ஜூன் ஏழு என்று இருப்பதைக் கண்டதும் அவளுடைய மனம் ஐந்து வருடங்களுக்கு முன் பயணித்தது.
மணமேடையில் கழுத்தில் மாலையும் கண்களில் கண்ணீருமாக நின்றது நினைவிற்கு வந்தது. நிகழ்காலத்திற்கு வந்தவள் தன் கையால் கன்னத்தை தொட்டபோதுதான் அவள் கண்களிலிருந்த கண்ணீர் கன்னத்தை நனைத்திருப்பதை உணர்ந்தாள்.
சமையலறையில் தாயின் பேச்சுச்சத்தம் இன்னும் கேட்டுக்கொண்டுதான் இருந்தது. கண்ணீரை துடைத்துக்கொண்டு மீண்டும் தன் கவனத்தை அங்கு செலுத்தினாள். "என் பிள்ள வாழ்க்கை இப்படியா ஆகணும்?" என்று அவளுடைய தாய் ஆற்றாமையால் புலம்பிக்கொண்டிருப்பதைக் கேட்டாள். ஐந்து ஆண்டுகள் கடந்தும் தாயின் வேதனை சிறிதும் குறையவில்லை என்பதை உணர்ந்தவள் தன் சோகத்தை மறைத்துக் கொண்டு மீண்டும் சமயலறைக்குச் சென்றாள்.
தன் பெற்றோரை அழைத்து ஹாலிலுள்ள சோஃவில் அமரச்செய்தாள். அவர்களின் முன் மண்டியிட்டு இருவரின் கைகளைப் பற்றிக்கொண்டு, "நீங்க ரெண்டுபேரும் இன்னும் அத மறக்கலையா? முடிஞ்ச விஷயத்தப்பத்தி பேசுறதுல எந்த பிரயோஜனமும் இல்ல. அத யாராலும் மாத்த முடியாது; வேதனையும், வலியும் மட்டும் தான் மிஞ்சும். இப்படி உங்கள பார்க்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அதனால இனிமேல் பழச மறந்துட்டு நாம எல்லாரும் சந்தோஷமா இருப்போம். சரியா?" என்று கேட்பதைப் பார்த்ததும் அவள் தாய் கண்களிலிருந்து நீர் பெருகியது.
"ஆனாலும் உன் வாழ்க்கைல இப்படி நடந்திருக்க கூடாது மித்ரா" என்று தன் வருத்தத்தை மீண்டும் வெளிப்படுத்த அவளோ, "அம்மா யார் வாழ்க்கைல எப்போ என்ன நடக்கும்னு சொல்லமுடியாது. ஆனா நடக்குறது எல்லாமே நல்லதுக்குதான்…வருத்தப்படாதீங்க" என்று கூறி தாயைத் தேற்றினாள்.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த மித்ராவின் தந்தை தங்கராஜன் தன் மனைவி வனஜாவின் கண்ணீரை துடைத்துவிட்டு, "இனிமேல் யாரும் பழச நினைக்கவும் கூடாது, அழவும் கூடாது. சந்தோஷம் மட்டும் தான் இருக்கணும்" என்று கட்டளையிடுவதுபோல் நகைச்சுவையாகக் கூறவும் பெண்கள் இருவரும் புன்னகையுடன் ஒப்புக்கொண்டனர். சமையல் வேலை இருப்பதாகக் கூறிவிட்டு வனஜா சென்றுவிட மித்ராவிடம் அவளுடைய தந்தை, “மித்து இன்னைக்கு ரெண்டு இன்டர்வியூ இருக்குன்னு சொன்னியே. எங்க?" என்று விசாரித்தவாறே தன்னுடைய மகளுடன் சோஃவில் சேர்ந்து அமர்ந்தார்.
அவள் இரண்டு பள்ளிகளின் பெயர்களைக் கூறினாள். சிறு அமைதிக்குப் பின், "மதுரைல அந்த ஸ்கூல்ல வேல பார்த்தமாதிரியே இருந்திருக்கலாம். ஒரு மாசமா இங்க சென்னைல வேல தேடி அலையுற, ஆனா ஒரு வேலகூட கிடைக்கல. ஏன் அந்த வேலைய விட்டுட்ட?" என்று தந்தை மகளைப் பார்த்துக் கேட்டார்.
அதற்கு, "அப்பா, எனக்கு நீங்க ரெண்டுபேரும்தான் உலகம். லோ-சுகர்னால மயக்கமாகி கீழவிழுந்துட்டீங்கன்னு கேள்விப்பட்டதும் நான் எப்படி பதரீட்டேன் தெரியுமா? அதனால உங்கள பத்திரமா பாத்துக்க இங்க வந்திருக்கேன். கவல படாதீங்கப்பா, நான் கோல்ட் மெடலிஸ்ட். எனக்காக ஒரு வேல கண்டிப்பா காத்திருக்கும். சோ பீ ஸ்ட்ராங், பீ பாசிடிவ்" என்று நம்பிக்கையுடன் கூற தங்கராஜன் புன்னகை புரிந்தார்.
நேர்காணலுக்காக தயாராகியவள் தன்னுடைய தந்தையிடம் ஆசிர்வாதங்களைப் பெற்றாள். பின் தாயைப் பார்ப்பதற்காக சென்றபோது, “இன்னைக்கு இன்டர்வியூ இருக்குன்னு சொன்னீல. ஆல் தி பெஸ்ட்" என்று வனஜா தன் மகளை வாழ்த்த, மித்ரா தன் தாயை கட்டியணைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டாள்.
மாலை ஐந்துமணிக்கு சோர்வு படிந்த முகத்துடன் மித்ரா வீட்டினுள் நுழைந்தாள். தன் அறைக்குச் சென்று முகம் கைகால்களை அலம்பிவிட்டு மீண்டும் ஹாலிலுள்ள சோபாவில் அமர்ந்தாள். அதே சமயம் அவளுடைய தந்தை தங்கராஜனும் அலுவலக வேலையை முடித்துவிட்டு வீடுதிரும்பினார். மகள் சோர்வுடன் அமர்ந்திருப்பதைக் காணவும், "என்னடா ரொம்ப அலைச்சலா?" என்று வினவ மித்ராவோ 'ஆம்' என்று மேலும் கீழுமாக தன் தலையை அசைத்தாள்.
அப்போது தன் கையில் மூன்று காப்பி கோப்பைகளைக் கொண்ட ட்ரேயை ஏந்தியவாறு வனஜாவும் அங்கு வந்தார். ஒவ்வொருவருக்குமான அந்த கோப்பைகளை கொடுத்துவிட்டு தானும் அந்த பேச்சை கவனிக்கத்துவங்கினார். "இன்டர்வியூ என்ன ஆச்சு?" என்று தந்தை வினவ அதற்கு, "இங்க பணத்துக்கும் சிபாரிசுக்கும் இருக்குற மதிப்பு படிப்புக்கும், திறமைக்கும் இல்லவே இல்லப்பா" என்று சிறிது கோபாம்கலந்த வருத்தத்துடன் கூறினாள்.
அவளுடைய மனநிலையை நன்கு உணர்ந்த தங்கராஜன் ஒரு புன்முறுவலுடன், "மித்ரா, உன் திறமைக்கும் புத்திசாலித்தனத்துக்கும் நல்ல வேல கண்டிப்பா கிடைக்கும்" என்று பெருமிதத்துடன் கூறவும் மகள் சாந்தமடைந்தாள்.
இரவு உணவுமுடிந்ததும் மித்ரா இணையதளத்தில் வேலை தேடும் வேட்டையில் ஈடுபட்டாள். பலமணி நேரத்திற்குப்பிறகு ஒரு விளம்பரம் அவளுடைய கருத்தை ஈர்த்தது. 'வசுந்தரா இன்டர்நேஷனல் ஸ்கூல்' என்ற பள்ளியிலிருந்து 'திறமையான ஆசிரியர்கள் தேவை' என்றும் நாளை மறுநாள் நேர்காணல் நடக்கவிருப்பதாகவும் பெரிதாக விளம்பரம் செய்திருந்தனர். 'திறமையான ஆசிரியர்கள்' என்ற வார்த்தைகளைக் கண்டதும் அங்கு செல்ல தீர்மானித்தாள்.
அப்போது அவளுடைய கைபேசிக்கு அழைப்பு வர யாரென்று பாராமலேயே அதை எடுத்து காதில் வைத்தாள். "மேடம் எங்களை எல்லாம் மறந்துட்டீங்க போல?" என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது. யாரென தெரிந்ததும் மித்ரா ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தில், "பானுமதி!" என்று அவளுடைய பெயரைக் அழைக்க மற்றவளோ, "ஓ! என் பெயர்லாம் நியாபகம் இருக்கா?" என்று பொய்கோபத்துடன் கேட்டாள்.
அதற்கு, "நான் சென்னைக்கு வந்தத சொல்லணும்னுதான் இருந்தேன் ஆனா.." என்று பேசியவளை இடைமறித்து, "சரி அதெல்லாம் விடு. நாளைக்கு பார்க் ஹோட்டல் வந்துரு. உன்ன பாத்தே ரொம்ப நாளாச்சி. உன்கூட நிறைய பேசவேண்டியதிருக்கு. ஒழுங்கா வந்துரு" என்று கூறவும் மித்ரா சம்மதித்தாள்.
திட்டமிட்டபடியே தோழியர்கள் இருவரும் பார்க் ஹோட்டலில் சந்தித்தனர். அவள் இளம் மஞ்சள் நிறத்தில் முக்கால் கை சுடிதார் அணிந்திருக்க ஒரு தோள்பட்டையிலிருந்து நீலநிற துப்பட்டா மிதந்தது. இடைவரை இருந்த கார்மேகக் கூந்தல் அவளுடைய நடைக்கேற்றாற்போல் இடமும் வலமுமாக அசைந்தது. காதருகே இருந்த சுருள் கேசங்கள் மாம்பழநிறக் கன்னங்களை அவ்வப்போது வருடின.
பிறை நெற்றியில் வில்லாக வளைந்திருக்கும் இரு புருவங்களுக்கு மத்தியில் வெண்ணிற சாந்துப் பொட்டு வைத்திருந்தாள். அளவாக மைதீட்டப்பட்ட கண்களும், புன்னகை புரிந்தவாறே இதழ்களும் இருந்தது. தான் அணிந்திருந்த உடைக்கு ஏற்றாற்போல் காதுகளில் அழகான ஜிமிக்கியை அணிந்திருந்தாள். தன்னுடைய கைப்பையை ஒரு தோள் சுமக்க நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையுடன் அந்த ஹோட்டலினுள் நுழைந்தாள்.
உணவு உண்ணும் பகுதிக்கு வந்தவளின் கண்கள் பானுவைத் தேடின. வெகுநாட்கள் கழித்து தன் தோழியை கண்டதால் பானு வேகமாக இருக்கையிலிருந்து எழுந்து வந்து மித்ராவை அணைத்துக்கொண்டாள். பின் தங்களுடைய இருக்கையில் அமர்ந்து ஐந்து வருட நிகழ்வுகளை பேச ஆரம்பித்தனர்.
தோழிகள் இருவரும் தாங்கள் ஆர்டர் செய்த உணவை உண்டவாறே பேசி சிரித்துக்கொண்டிருந்தனர். அப்போது தவறுதலாக பானுவின்மீது அவள் வைத்திருந்த பனிக்கூழ் சிந்தியது. அதை சுத்தம் செய்வதற்காக கைகழுவும் இடத்தை நோக்கிச் சென்றாள். வெகு நேரம் ஆகியும் பானு வராத காரணத்தினால் மித்ரா அவளைத் தேடிச் சென்றாள்.
அது மிகப்பெரிய ஹோட்டல் என்பதால் பானுவைத் தேட சற்று நேரம் பிடித்தது. இறுதியில் பானுவைக் கண்டதும் மித்ரா அவளை நோக்கி விரைந்தாள். "இவ்வளவு நேரமாடி உனக்காக வெயிட் பண்றது? நான் பேசிக்கிட்டே இருக்கேன் நீ எதுவும் பேசாம எங்கயோ பாக்குற?" என்று தானும் அவ்விடத்தை நோக்கியபோது அவளுடைய கண்கள் அதிர்ச்சியால் விரிந்தன.
இனியவளே வருவாள்...
வாசகர்கள் தங்களுடைய கருத்துக்களை இங்கு பதிவிடவும்...
https://www.narumugainovels.com/threads/35498/
Last edited:


