எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

எனக்குள் வந்து வீழ்ந்தவளே (NM PART 2 VERSION) - கதை திரி

Status
Not open for further replies.

Shalini shalu

Moderator
அந்தச் சங்கிலிகளைப் பார்த்துக் கொண்டு இருந்தவள், விழிநீரைச் சுண்டி விட்டு, கையில் இருந்தவற்றைப் பெட்டியில் வைத்துப் பூட்டி விட்டுப், படுக்கையில் விழுந்து, உறக்கத்தை மேற்கொண்டாள் அகதா.

மௌனாவும் அன்னையுடன் உறங்கி விட்டாள்.

வீட்டிற்குப் போன, மஹதனும், அவனுடைய பெற்றோரும் தங்களது களைப்பை நீக்கிக் கொள்ளத் தூக்கத்தை நாடினர்.

🌸🌸🌸

அலாரம் அடித்ததும், எழுந்து,
எழுந்த அன்னபூரணி,

வெளியே வந்து கணவனை எழுப்பி, "என்னங்க! ஹாலுக்குப் போகனும்ல? நீங்களும் இங்கேயே குளிச்சிட்டு வந்துருங்க" என்று சிவமணியைக் குளிக்க அனுப்பினார்.

தன்னருகே குழந்தையாக உறங்கிக் கொண்டிருந்த மகளின் திருமணம் வைபவம் சிறிது நேரத்தில் நடக்கவிருப்பதால், சிறுநகையுடன்,
"மௌனா ம்மா! எழுந்திருடா!" என்று அவளது கேசத்தை நீவி விட்டவாறு மகளை எழுப்பினார் அன்னபூரணி.

"ம்மா…" என்று செல்லம் கொஞ்சினாள்.

"இன்னைக்கு உனக்குக் கல்யாணம் டி!" என்று அதட்டியவர், அவளை உலுக்கி எழுப்பி அமர வைத்தார்.

"கண்ணை மட்டும் திறந்துட்டேன்னா போதும் மா" என்று நன்றாக விழிகளைத் தேய்த்துக் கொண்டாள் மௌனா.

"குட்மார்னிங்!" என்று அறைக்குள்ளே நுழைந்தாள் அகதா.

"குட்மார்னிங் டா!* என்றவர்,

"பாரு! அகி எழுந்து வந்துட்டா!" என்று மகளிடம் கூறினார் அன்னபூரணி.

தூக்கக் கலக்கம் இன்னும் தன்னை விட்டு நீங்காத போதும், மெல்லக் கண்களைத் திறந்து, தோழியைப் பார்த்து,

"ஹாய் அகி!" என்றாள் மௌனா.

"ம்ம்… நீ தான் கல்யாணப் பொண்ணு ஞாபகம் இருக்கா?" என்று அவளைக் கிண்டல் செய்தாள் அகதா.

"அதெல்லாம் இருக்கு அகி" என அவளிடம் சினுங்கினாள்.

அப்போது அன்னபூரணியின் செல்பேசி ஒலி எழுப்பியது. கௌசல்யா தான் அழைக்கிறார் என்பதை அறிந்ததும்,

"சம்பந்தியம்மா கால் பண்றாங்க. அகி! நீ இவளைக் கிளம்ப வை. நான் பேசிட்டு வர்றேன்" என்று அகதாவிடம் கூறி விட்டு வெளியே வந்தார்.

"ஹலோ"

"ஹலோ சம்பந்தி! மௌனா கிளம்ப ஆரம்பிச்சாச்சா?" என்று கேட்டார் கௌசல்யா.

"ஹாங்! இதோ குளிக்கப் போயிருக்கா சம்பந்தி. இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லாரும் மஹாலுக்கு வந்துருவோம்" என்று அவர் கூறிய சமயம், குளியலறைக்குள் நுழைந்தாள் மௌனா.

அவளுடைய உடைமைகளைப் பையினுள் அடுக்கினாள் அகதா.

"இங்கே நாங்களும், மஹதனும் கிளம்பிட்டு இருக்கோம். நீங்க தயாராகிட்டுச் சொல்லுங்க. அப்படியே பிக்கப் பண்ணிட்டு, மண்டபத்துக்குப் போயிடலாம்" என்றுரைத்தார் கௌசல்யா.

"சரிங்க சம்பந்தி. சொல்றோம்" என்று கூறி அழைப்பைத் துண்டித்தார் அன்னபூரணி.

மஹதனின் இல்லத்திலோ, மூவரும் எப்போதோ தயாராகி இருந்தனர். அதனால் தான், அன்னபூரணிக்கு அழைத்து அங்கே இருந்த நிலவரத்தைக் கேட்டறிந்தார் கௌசல்யா.

இரவிலும் சரி, இப்போதும் சரி, மௌனாவிற்குக் குறுஞ்செய்தியோ, அழைப்போ விடுக்கவில்லை மஹதன்.

ஏனெனில், அவள் தன்னுடைய வீட்டினருடன் நேரம் செலவழிப்பது தற்போது இன்றியமையாததாகும். எனவே, திருமணத்தின் போது தான், தன்னவளைத், தன்னருகே வைத்துப் பார்க்கப் போகிறான் மஹதன்.

அவனும் குளித்து கேஷுவலாக உடையணிந்து மண்டபத்திற்கு வருவதாக திட்டம். அங்கே போய் மாப்பிள்ளைக்கான உடையை அணிந்து கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தான். ஆனால், மற்றவர்கள் எல்லாரும் வீட்டிலேயே தயாராகி விடுவார்கள்.

குர்தி மற்றும் கால்சராய் அணிந்திருந்தாள் மௌனா.

"முடியைக் க்ளிப் போட்டுக்கோ. ஈரம் அப்படியே இருக்குப் பாரு. அங்கப் போற வரைக்கும் காயட்டும். அப்பறம் டிரையர் யூஸ் பண்ணிக்கலாம்" என்றாள் அகதா.

அதேபோல் செய்த மௌனாவோ, அன்னையிடம் வந்து,"நான் ரெடி ம்மா!" எனக் கூறினாள்.

"உங்க அப்பா வரட்டும்" என்றார் அன்னபூரணி.

"வந்துட்டேன் பூரணி ம்மா" என்று அங்கே வந்தார் சிவமணி.

அனைவரும் தயாராகி இருப்பதைக் கௌசல்யாவிடம் தெரிவித்து விட்டார் அன்னபூரணி.

"அப்போ காரில் ஏறலாம் மா" என அவர்களுடன் மகிழுந்தில் ஏறினான் மஹதன்.

மௌனா மற்றும் அவளது மற்ற குடும்ப உறுப்பினர்களை ஏற்றிக் கொண்டு, மண்டபத்திற்குச் சென்றனர்.

"அவங்க கிளம்பியாச்சு அப்பா. நாம போவோமா?" என்று தந்தையிடம் கேட்டாள் முக்தா.

"சரிடா. என் பி.ஏ - வுக்குக் ஒரு கால் செய்து பேசிக்கிறேன். நீ முன்னாடி போறியா?" என்றார் நீலகண்டன்.

"சரிங்க அப்பா. நீங்க மெதுவாக வாங்க" எனக் கிளம்பி விட்டாள் முக்தா.

அவரது அலுவலகப் பணிகள் அவ்வளவு வேகத்தில் நடைபெறுகிறது. இப்போது தான் தொழில் இரு மடங்காக ஏறுமுகத்தில் போகிறது.

அதனால், அதை விடுத்து மற்றக் காரியங்களைச் செய்வதில் அவருக்குச் சற்று கடினமாக உள்ளது.

இப்போது கூட முக்கியமான வேலை ஒன்றை அவர் மேற்பார்வையிட வேண்டும். ஆனால், மஹதனின் திருமணத்திற்குச் செல்லவிருப்பதால்,
அதைக் காரியதரிசியிடம் கூறி, குறை வந்து விடக் கூடாதென எச்சரிக்கை விடுக்கவே அழைத்துப் பேசப் போகிறார் நீலகண்டன். ஏனெனில், தனது பார்ட்னர் திருமூர்த்தியின் பணியையும் சேர்த்து இவர் பார்த்துக் கொண்டிருக்கிறார். எனவே, நினைத்த நேரத்தில் அவரால் எங்கும் அசைய முடியவில்லை.

மகள் சென்றதும் காரியதரிசியிடம் செல்பேசியில் பேசினார் நீலகண்டன்.

"அப்பாவுக்கு ஆஃபீஸ் வொர்க். கால் பேசிட்டு வர்றேன்னு சொன்னார். சோ, நான், ஆன் தி வே!" என்று கிஷானிடம் கூறினாள் முக்தா.

"சரி. வா" என்றவன், காஞ்சியப்பனிடமும், சித்ரலேகாவிடமும் இதைப் பகிர்ந்தான்.

"வரட்டும் டா. நாமளும் அங்கே தான் போயிட்டு இருக்கோம்ல? அப்பறம் என்ன உனக்கு?" என்று அவனை அமைதியாக இருக்கச் சொன்னார் சித்ரலேகா.

முதலில் மஹதனும், மௌனாவும் தங்கள் குடும்பத்தினருடன் மண்டபத்திற்குள் பிரவேசித்தனர்.

அவர்களுக்காகத் தனித்தனியாகப் பெரிய அறைகளை ஒதுக்கிக் கொடுத்திருந்தார் அதன் உரிமையாளர்.

இன்றைய நாளில் வருகை தரும் அனைவரையும் பாரபட்சமின்றிக் கண்காணித்துப் பரிசோதிக்கச் சொல்லி தங்களது ஆட்களிடம் உத்தரவிட்டு இருந்தார்கள் மஹதனும், திருமூர்த்தியும்.

முக்கியப் பிரமுகர்கள் ஆனாலும், சொந்தங்கள் என்றாலும் இது தான் விதி.

சிகையலங்காரம், உடையலங்காரம் மற்றும் இவற்றை மேற்பார்வையிட என, ஐந்து பேர் மௌனாவைச் சூழ்ந்து இருந்தனர்.

அவர்களே எல்லாம் பார்த்துச் செய்து விடுவார்கள் தான், ஆனாலும் மௌனாவுடனேயே இருந்தாள் அகதா.

மணப்பெண்ணிற்கு இணையாகத், தன்னையும் அழகாகத் தயார் செய்து கொண்டு இருந்தான் மஹதன்.

இந்த முறை, அனைத்துச் செலவுகளும், பொறுப்புகளும் மணமகனின் தந்தை திருமூர்த்தியுடையது என்பதால், சிவமணி மற்றும் அன்னபூரணிக்குத் தங்களுடைய பெண்ணுடன் சிறிது நேரம் உரையாட வேண்டும் என்ற ஆவல் எழுந்தது.

ஆதலால், மௌனாவிற்கு அலங்காரம் தொடங்கியவுடன் சம்பந்தி வீட்டாரிடம் கூறி விட்டு அவளது அறையில் ஐக்கியமாகி விட்டனர் இருவரும்.

அவர்களுக்குப் பதிலாக, நண்பர்களுக்குள் இதைக் கூடச் செய்யவில்லை என்றால் எப்படி? என்று கிஷானின் பெற்றோரான, சித்ரலேகாவும், காஞ்சியப்பனும் மணமகனுடைய தாய், தந்தையுடன் மற்ற வேலைகளைப் பங்கு போட்டுக் கொள்ள வந்து விட்டனர்.

அவர்களுக்கு முன்னரே மண்டபத்தினுள் வந்த முக்தாவைத் தேடிய கிஷானுக்குச் செல்பேசி அழைப்பு வந்தது.

அதை எடுத்துப் பேசியவன், யாரிடமும் கூறாமல் வெளியேறி விட்டுத் தன் காரில் கிளம்பி விட்டான் கிஷான்.

- தொடரும்

ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸூன்னுப் பெருசா எழுதாமல், "நங்கையின் மற
வோன்" கதைக்கான இரண்டாவது பாகமாகத் தான், இந்தக் கதையை ஆரம்பிச்சேன். இன்னும் சில யூடியில் முடியப் போகுது ஃப்ரண்ட்ஸ். நன்றி 🙏

கதை முடிந்த பிறகு ஒரு வாரம் தளத்தில் இருக்கும்.
 

Shalini shalu

Moderator


'இவரை எங்கே காணோம்?' என்று கிஷானை முதலில் தேடியது முக்தா தான்.

அவளைப் பார்க்கத் தானே அவன் செல்ல இருந்தான்.

மண்டபத்தினுள் வந்த நீலகண்டன் மகளிடம் பேச வந்தார்.

"என்ன முகி ம்மா, இங்கே யாரைத் தேடுற?" என்றார் மகளிடம்.

"கிஷானைத் தான் தேடுறேன் ப்பா! என்னை வரச் சொல்லிட்டு அவர் காணாமல் போயிட்டார்" என அவனைத் துழாவியபடியே கூறினாள் முக்தா.

"மஹதன் கூட இருக்காரான்னுப் பார்த்தியா?" என்று கேட்டார் நீலகண்டன்.

"அங்கே அவர் இல்லப்பா" என்று பதிலளித்தாள் அவரது மகள்.

"அப்போ கால் செய்து பாரு" என்று கூறினார்.

"அதை மறந்துட்டேன் அப்பா. இதோ கால் பண்றேன்" எனத் தந்தையிடம் உரைத்து விட்டு, தன் அலைபேசியில் கிஷானுக்கு அழைத்தாள் முக்தா.

காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தவன், தன் செல்பேசியில் அழைப்பு வரும் சத்தம் கேட்டதும், அதை மகிழுந்தை ஓரமாக நிறுத்தி விட்டு, அழைப்பை எடுத்துப் பேசினான் கிஷான்.

"ஹலோ முகி"

"ஏங்க! மண்டபத்தில் தானே இருக்கீங்க? நான் உங்களைத் தேடிக்கிட்டு இருக்கேன். மஹதனோட ரூமிலும் பார்த்துட்டேன்" என அவனது குரலைக் கேட்டதும் தான், ஆசுவாசம் அடைந்தாள் முக்தா.

மகளின் வதனம் மலர்ந்ததும், அவளிடம்,'நீ பேசு, நான் செல்கிறேன்' என்று அவளிடம் சைகை செய்து விட்டுச் சென்றார் நீலகண்டன்.

"நான் அங்கே இல்லை முகி. காரில் போயிட்டு இருக்கேன்" என்றான் கிஷான்.

"என்னது? கொஞ்ச நேரத்தில் கல்யாணம் ங்க. மஹதன் உங்களை எதுவும் சொல்லலையா?" என்று பதட்டம் மற்றும் திடுக்கிடலுடன் கேட்டாள் முக்தா.

"எனக்குத் திடீர்னு ஒரு கால் வந்துருச்சு முகி. ஆனால், தாலி கட்டுற நேரத்துக்கு முன்னாடியே வந்துடுவேன். நீ அங்கே மேனஜ் பண்ணு ப்ளீஸ்!" என்று அவளிடம் கெஞ்சினான்.

"நான் மேனேஜ் செய்திடுவேன் ங்க. ஆனால், மஹதனும், எல்லாரும் உங்களை எதிர்பார்த்துட்டு இருப்பாங்களே! அவங்ககிட்ட எப்படி சொல்ல?" என்று வினவினாள் முக்தா.

"அவன் மேடை ஏறுறதுக்குள்ள நான் அங்கே இருப்பேன் முகி. அது வரைக்கும், சமாளி" என்று அவளிடம் கேட்டுக் கொண்டவன், தான் நினைத்த இடத்திற்கு வந்து சேர்ந்தான் கிஷான்.

"இன்னும் ஹோமம் தான் வளர்த்துட்டு இருக்கார் ஐயர்!" எனத் தன் மகனிடம் அறிவித்தார் திருமூர்த்தி.

"வெளியே கிஷான் இருந்தால் வர சொல்லுங்க அப்பா" என்றான் மஹதன்.

"அவனை நான் பார்க்கவே இல்லைடா" என்றார் தந்தை.

"முக்தாவைப் பார்த்துட்டு வர்றேன்னுப் போனான் ப்பா! அவங்க கூடப் பேசிட்டு இருக்கானோ?" என்று முக்தாவிற்கு அழைத்துக் கேட்டான் மஹதன்.

"ஹலோ மஹதன்! அவர் முக்கியமான விஷயமாகப் போயிருக்கார். ஆனால், கரெக்ட் டைமுக்கு வந்துடுவேன்னு சொன்னார்" என்று விளக்கம் அளித்தாள் முக்தா.

"என்னம்மா இப்படி பண்றான்?" என்று வாடிப் போனான் மஹதன்.

"ப்ளீஸ்! டோன்ட் வொர்ரி! அவர் வந்துருவார். நான் ப்ராமிஸ் பண்றேன்" என அவனிடம் கூறிச் சமாளித்தாள் முக்தா.

"ஓகே ம்மா" என்று அழைப்பை வைத்து விட்டான் மஹதன்.

முக்தாவுடன் பேசிக் கொண்டு இருந்ததால், அவனது அழைப்பைத் தவற விட்டிருந்தான் கிஷான். அது மட்டுமின்றி, அவன் அந்த இடத்தை அடைந்திருந்ததால், மஹதனுக்குக் கால் செய்ய முடியவில்லை.

"அவன் இங்கேயே இல்லை ப்பா. வேறு வேலையாக வெளியே போய்ட்டானாம்" என்று தந்தையிடம் சொன்னான் மஹதன்.

"அப்படி என்னடா அவனுக்கு வேலை?" என்று கடுப்புடன் கேட்டார் திருமூர்த்தி.

"முக்தாவுக்கும் அதைப் பத்தி அவன் சொல்லிட்டுப் போகலை ப்பா" என்றான் மகன்.

"சரி. நான் அவனோட அப்பா, ம்மா கிட்ட இன்ஃபார்ம் பண்றேன்" என்று கூறி வெளியேறினார்.

அடுத்த ஒரு சில நிமிடங்களில், கிஷானுடைய பெற்றோரிடம் விஷயம் தெரிவிக்கப்பட்டது.

"இவனை!!!" என்று பல்லைக் கடித்தார் காஞ்சியப்பன்.

"எங்கப் போயிருப்பான்?" என்று பதறினார் சித்ரலேகா.

நண்பனுடைய திருமணத்தை விட, என்ன முக்கியமான வேலை? என்று அவரும் யோசித்துப் பார்த்தார்.

அதற்குள், மணப்பெண்ணிற்கும், அவளது அறையிலிருந்த மற்றவர்களுக்கும் கிஷானைப் பற்றிச் சொல்லி விட்டாள் முக்தா.

"அவர் இல்லைன்னா எப்படி?" என்று வருத்தப்பட்டாள் மௌனா.

அவளுக்கு அலங்காரம் முடிந்திருக்க, இனி மஹதனைப் பார்க்கவும் செல்ல முடியாது. அவனிடம் செல்பேசியில் பேச,

அவனோ,"நான் இப்போ கால் செய்து கேட்கிறேன்" என மீண்டும் நண்பனுக்கு அழைத்துப் பார்த்தான் மஹதன்.

மறுமுனையில் இருந்து,"நண்பா! என்னடா?" என்று சாவதானமாகப் கேட்டவனை,

"டேய்! வீணாப் போன மடையா! எங்கடா போன?" என்று கோபத்தில் பொரிந்தான் மஹதன்.

"இங்கே ஒரு கேடுக் கெட்டவனைப் பார்க்க வந்தேன்டா! ரொம்ப பாவமான நிலைமையில் இருக்கானாம்!" என்றான் கிஷான்.

மஹதன்,"அந்த தீபக்கைப் பார்க்க, இன்னைக்குத் தான் போகனுமா?"

"இருடா. பார்த்துட்டுப் பறந்து வந்துடறேன்!" என அவனுக்குச் சமாதானம் சொல்லி வைத்தான் கிஷான்.

அதன் பிறகு, தீபக்கின் முன்னால் நின்று, ஏளனம் பொதிந்தப் பார்வையை வீசிக் கொண்டு இருந்தான்.

"ஹேய்!!!" என்று அவனைப் பார்த்த வெகுண்டு எழுந்து கத்தினான் தீபக்.

"உஸ்! ஏன்டா! இப்படி சரியாக சாப்பிடாமலேயே, இந்தளவுக்குத் தொண்டைக் கிழியக் கத்துற!" என்று அவனருகே சென்றான்.

"அப்படிக் கத்தினதால் தான், நீ இங்கே இப்படி வந்து நிற்கிற!" என்று வன்மத்துடன் கூறினான் தீபக்.

"ஓஹ்! பார்றா!" என்று நக்கல் அடித்தான் கிஷான்.

"என்னை என்னப் பண்றதாக இருக்கீங்க?" என்று வெளிப்படையாக வினவினான்.

"இப்போதைக்கு அதை சொல்ல எனக்கு நேரமில்லைடா! என்னோட ஃப்ரண்ட்டுக்குக் கல்யாணம். நீ செய்த அலப்பறையால் தான் இப்போ வர வேண்டியதாகப் போச்சு! சும்மாவே இருக்க மாட்டியாடா நீ?" என்று அவனிடம் கடுகடுவெனக் கேட்டான் கிஷான்.

"ஹாங்! அவனுக்கும், யாருக்கும் கல்யாணம் ப்பா?" என்று வேண்டுமென்றே அபத்தமானக் கேள்வியை மொழிந்தான் தீபக்.

"அடேய்!" என்று அவனது கழுத்தைப் பிடிக்கப் போனவன், தன் உடையை சரி செய்து கொண்டு, "உன்னோட பேச்செல்லாம் இப்படி இல்லைனா தான் ஆச்சரியம் டா! அதுக்காக, உன்னை அடிச்சு, என் கையையும், டிரெஸ்ஸையும் அழுக்காக்க எனக்கு விருப்பமில்லை! அதான், எதுவும் செய்யாமல் விட்றேன்! என் ஆளுங்களை, உன்னைக் கவனிக்கச் சொல்றேன்" என்று அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் கூறினான் கிஷான்.

"ப்ச்! சொல்லுடா! சொல்லு? நான் கேட்டதுக்குப் பதில் வேணும் எனக்கு?" என்று அவனை அவசரப்படுத்தினான் தீபக்.

"இப்படியே கத்திச் செத்துடாத! ஏதோ நீ உயிருக்குப் போராடிக்கிட்டு இருக்கன்னு நினைச்சு வந்துட்டேன். ச்சை! நான் மேரேஜ்ஜை அட்டெண்ட் பண்ணிட்டு வந்துப் பேசுறேன்" என்று அவனிடம் தெரிவித்து விட்டு வாயிலுக்குச் சென்றான் கிஷான்.

"டேய்!!!!" என்ற சத்தம் அவ்வறையையே உலுக்கியது.

"இவன் கத்திட்டுப் போகட்டும். இன்னைக்கு ஃபுல்லா எனக்குக் கால் பண்ணாதீங்க!" என்று வலியுறுத்தி விட்டுப் போனான் கிஷான்.

காரில் சீறிப் பாய்ந்து, மண்டபத்திற்கு வந்திருந்தான் கிஷான்.

அதற்குள் அவனது நெருங்கிய உறவுகள் அனைவரும் அவனைக் கோபத்தில் கழுவி ஊற்றி இருந்தனர்.

வாயிலிலேயே பிடித்து வைத்துக் கொண்டாள் முக்தா.

"உங்களை…" என அவள் திட்டத் தொடங்குவதற்குள்,

"சாரி முகி" என்று கன்னத்தில் முத்தமிட்டு மலையிறக்கி விட்டான் கிஷான்.

"என்னை இப்படி செஞ்சு சமாளிச்சிட்டீங்க! உள்ளே இருக்கிறவங்களுக்கு என்னப் பதில்?" என்று தன் கன்னம் சிவக்கக் கேட்டாள் முக்தா.

"அவங்களுக்கும் இதே தான் ட்ரீட்மெண்ட்!" எனக் கூறி விட்டு அவளுடனேயே ஹாலுக்குச் சென்றான்.

"டேய்!!" என்று கிஷானுடைய பெற்றோர், அவனை வறுத்தெடுக்க முனையும் போது, "என்ன இங்கே இருக்கீங்க? வாங்க, வாங்க! மஹதனை மேடைக்குக் கூப்பிட்ற நேரம்! வெட்டியாக நிற்கக் கூடாது" என்று அவர்களைப் பேச விடாமல், அழைத்துப் போய் விட்டான் கிஷான்.

"வந்துட்டீங்களா? மாப்பிள்ளையைப் போய்ப் பாருங்க" என்று அவனைக் கையோடு மணமகன் அறையை நோக்கி அனுப்பி வைத்தார் சிவமணி.

அன்னபூரணியின் மூலம், கிஷான் உள்ளே வந்ததை மௌனாவிடமும், மஹதனிடமும் தெரியப்படுத்தி விட்டார்கள்.

தன்னறைக்குள் வந்தவனைப் புரட்டியெடுக்கும் ஆத்திரம் வந்தாலும், மணமகன் அலங்காரத்தில் இருப்பதால், அவனது காதைப் பிடித்துத் திருகினான் மஹதன்.

"ஆஹ்…! விடுடா!" என்று வெளியே கேட்கும் அளவிற்குக் கத்திக் கொண்டிருந்தான் கிஷான்.

"அந்த நாய் செத்தால் என்ன? எப்படியோ போனால் உனக்கு என்னடா? அதுவும் என் கல்யாணத்தப்போ தான் போய்ப் பார்க்கனுமாடா?" என்று அவனைத் திட்டித் தீர்த்தான் மஹதன்.

"இருடா… நண்பா! அவன் கழுத்தை அறுத்துக்கிட்டுச் செத்துப் போகிறா மாதிரி, கத்துனானாம் டா! அதான், என் கஸ்டடியில் இருக்கான்னுப் பார்த்துட்டு வரப் போனேன்!" என்று விளக்கிக் கூறினான் கிஷான்.

"எப்படியோ போயிட்டுப் போறான்!" என்று அவன் முடிப்பதற்குள்,

"மஹத்! உன்னை மேடைக்குக் கூப்பிட்றாங்க" என்றவர்,

கிஷானைப் பார்த்ததும்,"கொஞ்ச நேரத்தில் பயமுறுத்திட்டியே ப்பா!" என்றார் கௌசல்யா.

"வாடா! மாப்பிள்ளைத் தோழா!" என அவனது கையை இறுகப் பற்றி வலிக்கச் செய்தான் மஹதன்.

"போதும் டா!" என்றவாறே நண்பனைக் கூட்டிச் சென்றான் கிஷான்.

மணப்பெண்ணை அழைக்கும் போது, தானும் உடன் போக வேண்டும் என, மௌனாவின் அறைக்குள் போனாள் முக்தா.

"கிஷானைப் பார்த்தாச்சுல்ல? இப்போ ரிலாக்ஸ் ஆக இருங்க முகி" என அவளை இருக்கையில் அமரச் செய்தாள் அகதா.

"அப்பா! கிஷான் வந்துட்டாரு.இப்போ மேடைக்கு வரப் போறார்" என்றாள் தந்தையிடம்.

"சரி ம்மா" என்று கூறினார் நீலகண்டன்.

அவள் கூறியதைப் போலவே, மஹதனைக் கூப்பிட்டு வந்து, மேடையில் அமர்த்
தினான் கிஷான்.

மணமகனின் வருகைக்குப் பிறகு மந்திரங்கள் ஓதி அவனையும் அதைச் சொல்லச் சொல்லி விட்டு, இப்போது,

"பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ" என்றார் ஐயர்.

- தொடரும்

 
Last edited:

Shalini shalu

Moderator
முக்தாவின் துணையுடன் மேடைக்கு வந்து சேர்ந்தாள் மௌனா.


அன்னபூரணி மற்றும் சிவமணியுடன் உட்கார்ந்து கொண்டாள் அகதா.


அந்த தாலி கட்டும் வைபவம் முழுவதிலும், நண்பர்களின் அருகிலேயே இருந்தனர் கிஷானும், முக்தாவும்.


மந்திரத்தை உச்சரித்து முடித்து விட்டு, தாலியை எடுத்து மஹதனிடம் கொடுத்தார் ஐயர்.


அதை வாங்கித், தன்னுடைய சரிபாதியாப் போகிறவளின் கழுத்தில், மூன்று முடிச்சுப் போட்டான் மஹதன்.


தங்களுக்கிடையே ஒரு சிலர் புகுந்தவிருந்த, ஏற்றத்தாழ்வுகளைக், கண்டு கொள்ளாமல், இப்போது ஊர் மெச்சும் ஜோடிகளாகத் திருமணப் பந்தத்தில் இணைந்து விட்டனர் மஹதனும், மௌனாவும்.


இருவரும் ஒரே நேரத்தில் தங்களது இணைகளுக்கு "ஐ லவ் யூ" என்று காதலைத் தெரிவித்துக் கொண்டனர்.


அதேபோல், மஹதன் மற்றும் மௌனாவிற்கு ஆனந்தக் கண்ணீர் கசிந்தது.


"இரண்டு பேரும் சந்தோஷத்தில் அழறாங்க கிஷான்!" என அவர்களது காதலைப் பார்த்து வியந்தபடி அவனிடம் கூறினாள் முக்தா.


"என்று நண்பன் அழுகுறானா?" என்று மஹதனின் கண்களை ஆராய்ந்தான் கிஷான்.


"டேய்! லைவ் போயிட்டு இருக்கு. அமைதியாக இரு" எனத் தனது விழிகளைத் துடைத்துக் கொண்டு, மௌனாவையும் அவ்வாறு செய்யச் சொன்னான் மஹதன்.


இவர்களது காதல் இப்படி திருமணத்தில் நிறைவேறுவதை ஆசையாகப் பார்த்து மகிழ்ந்தனர் இரண்டு ஜோடிகளின் சொந்தங்களும்.


மேடையிலேயே இருந்ததால், மஹதனுக்கும், மௌனாவிற்கும் வாழ்த்து தெரிவித்தனர் முக்தா மற்றும் கிஷான்.


"மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த, மஹதன் திருமூர்த்தியின் திருமணம், அவர் விரும்பிய பெண்ணான மௌனாவுடன் சிறப்புடன் இனிதே நடந்து முடிந்தது. அவர்களது சிலக் கண்ணைக் கவரும் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு!" என்று எல்லா நியூஸ் சேனல்களிலும் சிறப்புச் செய்தியாக நேரலையில் மக்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டுக் கொண்டு இருந்தது.


"சம்பந்தி!" என்று திருமூர்த்தி மற்றும் கௌசல்யா தங்களது மருமகளின் பெற்றோரிடம் வாழ்த்து தெரிவித்தனர்.


இப்போது இருவரது தந்தை மற்றும் தாயிடம் வந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டனர் மஹதன் மற்றும் மௌனா.


கிஷானின் பெற்றோரிடமும், முக்தாவின் தந்தையிடமும் மறக்காமல் ஆசி பெற்றனர் மணமக்கள்.


"சும்மா தனியாகப் போய் நின்றால், கூட்டத்தில் தெரியாது, பார்க்க மாட்டாங்கன்னு எல்லாம் நினைச்சு ஏமாத்தக் கூடாது அகி! நாங்க இல்லைன்னாலும், எங்களைத் தவிர மத்தவங்க எல்லாரும் உன்னைப் பார்த்துட்டுத் தான் இருக்காங்க. நீ விலகிப் போனால் மட்டும் விட்டுடுவோமா?" எனத் தங்களுடைய திருமணச் சடங்குகளைச் செய்து முடித்து, தன்னுடைய கணவனுடன் மேடையில் நின்றிருந்த, மௌனாவோ, தோழியின் செயலைக் கண்காணித்து விட்டப் பின்னர், அது தந்த அதிருப்தியில், அகதாவிடம், தன் சங்கடத்தைத் தெரிவித்துக் கொண்டிருந்தாள்.


"ஹேய்! அப்படியெல்லாம் இல்லை மௌனா" என்று மறுத்தாள் அகதா.


"ஹூம்…! நல்லாவே தெரியுது அகி! நீ பண்றதை எல்லாம் நாங்க கவனிச்சுக்கிட்டுத் தான் இருந்தோம். என் கூட நின்ன தான், ஆனாலும், நிறைய தடவை முக்தாவை முன்னாடி நிற்க வச்சிட்டு, நீ விலகி, கீழே இறங்கிப் போனதைப் பார்த்தேன்" என்று கம்மிய குரலில் கூறினாள் மௌனா.


"ஆமாம் அகதா. ஏன் இப்படி பண்றீங்க?" என்று அவளிடம் வினவினான் மஹதன்.


ஒன்றும் பேச முடியாமல் இப்போதும் தலையைக் குனிந்து கொண்டு நின்றாள் அகதா.


"உன்னை இனிமேல் இப்படி நான் பாக்கக் கூடாது!" என்று கூறியவளிடம் வந்த அன்னபூரணி,


"என்ன மௌனா இது? ஸ்டேஜில் நின்னுட்டு இவ்ளோ நேரமாக என்னப் பேசிட்டு இருக்கீங்க? எல்லாரும் ஃபோட்டோஸ் எடுக்க வேணாமா?" என்று மகளிடம் கேட்டார்.


"எங்களுக்கு ஏதாவது குடிக்க வேணுமான்னு அகி கேட்டுக்கிட்டு இருந்தாள் மா" என்று அவரிடம் மௌனா சமாளிக்கவும்,


"ஓஹ் சரி. அகி" என அவளை அழைக்கவும்,


"ஹாங்! ம்மா…" என்று நிமிர்ந்தாள் அகதா.


"நீ வா நான் இவங்களுக்கு ஜூஸ் கொடுத்து விட்றேன். சிரிச்சா மாதிரி நிக்கலாமே நீங்க?" என்றபடி அவளுடன் சென்று விட்டார் அன்னபூரணி.


அடுத்தடுத்து புகைப்படங்கள் எடுக்கவென, ஆட்கள் வந்து கொண்டே இருந்ததால், அவர்களால் அகதாவிடம் தெளிவாகப் பேச முடியவில்லை.


"பாருங்க மஹி!" எனத் தன் கணவனிடம் ஆற்றாமையுடன் கூறினாள் மௌனா.


"அம்மாவும், அத்தையும் அவங்களைப் பாத்துக்குவாங்க" என்று அன்னையிடம் அகதாவைப் பார்க்குமாறு கூறி விட்டான் மஹதன்.


அத்துடன், முக்தாவிடம், அவளது தந்தையைக் கவனிக்கச் சொல்லி விட்டு, அகதாவைத் தன்னுடன் இருத்திக் கொண்டார்கள் கௌசல்யாவும், அன்னபூரணியும்.


கிஷான் தன் பெற்றோருடன் புகைப்படம் எடுக்கப் போன போது,


"சம்பந்தி! முகி! வாங்க" என நீலகண்டனையும், தங்களது மருமகளாகப் போகும் மங்கையையும் அழைத்தார் சித்ரலேகா.


"ஜோடியாக நிற்கனும்" என்று மகனையும், முக்தாவையும் ஒன்றாக நிற்க வைத்தார் காஞ்சியப்பன்.


"மௌனா!" என்று பரவசம் அடைந்தாள் முக்தா.


"மணப்பெண் தோழியாக உங்கப் பொறுப்பை பர்ஃபெக்ட் ஆகப் பண்ணி முடிச்சுட்டீங்களே முகி" என்று அவளும் ஆனந்தத்துடன் அறிவித்தாள்.


"ம்ஹ்ம்! தாங்க்யூ டியர்" என அவளது பாராட்டைப் பெற்றுக் கொண்டாள் முக்தா.


"காங்கிராட்ஸ் மஹத்" என்று இருவரது தலையிலும் கரத்தை வைத்து வாழ்த்தினர் காஞ்சியப்பன் மற்றும் சித்ரலேகா தம்பதியர்.


"நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்!" என்று முக்தாவிடம் கூறினாள் மௌனா.


"என்னம்மா?"


"அகியைக் கூப்பிட்டு வந்து ஃபோட்டோ எடுக்க நிற்க வைக்கிறீங்களா? ப்ளீஸ்!" என்ற வேண்டுகோள் விடுத்தாள்.


"ஷ்யூர் டா. உங்க அம்மா பக்கத்தில் தான் இருக்காங்க. இழுத்துட்டு வர்றேன்" என்று அன்னபூரணியுடன் இருந்த அகதாவிடம் சென்று,


"நீங்க என்ன உங்க ஃப்ரண்ட் கூட ஃபோட்டோ எடுக்கவே இல்லையே?" என்றாள் முக்தா.


"மத்த எல்லாரும் எடுத்து முடிக்கட்டும் முகி. நான் தானே? அப்பறம் போய்க்கிறேன்" என்று இருந்த இடத்தை விட்டு அகலாமல் பதில் சொன்னாள் அகதா.


"நீங்க தானா? அதனால் கடைசியாக எடுக்கனும்னு ஏதாவது ரூல் ஆ? வாங்க!" என்று அவளது அனுமதியைக் கேட்காமலேயே கரத்தைப் பற்றி, மெதுவாக மேடைக்கு அழைத்துச் சென்றாள்.


"இந்தப் பொண்ணு ஏன் இப்படி இருக்கிறா?" என்று போகும் அவளையே பார்த்தபடி கணவனிடம் கூறி வருத்தப்பட்டார் அன்னபூரணி.


அவ்வப்போது தோழிக்காக மேடையில் இருந்தாலும், முக்தாவின் இருப்பை உறுதி செய்து கொண்டால் அங்கிருந்து அகன்று விடுகிறாள் என்பதை அவரும் தெரிந்து கொண்டார்.


மேடைக்கு வந்த தோழியை முறைத்த மௌனா,"வந்து நில்லுங்க" எனக் தன்னுடன் நிறுத்திப் புகைப்படம் எடுத்துக் கொண்டாள்.


தன்னுடைய மாற்றத்தை அனைவரும் அறிந்திருப்பதை எண்ணி,‌ தர்ம சங்கடமாகிப் போன நிலையில் இருந்தாள் அகதா.


"சாரி மௌனா" என்று அவளிடம் மன்னிப்புக் கேட்க,


"இப்போ எதுவும் பேச வேண்டாம். அங்கே பார்த்து சிரி" என்று புகைப்படக் கருவியைக் காட்டிச் சொன்னாள் அவளது தோழி.


அது முடிந்ததும், அகதா அவளைப்‌ பார்க்கவும்,"அம்மா கூட உட்காரு.போ" என அனுப்பினாள் மௌனா.


"பேசாமல், அந்த தீபக்கை இவங்க கண்ணு முன்னாடி ஏதாவது பண்ணி விட்டுடுவோமா?" என்று அசட்டையாக கேட்டான் மஹதன்.


"ஏங்க இப்படி?" என்று தன்னவனைக் கலவரமாகப் பார்த்துக் கேட்டாள்.


"பின்னே என்னம்மா? இவங்க ஏதோ கொலைக் குத்தம் பண்ண மாதிரி, கில்ட்டி ஃபீலில் சுத்திட்டு இருக்காங்க!" எனத் தன் எரிச்சலை வெளிப்படுத்தினான்.


"ஃப்ரீ ஆகிட்டு அவகிட்டப் பேசுறேன் மஹி" என்று அவனைச் சமாதானம் செய்தாள் மௌனா.


"சரி" என்றவன், அதற்குப் பிறகான ஒரு சில மணி நேரங்களைப் புகைப்படங்கள் எடுக்க, உணவுண்ண என்று கடத்தி விட்டு, மாலை வீட்டிற்குச் செல்ல எடுத்து வைத்தனர் அனைவரும்.


அதற்குள், அவர்களது திருமணத்தை ஒளிபரப்பிக் கொண்டிருந்த அனைத்து நியூஸ் சேனல்களும் நேரலையை நிறைவு செய்திருந்தனர்.


தங்களுக்கான அறைக்குள் வந்ததும்,

"நான் என்ன சொன்னாலும் கேட்கக் கூடாதுன்னு, நீ இருந்தால், நான் என்னச் செய்யட்டும்? மறு வீட்டுக்கு வருவேன்ல? அப்போ பேசிக்கிறேன்" என்றாள் மௌனா.


அக்காவின் மேலிருந்த வருத்தம் அவளைப் புறப்படுவதையே மறக்க வைத்தது.


"நீ இன்னும் கிளம்பலையா?" என்று மௌனாவின் தாய் அன்னபூரணி வந்து அதட்டவும் தான், தன்னுடைய அலங்காரங்களைச் சீர்படுத்திக் கொண்டாள் மௌனா.


"அவனை என்னப் பண்ணலாம் டா?" என்று தோழனிடம் கேட்டான் மஹதன்.


"அதுதான், வாழ்நாள் ஃபுல்லா அவனை அடைச்சு வைக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டோமே?" என்றான் கிஷான்.


"அகதா முகத்தைப் பார்த்தியா?"


"ஆமா. ரொம்ப அமைதியாக இருந்தாங்க. அது அவங்களோட நேச்சர்னு விட்டுட்டேன். ஏன் என்னாச்சு டா?" என்று வினவினான் கிஷான்.


"அவங்க தன்னைத் தானே தண்டிச்சிக்கிறா மாதிரி, எங்க கல்யாணத்தில் ஒதுங்கி நின்னுட்டாங்க டா" என்று அனைத்தையும் விவரித்தான் மஹதன்.


"இதையெல்லாம் கேட்கும் போது, அவனைப் போய் உருத் தெரியாமல் அழிச்சிடலாம் போல இருக்குடா!" என்று ஆத்திரத்தில் வெடித்தான்.


"பேசாமல் அதைப் பண்ணு" என்று உறுதியான குரலில் கூறினான் மஹதன்.


  • தொடரும்

திங்கட்கிழமைக்குள்ளே இந்தக் கதையை முடிச்சிடலாம் ஃப்ரண்ட்ஸ்!
 

Shalini shalu

Moderator
30. இறுதி அத்தியாயம்

(பாகம் ஒன்று)

"அதை அகதாவோட கண்ணு முன்னால் பண்ணினால், இன்னும் செம்மையா இருக்கும் டா!" என்று தீவிரமாக கூறினான் கிஷான்.



"அதுக்கு ஒரு நாளைக் குறிப்போம்" என்றவாறு தன்னைத் தயார்படுத்திக் கொண்டான் மஹதன்.


வெளியிலிருந்த அனைத்து பத்திரிக்கை நிருபர்களையும் உள்ளே அனுமதித்து, உணவுண்டு விட்டுக் காத்திருக்குமாறு வலியுறுத்திச் சென்றார் திருமூர்த்தி.


மௌனாவும், மஹதனும் தங்களது அறையிலிருந்து ஒரே நேரத்தில் வெளியே வந்தார்கள்.


"வெளியே பிரஸ், மீடியா எல்லாம் இருக்காங்க. நம்மளை ஃபோட்டோஸ் அண்ட் வீடியோஸ் எடுப்பாங்க. அவங்களை எல்லாம் தாண்டி தான் காரில் போய் ஏறனும்" என்று அவர்களிடம் கூறி, மாமனார் மற்றும் மாமியாரை மனதளவில் தயார்படுத்தினான் மஹதன்.


ஆனால், மௌனாவிற்கு இது புதிதல்ல. இவன் மேலிருந்தக் காதலை உறுதி செய்த நாளிலிருந்து, அவளுக்கு இவையெல்லாம் பழக்கப்பட்டு விட்டது.


அதனால், தனது உடல் மொழியைச் சாதாரணமாக வைத்திருந்தாள் மௌனா.


"சரிங்க மாப்பிள்ளை" என்றவர்கள், தங்களது சம்பந்தியுடன் இணைந்து நடக்கத் தொடங்கினர் மௌனாவின் பெற்றோர்.


"நீ மௌனா கூடப் போகாதே முகி. மஹதன் அவங்களை பார்த்துப்பான்" என்று அவளைத் தன்னுடன் வரச் சொன்னான் கிஷான்.


பாதுகாவலர்கள் அனைவரும் புடைசூழ, தங்களது கம்பீரத் தோற்றத்துடன் நடை போட்டு, வெளியில் இருந்த மக்களை எதிர் கொண்டார்கள் மணமக்கள்.


"ஹாய்!" என்று புன்னகையுடன் அவர்களைப் பார்த்து கை காட்டினார்கள் மஹதனும், மௌனாவும்.


"கேஷுவலாக நடந்து வாங்க" என்று தங்களது மருமகளின் பெற்றோருடன் நடந்தார்கள் கௌசல்யா மற்றும் திருமூர்த்தி.


இதில், மணமக்களைப் பற்றிக் கேட்காமல், திடிரென, தன் தந்தையுடனும், வருங்கால கணவனுடனும் மற்றும் அவனது குடும்பத்துடனும் வந்து கொண்டிருந்த முக்தாவைக் காட்டி,


"மஹதன் சாரோட எங்கேட்ஜ்மெண்ட்டிலும், கலாயாணத்திலேயும், நீங்களும், முக்தாவும் ரொம்ப நெருக்கமாக நடந்துக்கிட்டீங்க! அதுக்கு ஏதாவது காரணம் இருக்கா? இல்லை, வெறும் ஃப்ரண்ட்ஷிப் மட்டும் தானா சார்?" என்று கிஷானிடம் வினவினார் ஒரு பத்திரிக்கை நிருபர்.


அந்தக் கேள்வியை, மீண்டும் மீண்டும் எதிர் கொண்டதாலோ, என்னவோ முக்தாவிற்குச் சிரிப்பாகத் தான் வந்தது.


அவளது தந்தையான நீலகண்டனுக்கு அந்த நிருபரின் மேல், ஆத்திரம் தோன்ற, அவர் பேச்செடுக்கும் முன்னர்,


"இருங்க அப்பா. கிஷான் பதில் சொல்லுவார்" என்று அவரது ஆத்திரத்தை தணித்தாள் முக்தா.


காஞ்சியப்பனும், சித்ரலேகாவும் தங்களுடைய மகனின் பதிலுக்காகச் சுவாரசியமாக காத்திருந்தார்கள்.


"ஆமாம். எங்களுக்குள்ளே நட்பும் இருக்கு, லவ்வும் இருக்கு. அதனால் தான் என் நண்பனோட மேரேஜ் முடிஞ்ச அப்பறம், எல்லாத்தையும் புரொசீஜர் படி செய்யலாம்னு இருக்கோம். நாங்க அஃபிஷியல் ஆக இன்ஃபார்ம் பண்றதுக்குள்ள உங்களுக்கு எப்படி நியூஸ் வந்துச்சு?" என்று தன்னுடைய விழிகளைக் கூராக்கிக் கொண்டு கேட்டான் கிஷான்.


"நியூஸ் எதுவும் வரலை சார். உங்க ரெண்டு பேரோட குளோஸ் ஆன பிஹேவியர் தான், எங்களுக்கு இப்படியான சந்தேகத்தைக் கொடுத்துச்சு சார்!" என்றார் அந்த நிருபர்.


"குளோஸ் ஆக இருந்தால், தப்பானக் கண்ணோட்டத்தில் பார்க்கனும்னு அவசியம் இல்லை சார். நாங்க எல்லாரும் ஃப்ரண்ட்ஸ். அப்போ எங்களுக்குள்ளே நல்ல பாண்டிங் இருக்கும் தானே?" என்றவன், அந்த நிருபரை அதற்கு மேல் கேள்வி கேட்க விடாமல் முக்தாவின் கையைப் பற்றிக் கொண்டு, அவளுடன் வேகமாக அவ்விடத்தை விட்டு நகர்ந்தான் கிஷான்.‌


"எங்களோட மேரேஜூக்கு வந்துட்டு, இவங்களைப் பத்தின நியூஸ் கலெக்ட் பண்ணிட்டு இருக்கீங்க!" என்று அந்த நிருபரிடம் சொல்லி விட்டுச் சிரித்தான் மஹதன்.


அவனது வார்த்தைகளில் அசடு வழிந்து போன அந்த நபர், அதற்குப் பிறகு, புகைப்படங்களை மட்டும் எடுக்கத் தொடங்கி விட்டார்.


"எங்களோட நியூஸூம் தனியாக வரும். அது வரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்களேன்" என்றான் கிஷான்.


அதன் பிறகும் அவர்கள் கேள்வி கேட்கத் தயாராக இருந்தாலும், இவர்களுக்கு நேரமில்லை. எனவே, பாதுகாவலர்களைக் கூட்டத்தை விலக்கி விடச் சொல்லி காருக்குச் சென்றனர்.


அனைவரும் அகதா மற்றும் மௌனா தங்கியிருந்த வீட்டிற்குக் கிளம்பினர். அங்கிருந்து தான், மௌனாவைக் கௌசல்யாவின் இல்லத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.


அவர்களுக்கு முன்னதாக, அங்கே அகதா சென்று விட்டாள். தோழி மற்றும் அவளது கணவனுக்காக ஆரத்தியைக் கரைத்து வைக்க வேண்டுமல்லவா? அவளுடன் இணைந்து தானும் ஆரத்திச் சுற்றப் போவதாக கூறி, ஒப்புதல் பெற்றிருக்கிறாள் முக்தா.


"உன்னை ரிப்போர்ட்டர்ஸ் ரொம்ப கொஸ்டீன்ஸ் கேட்டுட்டாங்களா?" என்று மௌனாவிடம் ஆறுதலாக வினவினான் மஹதன்.


"எங்கிட்ட எங்கே கேட்டாங்க? முக்தாவையும், கிஷானையும் ஃபோகஸ் பண்ணாங்க மஹி" என்று கூறி மெலிதாகச் சிரித்தாள்.


"ஆமாம். அவங்கப் பாப்புலர் ஆகிட்டாங்க" என்றான்.


கிஷான் மற்றும் முக்தாவைப் பற்றி நல்ல ஆரோக்கியமான விஷயங்களைப் பகிர்ந்த வண்ணம் வந்தவர்கள், தங்களது முடிந்ததையும் அறிந்து, மகிழுந்தின் கதவைத் திறக்க முயற்சித்தார்கள்.


"இருங்க" என்று அவர்களை வரவேற்கும் விதமாக கார்க் கதவைத் தானே திறந்து, மஹதனையும், மௌனாவையும் காரை விட்டு இறங்கி வைத்தான் கிஷான்.


"முகி" என்று அவளை அழைத்து தன்னிடமிருந்த ஆரத்தித் தட்டை அவளையும் கவனமாகப் பிடித்துக் கொள்ளச் சொன்னாள் முக்தா.


அவர்களுடன் மற்றவர்களும் நின்று கொள்ள, மணமக்களுக்கு ஆரத்திச் சுற்றினர் அகதாவும், முக்தாவும்.


"மஹதா! உங்களுக்கு ஆரத்தி எடுத்தவங்களுக்குத் தட்டில் காசு போடனும் ப்பா" என்று மகனுக்கு ஞாபகப்படுத்தினார் கௌசல்யா.


"அப்படியா ம்மா? எனக்கு தெரியாதே!" எனத் தன் பணப்பையைக் கையில் எடுத்தான் மஹதன்.


"அச்சோ! பரவாயில்லை மஹதன். காசெல்லாம் வேண்டாம்" என்று மறுத்துப் பின் வாங்கினாள் அகதா.


"எனக்கும் வேணாம்" என்று மெல்லமாக உரைத்தாள் முக்தா.


"ஓஹ்! கமான்! ஒரு மரியாதைக்காக வாங்கிக்கோங்க ப்ளீஸ்" என்று சிரித்த முகமாக கூறி, இருவருக்கும் ஒரே மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்தான் மஹதன்.


அவற்றை, அகதா தயக்கத்துடனும், முக்தா புன்னகையுடனும் வாங்கிக் கொண்டு, இருவரும் மஹதனுக்கு நன்றி சொல்லி, அவனையும், மௌனாவையும் உள்ளே வருமாறு பணித்தனர்.


"நீங்களும், அகதாவும் இங்கேயே இருங்க. நாங்களே இவங்க ரெண்டு பேரையும், மஹதனோட வீட்டுக்குக் கூப்பிட்டுப் போய் விட்டுட்றோம்" என்று அந்த நேரத்தில், உதவிக்கரம் நீட்டினர் கிஷானுடைய பெற்றோர்.


முன்னிரவு முழுவதும், மௌனாவிற்கும், அவளது பெற்றவர்களுக்கும் தோள் கொடுத்து, துணை நின்று, தேற்றியவள், இப்போது, திடீரென நிறுத்தாமல் வெடித்து அழுது விட்டாள் அகதா.


"டேய் என்னடா?" என்று அவளை அனுசரணையுடன் அணைத்துப் பிடித்துக் கொண்டாள் மௌனா.


"மிஸ் யூ சோ மச் ம்மா" என்றாள் அகதா.


"ஊருக்குக் கிளம்பிடுவீங்கள்ல ப்பா! ம்மா!" என்று நெகிழ்ச்சியுடன் வினவினாள் மௌனா.


அவளது திருமணம் முடிந்து, மறுவிருந்து என அனைத்தும் நிகழ்ந்து நிறைவு பெற்றதும், அகதாவுடன் தங்களது சொந்த ஊருக்குப் போவது தானே, அன்னபூரணி மற்றும் சிவமணியின் திட்டம்.


அதை நினைக்கையில், மௌனாவிற்கும் விழிகளில் இருந்து நீர் வெளியேறியது.


"அகி ம்மா! மௌனா ம்மா" என இருவரையும் சமாதானம் செய்யப் பெரும்பாடு பட்டுப் போயினர் மௌனாவின் பெற்றோர்.


"கண் கலங்காமல், மௌனாவை எங்க வீட்டுக்கு அனுப்பி வைங்க சம்பந்தி" என்று அவர்களுக்கு வலியுறுத்தினார் கௌசல்யா.


"ரொம்ப எமோஷனல் மொமண்ட் ங்க" என்று கிஷானிடம் கூறினாள் முக்தா.


"யெஸ் முகி" என்று அதை ஒப்புக் கொண்டான்.


அனைவரும் தங்களைச் சமாளித்துக் கொண்டு, மௌனாவையும், மஹதனையும் சித்ரலேகா மற்றும் காஞ்சியப்பனுடன், காரில் ஏற்றி விட்டு, மூவரும், வீட்டிற்குள் சென்று அடைந்து கொண்டனர்.


இவர்கள் சந்தோஷத்தில் திளைத்திருக்க, ஒரு வீட்டில் இருக்கும் ஜீவன் மட்டும், அழுகையில் கரைந்து கொண்டிருந்தது.


  • தொடரும்
 

Shalini shalu

Moderator
இனிமேல், தனக்கான உணவு மற்றும் உறைவிடத்தைத் தேடித் தான், தான் போக வேண்டும் என்ற நிலை லலிதாவிற்கு.

அதனால், வீட்டின் ஒரு மூலையில், தனது மொத்த வாழ்விலும் அடையாத துன்பத்தை இப்போது அடைந்த வேதனையில் துடித்துக் கொண்டு இருந்தார் அவர்.

மகனை வெளியே விடும் எண்ணம் மஹதனுக்கு இல்லை என்பதைப் புரிந்து தான் அவனிடம் பொருளுதவி கேட்கப் போனார் லலிதா.

அதையும் அவன் நிர்தாட்சண்யமாக மறுத்து, தன்னைத் துரத்தி விடாத குறையாகப் பேசி அனுப்பி விட்டான் மஹதன் என்ற துக்கமும் அவரை அரித்து எடுத்தது‌.

அதனால், மனமும், உடலும் அவருக்குப் பாரமான உணர்வைக் கொடுத்தது. உடலைப் பேணிக் காக்கவும், பொருளை வாங்கிக் குவித்து ஆடம்பரமாக வாழ்ந்து மனதைக் குளிர வைத்துக் கொள்ளவும், லலிதாவிடம் பணம் என்ற ஒன்று இல்லவே இல்லை!

அவர் இப்போது தங்கியிருக்கும் வீட்டின் வாடகைக்கானப் பணத்தைக் கொடுக்கக் கூட லலிதாவால் முடியாது.

அதே எண்ணுகையில், இனிமேல் தனக்காக எதுவும் இல்லை, எல்லாமே கையை விட்டுச் சென்று விட்டது என்று உணர்ந்தவர், அந்த இருட்டுத் தன் வாழ்வையும் மொத்தமாக இருட்டாக்கி விட்டதைப் புரிந்து கொண்டு, அதற்குப் பின், தான் வீடு வீடாகச் சென்று, ஏதாவது மேல் வேலையைச் செய்து வயிற்றை நிரப்பிக் கொள்ள வேண்டும் என்று நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ளத் துணிந்து விட்டார் லலிதா.

🌸🌸🌸

தன்னைக் காரில் ஏற்றியப் பெற்றோரும், தோழியும் ஒரு நிமிடம் கூட , அங்கே நிற்காமல், வீட்டினுள் சென்றதைப் பார்த்துக் கண்ணீர் உகுத்தாள் மௌனா.

அவளை ஆறுதலாக அரவணைத்துக் கொண்டான் மஹதன்.

திருமூர்த்தி மற்றும் கௌசல்யா இருவரும் வீட்டு வாயிலில் தயாராக நின்றிருக்க, சொந்தக்காரப் பெண்கள் என்று எவரும் இன்றி, வேலையாட்களையும் செய்ய விடாமல், தன் மருமகளுக்குத் தானே, ஆரத்திக் கரைத்து எடுத்து வந்தார் கௌசல்யா.

அதை முக்தாவிடம் கொடுக்க, அவளும்,மஹதனுக்கும், மௌனாவிற்கும் ஆரத்தியைச் சுற்றி முடித்தாள்.

அவர்களை உள்ளே அழைத்துப் போனார்கள் அனைவரும்.

புகுந்த வீட்டில் நுழைந்தவுடன் என்னென்ன சடங்குகள் செய்ய வேண்டுமோ? அதையெல்லாம், தன் மருமகளுக்குச் சரியாக வழிகாட்டிச் செய்ய வைத்தார் கௌசல்யா.

அதற்குப் பிறகானச் சடங்குகளைச் செய்யும் போது, திருமணம் ஆகாதவர்கள் அவ்வீட்டில் இருக்கக் கூடாது என்பதால்,

சித்ரலேகாவும், காஞ்சியப்பனும் தங்கள் மகன் மற்றும் நீலகண்டனையும் அவரது புத்திரி முக்தாவையும் கூட்டிக் கொண்டு, இடத்தைக் காலி செய்தனர்.

தனது அலுவலகத்திலிருந்த முக்கிய ஊழியர் ஒருவரின் உதவியால், தங்களது திருமணத்தின் நேரலை வீடியோ, எந்தளவிற்குப் பரவி உள்ளது, மக்களைச் சென்றடைந்து இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு,"எவ்ளோ வியூஸ் போயிருக்குன்னுப் பாரு மௌனா!" என்று அவளிடம் பெருமையாக காட்டினான் மஹதன்.

அவளும், தன்னிலையை மேம்படுத்திக் கொண்டு,"அட! சூப்பர் மஹி!" என்று அவனது செல்பேசியை வாங்கிப் பார்த்தாள் மௌனா.

"மொபைலை வச்சிட்டுப் போய் ரெஸ்ட் எடுங்க" என இருவருக்கும் வலியுறுத்தினார் திருமூர்த்தி.

மஹதன் அவன் அறைக்குள் போய் விட, மௌனாவை, வேறொரு அறைக்கு அனுப்பி விட்டு,

"ரூமை டெக்கரேட் பண்றதுக்கு யாரைக் கூப்பிட‌ முடியும் ங்க?" என்று கூறி அயர்ந்து போனார் கௌசல்யா.

"இப்போதைக்கு வேலையாளை அனுப்பிச் செய்யச் சொல்லித் தான் ஆகனும் மா!" என்றார் திருமூர்த்தி.

அதை முக்தா செய்யக் கூடாது மற்றும் காஞ்சியப்பனையும், சித்ரலேகாவையும் இதைச் செய்யுமாறு கேட்கவே முடியாது! என்பதால், வீட்டுப் பணியாளர்களை வைத்து, மணமக்களுக்கானச் சோபன அறையைத் தயார் செய்து வைத்தனர்.

மௌனாவோ,"என்னை நீங்கப் பார்க்காமலேயே வீட்டுக்குள்ளே போயிட்டீங்களே அகி!" என்று கோபம் மற்றும் மிகுந்த வேதனையுடன் தோழியிடம் அலைபேசி வழியாக வினவினாள்.

"அப்பாவும், அம்மாவும் உன்னோட பிரிவை ஏத்துக்கனுமே? அதனால், நீ காரில் போறதைப் பார்த்துட்டால், இன்னும் அழுது, உன்னை வழியனுப்பி வைக்க முடியாதுன்னு, உள்ளே வந்துட்டாங்க! என்னாலயும் கன்ட்ரோல் பண்ணிக்கவே முடியலை. சாரி மௌனா!" என்று தங்கள் நிலையை அவளுக்குப் புரியுமாறு உரைத்தாள் அகதா.

"ப்ச்… சரி அகி! எனக்குப் புரியுது. ஆனால் உங்க முகத்தை எல்லாம் பார்க்கனும்னு வெளியே எட்டிப் பார்த்துட்டே போனேன்!" என்றாள் மௌனா.

இதற்கு மேல் முடியாது! என்பது போல, "ப்ளீஸ் ம்மா! என்னோட உணர்வுகளையும் புரிஞ்சிக்கோ! சரி… நான் அம்மா, அப்பாவைப் போய்ப் பாக்குறேன்" என்று அவளிடம் விடைபெற்றுக் கொண்டாள் அகதா.

இனி, தனது பெற்றோர் அவளுடன் தான் வாழப் போகிறார்கள்! அவள் மட்டும் தான், இறுதி வரை அவர்களுடன் பயணிக்கப் போகிறாள்! அப்படியென்றால், தான் அவ்வீட்டின் உறுப்பினர் பதவியை இழந்து விட்டோமா? என்று வாடிப் போய் விட்டாள் மௌனா.

அவள் தான் அக்காவின் பொறுப்பைத் தன் பெற்றோரிடம் கொடுத்தது என்பது நினைவில் கொண்டிருந்தாலும், இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை அவளால்.

- தொடரும்

(அடுத்த யூடி நாளைக்கு வரும் ஃப்ரண்ட்ஸ்)
 

Shalini shalu

Moderator
அவளது உள்ளக் குமுறல் தெரியாமல்,

"குளிச்சிக்கோ மௌனா" என்று அவளிடம் சொன்னக் கௌசல்யா, மருமகளிடம் மாற்றுடையைத் தந்தார் கௌசல்யா.


"சரிங்க அத்தை" என அதை வாங்கிக் கொண்டு குளிக்கப் போனாள் மௌனா.


இவளைத் தயார் செய்து விட்டு, தங்கள் அறைக்குள் அடைந்து கொள்ள வேண்டும் என்பது கௌசல்யாவின் எண்ணமாக இருந்தது.


அதற்கு முன்பாகவே, தன் அலுவலக அறைக்குப் போய் விட்டார் திருமூர்த்தி.


மகனுடைய திருமண வேலையில், கவனம் வைத்திருந்தவருக்கு, இப்போது தான், கம்பெனி வேலைகளைப் பார்க்க நேரம் கிடைத்திருக்கிறது.


தன் உடலைச் சுத்தம் செய்து விட்டு வந்தவளிடம், பால் நிறைந்த சொம்பைத் தந்தவர், அவளை உச்சி முகர்ந்து, நெற்றி வழித்து, மஹதனின் அறைக்குள் அனுப்பினார் கௌசல்யா.


கட்டிலில் செய்யப்பட்டிருந்த அலங்காரத்தைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்துக் கொண்டு இருந்த மஹதனைத், மனைவியின் வருகை அவனை நிமிர்ந்து பார்க்கச் செய்தது.


"வா மௌனா ம்மா" என்று அவளை இலகுவான குரலில் வரவேற்றான் மஹதன்.


"மஹி" என்றவளது அமைப்பிலிருந்தப் பதட்டத்தை உணர்ந்தவன்,


"ரிலாக்ஸ் டா. நாம முதல்ல ஏதாவது பேசலாமா? நீ வந்து என் பக்கத்தில் உட்காரு மௌனா" என அவனது கனிவான அழைப்பில், கணவனிடம் தஞ்சமடைந்தாள்.


கையிலிருந்த சொம்பை அதற்குரிய இடத்தில் வைத்து விட்டுக், கட்டிலில் சென்று அமர்ந்தாள் மௌனா.


அவளது கண்களைப் பார்த்த மஹதனோ," இந்த ஃபர்ஸ்ட் நைட்டை இப்போதைக்குத், தள்ளிப் போட்ருவோமா டா?" என்று அவளிடம் வினவினான்.


"எதுக்கு மஹி?" என்று குழப்பியபடி கேட்டாள் மௌனா.


"என்ன தான் நாம் லவ் பண்ணி இருந்தாலும், மீட்டிங் அதிகமாக இருந்தது இல்லை, ரெண்டு பேரும் வேலையில் தான் கான்சன்ட்ரேட் செய்தோம். ஆனால், மனசுக்குள்ளே அவ்ளோ லவ் இருந்துச்சு. அதை எக்ஸ்பிரஸ் செய்ற மாதிரி, சுவிட்சுவேஷனும் நிறைய அமையவே இல்லை. சோ, நம்மக் கல்யாணத்துக்கு அப்பறம் நடக்குற சடங்கை முடிச்சிட்டு, எங்கேயாவது ஹனிமூன் போயிட்டு வரலாம் டா" என்று யோசனை கூறினான் மஹதன்.


"ஓகே மஹி. இப்போ என்னப் பேசலாம்?" என்று கேட்டாள் மௌனா.


"நம்ம ஆஃபீஸூக்கு நீ இன்டர்வியூ அட்டெண்ட் செய்றதுக்கு முன்னாடி, உன் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடந்துச்சுன்னு, எல்லாத்தையும் எங்கிட்ட ஷேர் பண்ணு! அதுக்கப்புறம், நானும் உங்கிட்ட என் லைஃப் ஹிஸ்டரியைச் சொல்றேன்" என்றான் அவளது கணவன்.


"குட் ஐடியா! நான் ஆரம்பிக்கிறேன் ங்க" என்று அவனுக்கு எதிராகச் சம்மணமிட்டு உட்கார்ந்தாள் மௌனா.அவள் புறம் திரும்பி அமர்ந்தான் மஹதன்.


அவனது மனைவி பேசத் தொடங்கினாள்.


"அப்பாவோட வேலை என்னன்னு உங்களுக்குத் தெரியும். நான் ரெண்டு பேரோட செல்வமும் தான் மஹி! எனக்கு அந்தந்த வயதில் கிடைக்க வேண்டியது எல்லாமே அவங்க வாங்கித் தந்து, நல்லாப் படிக்க வச்சாங்க. நானும் எனக்குப் பிடிச்சதைப் படிச்சேன். அங்கே ஊரில், இருக்கும் போது, கோயில், கடைத்தெருவுக்கு மட்டும் தான் போவேன். வீட்டில் ரெஸ்ட்ரிக்ஷன் போட்டாங்கன்னு இல்லை, எனக்குப் போகத் தோனலை. அப்பறம் தான், படிச்சப் படிப்புக்கு வேலைப் பார்க்கனும்னு ஆசை வந்துச்சு எனக்கு.

அதான், உங்க கம்பெனியில் ஜாப்க்கு அப்ளைப் பண்ணிட்டேன் மஹி" என்று விளக்கிக் கூறினாள் மௌனா.


'ம்ம்… அகதாவைப் பத்தி?" என்று எடுத்துக் கொடுத்தான் மஹதன்.


"அவ என்னோட பெஸ்ட் ஃப்ரண்ட் ங்க! எனக்கு அவ ரொம்பவே சப்போர்ட்டிவ் ஆக இருப்பா. அவளோட சொந்த வாழ்க்கையைப் பத்தி, எனக்குத் தெரிஞ்சப் பிறகு இன்னும் க்ளோஸ் ஆகிட்டோம். எனக்கு ஏதாவது கஷ்டமாக இருந்தால், அவ என்னைச் சமாதானம் செய்வா, அவளுக்கு ஹஸ்பண்ட் அண்ட் மாமியாரால் பிரச்சினை வந்தால், அதை எங்கிட்ட சொல்லுவா. நான் அவளைப் பாத்துக்குவேன். இப்படி இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர், கூட இருந்து கவனிச்சுக்குவோம் மஹி" என்று அவனிடம் உரைத்தாள் மௌனா.


"ஓஹோ!" என்று மட்டும் கூறி, அவளை மேலே பேச விட்டான் மஹதன்.


"ம்ம்…! யெஸ் மஹி. அதுக்கப்புறம் நடந்தது எல்லாம் உங்களுக்குத் தெரியுமே?" என்று குறும்பாக கூறினாள் அவனது சகதர்மினி.


"முதல் நாளே நெத்தியில் பிளாஸ்திரி போட்டியே?" என்று அவளது நெற்றி வடுவை நீவிக் கொடுத்தான் கணவன்.


சிறுநகையை மட்டுமே அதற்குப் பதிலாக கொடுத்தாள் மௌனா.


அதையே கிளறிப் பேசாமல், சட்டென வேறு விஷயத்தைப் பேச வேண்டும் என, "இப்போ என்னோட டர்ன்!" என்றவன்,"பரம்பரைப் பணக்காரவங்க தான். ஆனாலும், அப்பாவும், நானும் எங்களோட தனித்தனி உழைப்பினால், கம்பெனியை டெவலப் செய்தோம். அம்மாவும் லேசுபட்ட ஆளில்லை மௌனா. அவங்க நம்மளோட கம்பெனிஸூக்காக, அவ்ளோ ஹெல்ப் பண்றாங்க. நீலகண்டன் சார் அண்ட் முக்தாவைப் பத்திச் சொல்லனுமா?" என்று மனைவியிடம் வினவினான் மஹதன்.


"ஊஹூம். வேண்டவே வேண்டாம். அவங்க கூட ஃப்ரண்ட் ஆன நாளில் இருந்து, முக்தாவைப் பத்தி அவங்களே சொல்லிட்டாங்க" என்று கூறிப் புன்னகைத்தாள் மௌனா.


"அப்போ ஓகே" என்று அவனும் சொல்லி விட, இப்படியே அவளும், அவனும் தங்களது கடந்தகால வாழ்க்கையையும், எதிர்காலத் திட்டங்களையும் பற்றிப் பேசி, அந்த இரவைக் கழித்து விட்டனர்.


"ஏங்க! வொர்க் பாத்தது போதும். நாளைக்குச் சடங்கு இருக்கு. அதையெல்லாம் பார்க்கனும். வந்து தூங்குங்க" என்று திருமூர்த்தியை அழைத்து உறங்கச் சொன்னார் கௌசல்யா.


சிவமணியையும், அன்னபூரணியையும் ஒருவாறு பேசி, அமைதியாக்கி, உறங்க வைத்திருந்தாள் அகதா.


ஒருவரின் தலையை, மற்றொருவர் தடவிக் கொடுத்துக் கொண்டே, உறங்கிப் போயிருந்தனர் மௌனாவும், மஹதனும்.


அதிகாலை, தன் மீது, படுத்திருந்த மௌனாவை எழுப்ப மனமின்றித் தட்டிக் கொடுத்து விட்டு, உறங்கினான் அவளது கணவன்.


அது அவளை உசுப்பி விட்டதைப் போல இருக்கவும், விழிகளை மெல்லத் திறந்து, தன்னுடைய அலங்காரம் மிதமாகத் தான் கலந்திருக்கிறது என்பதை அறிந்தவளுக்கு, இப்படியே கீழே போனால், அத்தை மனம் வருந்துவாரோ? என்று அவசர அவசரமாக எழுந்து குளித்து முடித்து வந்தவள்,


"மஹி! நான் கீழே போறேன். நீங்க மெதுவாக தூங்கி எழுந்து வாங்க" என்று கணவனின் தாடையைப் பற்றி எழுப்பினாள் மௌனா.


"யெஸ்!‌ யெஸ்! நானும் எழுந்துக்கிறேன் டா. ரெண்டு பேரும் சேர்ந்து கீழே போகலாம்" என அவனும் விழித்துக் கொண்டான்.


"உங்களுக்குத் தூக்கம் வரும்ல மஹி? அதனால்…" என்றவளிடம்,


"உனக்கும் தான் வரும். நீயும், நானும் லேட் ஆகத் தான் தூங்கினோம். அப்படின்னா, உன் கூட நானும் கிளம்பி வரனும்" என்று உறுதியாக கூறி விட்டு, குளியலறைக்குள் புகுந்து கொண்டான் மஹதன்.


அவன் வந்தபின், இருவரும் தங்களது புற அழகை மேம்படுத்திக் கொண்டார்கள்.


"சரியான நேரத்துக்கு வந்துட்டீங்க!" என்று புன்னகைத்தக் கௌசல்யா, இன்னும் மௌனாவின் பெற்றோரிடம் இருந்து அழைப்பு வரவில்லை என்பதால், "இதைக் குடிங்க" என்று அவர்களுக்கானப் பானத்தைக் கொடுத்துப் பருகச் சொன்னார்.


அதற்குள்,"ஹலோ சம்பந்தி! மௌனாவையும், மாப்பிள்ளையையும் இங்கே வர வைக்கனும்" என்று தயங்கிய அன்னபூரணியிடம்,


"இதோ! கிளம்பித் தாயாராக இருக்காங்க சம்பந்தி. நாங்க வர்றோம்" என்று அவரிடம் கூறினார் கௌசல்யா.


"சரிங்க சம்பந்தி" என்று கூறி வைத்தவர், கணவனையும், அகதாவையும் எழுப்பி, மாப்பிள்ளையையும், பெண்ணையும் வரவேற்கத் தாயாராகச் சொன்னார் அன்னபூரணி.


தங்களுக்குள் தாம்பத்தியம் நிகழவில்லை என்றாலும், இருவரின் வதனமும், தேஜஸூடன் காணப்பட்டது.


"ஹாய்!" என்று அங்கே வந்தமர்ந்தார் திருமூர்த்தி.


"ஹாய் ப்பா!"


"ஹலோ அங்கிள்!"


"ஹாய்!" என்று தானும் அவர்களிடம் கூறினார் திருமூர்த்தி.


நான்கு பேரும் காரில் ஏறி, சிவமணியின் வீட்டிற்குக் கிளம்பிச் சென்றனர்.


அங்கே, மௌனாவின் பெற்றோர், அவர்களுக்கான வரவேற்புப் படலத்தைத் தயார் செய்தனர்.


மௌனா மற்றும் அவளது புகுந்த வீட்டுக்காரர்கள் அனைவரும், அவ்வீட்டின் முன்புறத்தில், காரில் வந்து இறங்கினர்.


"அம்மா! ப்பா!" எனச் சிவமணியையும், அன்னபூரணியையும் அழைத்துக் கொண்டே, உள்ளே போனாள் மௌனா.


"உடனே உள்ளே வந்துட்டியா? இரு!" என்று அவர்கள் இருவருக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே வரச் செய்தார் அன்னபூரணி.


அன்னையையும், தந்தையையும் பார்த்து, கண்கள் பனிக்கப் புன்னகை செய்தாள் மௌனா.


"அம்மா! கொஞ்சம் தள்ளுங்க" என்று தோழியைக் கட்டிக் கொண்டாள் அகதா.


தன் பெற்றோரை அவளுக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டோம் என்று மருகாமல், அவளது அணைப்பில் அடங்கிப் போனாள் மௌனா.


"அவங்க நின்னுக்கிட்டே இருக்காங்கப் பாரு!" என்று சிவமணி தான், மாப்பிள்ளையையும், திருமூர்த்தி மற்றும் கௌசல்யாவையும் முறையாக வரவேற்றார்.


மகளின் புகுந்த வீட்டாரிடம்,"மறு வீட்டுக்கு எப்போ வரலாம் சம்பந்தி?" எனக் கேட்டார் அன்னபூரணி.


"அதுக்கு அழைக்கத் தானே வந்திருக்கோம். அடுத்த வாரத்தில், மறு வீட்டுச் சாப்பாடு போடுற சடங்கை வைக்கலாம்னு இருக்கோம் சம்பந்தி. நீங்க மூனு பேரும் உங்கப் பொண்ணு அப்பறம் மருமகன் கூட சேர்ந்து சாப்பிடனும்" என்று அவர்களைத், தங்களது வீட்டிற்கு வருமாறு, அன்புடன் அழைப்பு விடுத்தனர் மஹதனின் பெற்றோர்.


  • தொடரும்

இன்னும் ஒரு யூடி இருக்கு ஃப்ரண்ட்ஸ். அதுக்கப்புறம் எபிலாக் தான். அவ்வளவு தான், கதை முடிஞ்சிரும். நன்றி 💞
 

Shalini shalu

Moderator
அவர்களது அன்பின் தன்மையை அறிந்து, உள்ளம் பூரித்த, மௌனாவின் பெற்றோரான அன்னபூரணி மற்றும் சிவமணியும்,

"கண்டிப்பாக சம்பந்தி" என்று மஹதனின் தாய், தந்தையின் அழைப்பை ஏற்றுப் புன்னகைத்தார்கள்.

அவர்களுக்குக் குடிக்க எடுத்து வரச் சென்ற அகதாவை அழைத்து,
"நீ எங்கே சமையல்கட்டிலேயே இருந்துக்கலாம்னு முடிவே செய்துட்டியா? பேசாமல் உட்கார்!" என அவளை அழைத்து தன்னுடன் அமர வைத்துக் கொண்டார் அன்னபூரணி.

"இவங்க கூட ஊருக்குப் போயிட்டு, வேலை மட்டுமே பார்க்கனும்னு முடிவு செய்திருக்கியா அகதா?" என அவளிடம் கேட்டார் கௌசல்யா.

அதில் சங்கடமாகப் புன்னகை செய்த அகதாவோ,"ஆமாம் மா. வேற என்ன செய்ய?" என்று வெற்றுப் பார்வையுடன் சொன்னாள்.

"அடுத்து வாழ்க்கையில் இன்னும் நீ இன்னும் உனக்கான நல்ல விஷயங்களைப் பார்க்கவே இல்லைடா! இப்போதைக்கு ஒரு பிரேக் எடுத்துக்கோ. உனக்கா தோனும்! சான்ஸ் கிடைக்கும். அதை யூஸ் பண்ணிக்க மட்டும், தயங்காதே!" என்று சரியான அறிவுரை ஒன்றை அவளுக்குக் கொடுத்தார் மஹதனின் அன்னை.

அகதாவின் தயக்கமும், சங்கடமும் தீபக்கால் வந்தது என்பதை, அவளது தோழியும், தோழியின் கணவனும் அறிந்ததால், "நீங்க நாளைக்கு ஃப்ரீயா இருப்பீங்களா அகதா?" என்று அவளிடம் வினவினான் மஹதன்.

திடுமென அவன் கேட்டதில், பாவையவளுக்கு விழிகள் தெறித்தது.

"ஹாங்! யெஸ் மஹதன்" என்று திடுக்கிட்டுப் போனப் பார்வையுடன் தோழியை ஏறிட்டாள் அகதா.

"ஒரு காரணத்துக்காகத் தான் அவர் உன்கிட்ட அதைக் கேட்டார் அகி! ஆனால், நீ பயப்பட்றதுக்கு ஒன்னுமில்லை. நாளைக்கு ஒரு இடத்துக்குப் போகனும். நானும் உங்க கூட வருவேன். கிஷானும், முகியும் கூட வருவாங்க. சரியா?" என்று நண்பியிடம் விளக்கிக் கூறினாள் மௌனா.

"எங்கே போறோம்?" என்று புரியாமல் கேட்டாள் அகதா.

"எல்லாம் உனக்காக நாங்கச் செய்யப் போகிற விஷயத்துக்குத் தான்" என்றாள்.

"அதான் என்ன?" என மௌனாவிடம் கேட்க,

"இப்போவே சொல்லனுமா அகி?"

"சொன்னால் பிரிப்பேர் ஆகிடுவேன். அதான்" என்று கூறினாள் அகதா.

"சொல்லாமல் கூப்பிட்டுப் போனால் தான் எல்லாருக்கும் நல்லது" என்று நிதானமாக உரைத்தான் மஹதன்.

அவன் அப்படிக் கூறிய தினுசில், மௌனாவைப் பார்த்துப் பரிதாபமாக விழித்தாள் அகதா.

"எந்தச் சாய்ஸூம் இல்லை அகி" என்று அவளும் பிடி கொடுக்காமல் பதிலளிக்கவும், தொய்ந்து போய் அமர்ந்து விட்டாள் இவள்.

"ஓகே…!" என்று அமைதியாகி விட்டாள்.

இவர்களது சம்பாஷணைகளை அவதானித்துக் கொண்டிருந்தப் பெற்றவர்கள், அகதா எனும் போது, அது எதற்கான அழைப்பாக இருக்கும் என்பதை அறியாதவர்களா அவர்கள்?

அகதாவின் மனநிலையை மாற்றும் விதமாக,"பசிக்குது சம்பந்தி. சாப்பாடு போடுங்க" என்றார் திருமூர்த்தி.

அதற்குப் பின்னர் தான், இன்னும் அனைவருக்கும் உணவளிக்கவில்லை என்பதை உணர்ந்தவர்களாக, அவர்களுக்குச் சாப்பாடு பரிமாறினர்.

அன்னை மற்றும் தந்தையுடன் இழையவில்லை என்றாலும், அவர்களது அருகாமையில், மனம் தணிந்து காணப்பட்டாள் மௌனா. அவர்கள் அருகிலேயே தான் அமர்ந்து உணவுண்டாள்.

அவளுக்கு ஆறுதல் அளிக்க வேண்டுமென்ற அவசியமில்லை என்பதைப் போல, மௌனமாக இருந்தாள் மௌனா.

அங்கிருந்து கிளம்பும் போது, மஹதனும், மௌனாவும் அன்னபூரணி மற்றும் சிவமணியின் பாதங்களில் பணிந்து எழுந்து விட்டுச் சென்றனர்.

அகதா,"அவ நார்மலா இருக்கா ம்மா! நீங்க தான் பதறுறீங்க!" என அன்னபூரணியிடம் சொல்ல,

"இல்லைடா ம்மா. அவ எதையும் வெளியே காட்டக் கூடாதுன்னு, மெச்சூர்ட் ஆக நடந்துக்க டிரை பண்றா" என்றார் சிவமணி.

—---------------------

"ஆமாடா. இப்போ தான் வந்தோம். மறு வீட்டுக்கு நாள் சொல்லியாச்சு" என்று நண்பனிடம் பேசிக் கொண்டு இருந்தான் மஹதன்.

"நானும், முகியும் விருந்துக்கு வர்றோம்" என்று அழையா விருந்தாளிகளாகத் தாங்கள் வரலாமா? என்று வினவினான் கிஷான்.

"வரலாமே! உனக்கு நான்வெஜ்ஜில் எல்லா வெரைட்டியும் கிடைக்கும்" என்று அவனிடம் சொன்னான் மஹதன்.

"நாங்க கல்யாணம் தான் பண்ணிக்கலை. ஆனால், எல்லா சடங்கையும் அட்டெண்ட் செய்துட்டு இருக்கோம். இப்போ மறு வீட்டுக்குக் கூட, வரப் போறோம்!" என்று அவனிடம் கூறிச் சிரித்தான் கிஷான்.

"ஆஹான்! அடுத்த வாரம் கிளம்பி வாங்கடா" என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான் மஹதன்.

"டேய்! மருமகளைப் போய்ப் பாரு" என அவ்விடத்திற்கு வந்த மகனை, மௌனாவிடம் அனுப்பினார் கௌசல்யா.

திருமணத்தில் இருந்து இப்போது வரை புடவையில் வலம் வந்த மனைவியை இன்று தான், ரசித்துப் பார்க்கிறேன் மஹதன்.

ஏனெனில், பெரும்பாலும் அனைவரும் அவர்களைச் சூழ்ந்து இருப்பார்கள், அப்போது கள்ளத்தனமாக அவளை ரசிப்பது எல்லாம் அவனுக்குக் கை வந்தக் கலை இல்லை. அதைச் செய்யவும் மாட்டான் மஹதன்.

இப்போது, நேரிடையாகவே மனைவியின் புற அழகை ரசித்தவன்,
பின்னிருந்து மென்மையாக அவளைத் தன் கை வளைவிற்குள் கொண்டு வந்ததும்,

"ஹாங்! என்னங்க!" என்றதொரு திகைப்பில் ஆழ்ந்திருந்தாள் மௌனா.

"என்ன?" என்று இவனும் திருப்பிக் கேட்க,

"ஏதோ யோசனையில்…" என்றிருந்தாள் மௌனா.

"நாம ஹனிமூன் போகிற வரை, இப்படி கொஞ்சல் எல்லாம் நடக்கும். நீ எதுவும் பயந்துடாத ம்மா. உனக்குக் கிஸ் கூட இன்னும் நான் கொடுத்தது இல்லை" எனப் பாவமாக மனைவியிடம் கூறினான் மஹதன்.

அவர்களது காதல் இப்படித் தான் இருந்தது. மெய் தொட்டு, இதழ் உரசி எல்லாம் நேசத்தை வளர்க்கவில்லை இருவரும்.

விழிகள் மட்டுமே ஒன்றுக்கொன்று சளிக்காமல் தழுவிக் கொண்டு இருந்தது.

இந்தச் சமயத்தில், உதடுகளை உரச விட்டுக் கொள்ளத் தோன்றியது மஹதனுக்கு. அது மௌனாவுக்கு இடைஞ்சலாக இருக்குமோ? என்ற எண்ணமும் எழுந்தது அவனுக்குள்.

"மஹி!" என்று கணவனை விளித்தவள்,

அவன் எதிர்பாராமல் இதழ்களை, மஹதனுடைய இதழில் படர விட்டாள் மௌனா.

அவனுடைய மறுமொழி என்னவாக இருக்கும் என்பதெல்லாம் அவளுக்குக் கவலையே இல்லை. தனக்கான ஆறுதல் அவனிடத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்த்து தான் இதைச் செய்கிறாள் மஹதனுடைய மனைவி.

இதழ் அழுத்தம் இன்னும் கூடியபடி இருக்க, அவளுக்குத் தனது உதடுகளைப் பத்திரம் எழுதிக் கொடுத்து விட்டு, அமைதியாக இருந்து விட்டான் கணவன்.

அவ்விதழ்களின் மோதல்கள் அடங்கியதும்,

"சாரி மஹி.." எனத் தடுமாறினாள் மௌனா.

"இல்லை ம்மா! எனக்கும் இந்தக் கிஸ் தேவைப்பட்டுச்சு" என்று கூறி அவளது கன்னத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான் மஹதன்.

"நானும் ஒரு கிஸ் கொடுத்துக்கிறேன்டா" என நொடிப்பொழுதில், அவளது அதரங்களைத் தன்னுடைய உதடுகளால் வதைத்தான் மஹதன்.

மணித்துளிகள் சில கடந்ததும், தங்களைச் சரிபடுத்திக் கொண்டு, கட்டிலில் அமர்ந்தார்கள் தம்பதியர்.

அவர்களது பேச்சும், சிரிப்பும் அவ்வறையை நிறைத்தது.

"மறு வீட்டுக்கா?" என்று கிஷானிடம் கேட்டாள் முக்தா.

"ஆமாம் முகி. நீயும் வா" என்று அவளையும் அழைத்தான் கிஷான்.

"சரிங்க. அப்படியே நாமளும் நம்ம வீட்டுக்கு அவங்களைக் கூப்பிடனும்" என்றாள்.

"ஓகே முகி"

__________________

காயங்கள் மற்றும் கட்டுக்குள் நிறைந்து, முகம் விகாரமாக இருக்க, உதடுகள் இறுகித் தன்னை வெறித்துக் கொண்டிருந்தவனைப் பார்த்ததும் நடுக்கம் கொண்டாள் அகதா.

"மேடம்! என்னப் பார்க்க வந்திருக்கீங்களே! என்ன விஷயம்?" என்று வேதனை மற்றும் வலியின் உச்சியில் இருந்தாலும், அவளைக் கேலி செய்ய மறக்கவில்லை அவன்.

அவளது பின்னாலிருந்த மௌனா,"ப்ச்! உன்னை எப்படி கிண்டல் பண்றான் பாரு? ஏதாவது திருப்பிப் பேசு!" என அவளை உந்தினாள் மௌனா.

அங்கு கிஷானும், மஹதனும் இருந்தார்கள். ஆனால், அவ்விரு பெண்களுக்கும் ஏதும் கேடு நேராமல் இருக்கும் வரை, தங்களை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார்கள் அவ்விரு ஆடவர்களும்.

"ஹேய் அகி!" என்று அவளை மேலும் உலுக்கினாள் மௌனா.

"ஹாங்! என்னக் கேட்ட?" என்று எதிரில் இருப்பவனிடம் அழுத்தமாக வினவினாள் அகதா.

"என்னத் திடீர்னு இங்கே உங்க விசிட்?" என்று திமிராக கேட்டான் தீபக்.

"உன்னோட நிலைமையைப் பார்த்து சந்தோஷப்பட வந்தேன்!" என்று விறைப்பாக பதில் சொன்னாள்.

"ஓஹ்! என்னை வெளியே விடச் சொல்லுடி!" என்று உடனே உரக்க கத்தி அவளுக்குக் கட்டளையிட்டான்.

"எதுக்குடா சொல்லனும்? ஆங்! நான் எதுக்கு அதைச் சொல்லனும்?" எனத் தெனாவெட்டாக வினவினாள் அகதா.

சிறிது நேரத்திற்கு முன், தன்னைப் பார்த்து நடுங்கியவளோ, இப்போது, எதிர்த்துக் கேள்வி கேட்டுக் குதிப்பதைக் கண்டு வெறியாகிப் போய், "ச்சை! உன்னால், என்கிட்ட இருந்த எல்லாமே போச்சுடி! சரியான ராசி கெட்டவளே!" என்று வாய்க்கு வந்ததைக் கூறி அவளது மனதை உடைத்தான் தீபக்.

"நீயெல்லாம் இப்படி என்னைப் பேசி அடக்கி வச்சதால் தான், அவ்வளவு படிச்சு இருந்தும், உனக்கும், உன் அம்மாவுக்கும் அடங்கிப் போய் இருந்தேன் டா! என்னை இப்படி சொல்றியே? நீ ஒரு வேலைக்குப் போய் உங்கம்மாவுக்குச் சோறு போட முடிஞ்சுதா? நான் வந்த அப்பறம், அவங்களை அம்போன்னு விட்டுட்டியாம்! வேலைக்குப் போகாமல், சம்பாதிக்காமல், என்னைப் பழி வாங்கனும்னு வெறிப் பிடிச்சு சுத்திக்கிட்டு இருந்தியாம்?" என்று அவள் எகிறிப் பேசவும்,

அகதாவை அடக்கவியலாமல், தன் கைகள் கட்டப்பட்டு இருப்பதை ஆத்திரத்துடன் உறுத்து விழித்தான் தீபக்.

"டேய்! நீ என்னக் கோபப்பட்டாலும், உன்னால் என்னைப் பழி வாங்க யோசிக்கக் கூட முடியாது! இங்கேயே கிடந்து சாவு!" என்று தன் மனத்தாங்கல் அனைத்தையும் அவனிடம் சொல்லி ஆற்றிக் கொண்டாள் அகதா.

"ஹேய்…!" என்றவனது காட்டுக் கத்தலில், தோழிக்கு உதவியாக வந்து நின்றாள் மௌனா.

அவளைப் பார்த்ததும்,"என்னப் புதுப் பொண்ணு, உன் புருஷனும் வந்திருப்பானே? எங்க காணோம்?" என்று கண்களால் துழாவினான் தீபக்.

"இருக்கேன் டா!" என மறைவிலிருந்து வெளிப்பட்டான் மஹதன்.

அவனுடன் கிஷானும் வெளியே வரவும்,

"இந்தா வந்துட்டானுங்கள்ல! உங்களோட பாடிகார்ட்ஸ்!" என எக்காளமிட்டான் தீபக்.

"இப்படியே டயலாக் பேச விட்டால், வேலைக்கு ஆகாது. கிஷான்! இவனைக் கையைக் காலை முறிச்சு விடு. ஹாஸ்பிடல் மட்டுமே இவனுக்கு வீடாக இருக்கனும்!" என்றான் மஹதன்.

"உங்க அம்மா கூட, அவங்க நிலைமையைப் புரிஞ்சிக்கிட்டு, வீட்டு வேலையைப் பார்த்து தன் வயிறை நிரப்பிக்கிறாங்கடா! நீ திருந்தவே மாட்டல்ல?" என்றவன்,

"மௌனா! அகதா! ரெண்டு பேரும், வீட்டுக்குக் கிளம்புங்க! நாங்க இவனைக் கவனிச்சுட்டு வர்றோம்" என்று அவர்களைக் காரில் அனுப்பி வைத்தார்கள் மஹதனும், கிஷானும்.

மகிழுந்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது, "இப்போ தான், எனக்கு நிம்மதியாக இருக்கு மௌனா. உனக்கும், உன் ஹஸ்பண்ட் அண்ட் கிஷானுக்கும் ரொம்ப தாங்க்ஸ் ம்மா!" என்று கண்ணீர் மல்க நன்றி கூறினாள் அகதா.

சற்று முன்னர், பேசியவை எல்லாம், மௌனா முதல் கிஷான் வரை தீபக்கிடம் கூறி, அவனைத் திட்டிய அதே சொற்றொடர்கள் தான்! ஆனால், அகதாவின் வாயிலாக வரும் போது, அவளுடைய ஆற்றாமைகள் அனைத்தும், வெளிப்பட்டு, இதன் மூலம், அவளுக்கு நிம்மதி கிடைத்தது.
இன்றுடன் அதற்கு முற்றுப்புள்ளியும் வைக்கப்பட்டு விட்டாயிற்று.
____________

"இங்கேயே உன்னை அடைச்சு வைக்கலாம்னு இருந்தால், உன் வாயால் நீயே ஆப்பு வச்சுக்கிற! இனிமேல் இந்த தண்டனையும் உனக்கு இல்லை. வேற புதுசாக தான் தண்டனைக் கொடுக்கப் போறோம்!" என்ற கிஷானும், மஹதனும்,

அவர்களது அடியாட்களை அழைத்து,"இவனைக் கையைக், காலை உடைச்சு, உருத் தெரியாமல், ஹாஸ்பிடலில் கொண்டு போய்ப் போடுங்க. காயம் ஆற, ஆற மறுபடியும் அதை ஏற்படுத்துங்க! வெளியே நடமாடவே முடியாமல் இருக்கனும்!" என்று கட்டளை இட்டவர்களிடம், கெஞ்சத் தான் முடிந்தது தீபக்கால்.

ஆனால், இவனது அட்டூழியங்கள் நிற்காமல், தொடரும் என்பதால், அதைக் காதில் வாங்காமல், அவ்விடத்தை விட்டு வெளியேறினர் நண்பர்கள் இருவரும்.

அகதாவின் வாழ்க்கையில் இருந்து, தீபக்கும், அவனது தாயார் லலிதாவும், இவர்களால் அகற்றப்பட்டு, அவளது எதிர்கால வாழ்க்கைக்காக அஸ்திவாரம் போட்டுக் கொடுக்கப்பட்டது.
___________________

மஹதனும், கிஷானும் தத்தமது குடும்பத்திற்கு அனைத்தையும் தெரிவித்தனர்.

அதற்குப் பிறகு, மஹதன் மற்றும் மௌனாவின் மறு வீட்டு விருந்திற்கான ஏற்பாடுகளைத் துவங்கி விட்டனர்.

இதற்கிடையே, முக்தாவைத் தனியாக அழைத்துப் பேசிக் கொண்டு இருந்தான் கிஷான்.

காருக்குள் அமர்ந்திருந்தவர்கள்,"இந்தா முகி!" என்று அவளிடம் ஒரு கவரைக் கொடுத்தான்.

அதை வாங்கிப் பிரித்து, உள்ளிருந்த கடிதத்தை எடுத்துப் படித்தாள் முக்தா.

அதிலுள்ள செய்தி, அவளது மகிழ்ச்சியைத் தூண்டியது.

"இது உன்னோட குவாலிஃபிகேஷனுக்கானப் பர்ஃபெக்ட் ஜாப் முகி. நம்ம மேரேஜ் முடிஞ்சதும், அஃபிஷியல் ஆக அனவுன்ஸ் செய்ததும், ஜாயின் பண்ணிக்கோ!" என்று கூறி மென்னகை புரிந்தான் கிஷான்.

"தாங்க்யூ சோ மச்!" என்று அவனது கன்னத்தை ஈரப்படுத்தினாள் முக்தா.

அதைக் கன்னம் சிவக்கப் பெற்றுக் கொண்டான் கிஷான்.

இவர்கள் தான் அடுத்தக் கல்யாண ஜோடிகளாயிற்றே!
________________

"எல்லா வெரைட்டியையும் இலையில் வைங்க! எனக்குக் கேட்கக் கூச்சமே இல்லை ம்மா!" என்று கௌசல்யாவிடம் கேட்டு வாங்கி உண்டான் கிஷான்.

அவனுக்கு இணையாக, அருகே அமர்ந்து, தன்னுடைய இலையை நிறைந்திருந்த அசைவ உணவு வகைகளைப் பதம் பார்த்தாள் முக்தா.

"நமக்குக் கொடுத்திருக்கிற விருந்துக்கு வந்துட்டு, இவன் நாட்டாமை பண்ணிட்டு இருக்கான் பாரு!" என்று நண்பனைக் காட்டிக் கூறித் தன் மனைவியிடம் முறையிட்டான் மஹதன்.

இவர்களது திருமணம் தொடங்கியதில் இருந்து, இவ்விருவரின் அலும்புகளை மொத்தக் குடும்பமும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் அல்லவா?

"கேட்டால், நாங்க நோட்ஸ் எடுக்கிறோம், எங்க கல்யாணத்துக்கு உதவும்னு சொல்றது!" என்று அவர்களது பதிலைத் தானே உரைத்தாள் அகதா.

"ஹாஹா!" என்று அதற்கும் சிரித்தபடியே உணவுண்டு முடித்தனர் கிஷானும், முக்தாவும்.

மஹதன் மற்றும் மௌனாவிற்கு இரு வீட்டாரும் மறு வீட்டு விருந்து கொடுத்து முடித்ததும், அவர்களைத் தன் வீட்டிற்கு விருந்திற்காக அழைத்திருந்தவள், தானே உணவைப் பரிமாறினாள் முக்தா.

தம்பதியுடன், நீலகண்டனும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

"நீயும் உட்காரு டா" என்றார் மகளிடம்.

"இதோ ப்பா" என்று தந்தையின் அருகில் அமர்ந்து கொண்டு தனக்காகத் தட்டில் உணவை எடுத்துக் கொண்டாள் முக்தா.

அவளுக்கும், நீலகண்டனுக்கும் என்ன ஆச்சரியம் என்றால், தாங்களும், குடும்பமும் இழுத்து இழுப்புக்கு எல்லாம், மஹதன் வளைந்து கொடுக்கிறான் என்பது தான்!

விருந்திற்கு அழைப்பு விடுப்பது மற்றும் மத்த சம்பிரதாயங்களை, யார் சொன்னாலும் எதிர்த்துப் பேசாமல், அப்படியே செய்யும் அவனது சுபாவம் வியப்பைத் தராமல் இருக்குமா?

தன் மகளிடம் சுமூகமாகப் பேசும் மஹதனை வியப்பாகப் பார்த்து வைத்தார் நீலகண்டன்.

"மஹதன்! உங்களை நான் வற்புறுத்திக் கூப்பிட்டுட்டேனா என்ன?" என்று அவனிடம் கேட்டாள் முக்தா.

அதைக் கேட்டு இருவரும் நிமிர்ந்து பார்க்க,"இல்லை, அமைதியாகவே இருக்கீங்களே! ஒருவேளை இந்த விருந்து பிடிக்கலையோன்னு தோனுச்சு! அதான்" என்றாள்.

"பிடிச்சிருக்கு முக்தா. இல்லைன்னா வந்திருக்கவே மாட்டேனே!" என்று அவனும் சளைக்காமல் பதில் தந்தான்.

மௌனாவும்,"அவரும், நானும் சந்தோஷமாகத் தான் இங்கே வந்திருக்கோம் முகி! இப்படியெல்லாம் நினைக்காதீங்க!" என்று அவளிடம் சொன்னாள்.

"அப்போ ஓகே! இங்கே முடிஞ்சதும், அங்கே கிஷானும் உங்களுக்காக வெயிட் பண்ணுவார்! மறந்துடாதீங்க!" என்று விழிகளை உருட்டி அவர்களைப் பயமுறுத்திப் பார்த்தாள் முக்தா.

"ஆமாம். அவனும் அழைச்சு இருக்கான். அங்கேயும் போயிட்டுத் தான் வீட்டுக்குக் கிளம்பனும்" என்றான் மஹதன்.

தங்களது வயிற்றுக்கு வேட்டு வைக்காமல், சமைத்து வைக்குமாறு கூறி இருந்தார்கள் கிஷானிடத்தில்.

"கொஞ்சம் இருங்க" என்று அவர்களுக்கு, உடைகளுடன், ஒரு சில பொருட்களைத், தட்டில் வைத்துக் கொண்டு வந்தார் நீலகண்டன்.

இதெல்லாம் அவருக்குத் தெரியாது! ஆனால், பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு, மஹதனுக்கும், மௌனாவிற்கும் கொண்டு வந்து கொடுத்தார்.

"வாங்கிக்கோங்க" எனப் புன்னகை
யுடன் அவர்களது கைகளில் தந்தார் நீலகண்டன்.

வெகு ஆச்சரியத்துடன் அதைப் பெற்றுக் கொண்டனர் மஹதன் மற்றும் மௌனா.

"எங்க வீட்டு விருந்தோம்பல்" என்று தன் பாதங்களில் விழுந்து எழுந்த இருவரிடமும் கூறி, அவர்களுக்கு நல்லாசி வழங்கினார் நீலகண்டன்.

- தொடரும்
 

Shalini shalu

Moderator
முக்தாவுடைய வீட்டிலிருந்து சென்றவர்களின் கார் ஒரு ஓரமாக நின்றது.


"மஹி! இனி, ரெண்டு நாளில், கிஷான் அண்ணாவோட வீட்டுக்குப் போகனும்" என்றாள் மௌனா.


அசைவ உணவுகளை உண்டு கொண்டே இருந்ததாலும், வயிறும், மனதும் நிறைந்ததால், களைப்பாய்த் தெரிந்தாள் அவள்.


அவளுக்கும் இணையாக, மஹதனும் அந்த நிலையில் தான் இருக்கிறான்.


"டயர்ட் ஆக இருக்கு ம்மா" என்று வாய் விட்டே கூறி விட்டான் அவளது கணவன்.


"எனக்கும் மஹி" என்று சினுங்கினாள் மௌனா.


"டிரைவரையே காரை ஓட்ட வச்சிருக்கலாமோ?" என்று அவளிடம் கேட்டாலும், தனது களைப்பை ஓரம் தள்ளி விட்டு, சாலை விதிகளைப் பின்பற்றி, மகிழுந்தை இயக்கி, மனைவியுடன் பத்திரமாக வீட்டிற்கு வந்து சேர்ந்தான் மஹதன்.


செக்யூரிட்டி காம்பவுண்ட் கேட்டைத் திறந்ததும், காரை அதற்குரிய இடத்தில் நிறுத்தி விட்டு, மனைவியைக் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டு வந்த மகனைப் பார்த்ததும்,


"என்னாச்சு?" என்று மௌனாவைத் தாங்கிக் கொண்டார் கௌசல்யா.


"சாப்பிட்டு, சாப்பிட்டு டயர்ட் ஆகிட்டோம் மா!" என்றான் மஹதன்.


"ஆமாம் அத்தை" என அவரது மருமகளும் கூற,


"வந்து உட்காருங்க" என்று அவர்களை உள்ளே அனுமதித்து, மகன் மற்றும் மருமகளுக்காக, எலுமிச்சைப் பழச்சாற்றைக் கொண்டு வந்து கொடுத்தவர்,


இன்னும் ஒருவருடைய வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதும் அவருக்கு நினைவிருக்க,"இதுக்கப்புறம் ரெஸ்ட் எடுத்துட்டுப், பிரஸ் மீட் - டை முடிச்சுட்டு, ஹனிமூனுக்குப் போயிடுங்க" என அவர்களுக்கு வலியுறுத்தினார் கௌசல்யா.


"ஓகே ம்மா"


அலுவலகப் பணிகள் யாவும் தனக்காக காத்திருப்பதால்,"நான் போய் வொர்க் பண்றேன் டா. அங்கே எதுவும் கன்ட்ரோலில் இருக்கான்னுப் பார்க்கனும்" என்று மனைவியிடம் கூறினான் மஹதன்.


"அப்போ நானு ங்க?" எனப் பரிதாபமாக வினவினாள் மௌனா.


"பேசாமல் கிஷானோட ஆஃபீஸூக்குப் போய் உன் வொர்க்கைப் பாரு!"


"அம்மாவும், அத்தையும் என்னைப் பிச்சிடுவாங்க!"


"என்னையும் தான்! எப்படியாவது கன்வின்ஸ் பண்ணுவோம்" என்றான் மஹதன்.


"ம்மா! ஆஃபீஸூக்கு…" என்றவன் ஆரம்பிக்கும் போதே,


"எங்கேயும் போகக் கூடாது. அவளுக்கும், உனக்கும் ஈக்வல் ரூல் தான். ரெண்டு பேரும் ஓடிருங்க!" என்று அவர்களை அனுப்பி வைத்தார் கௌசல்யா.


இதையே தான், மௌனாவின் தாயான அன்னபூரணியும், மகளுக்கு உத்தரவிட்டு இருந்தார்.


அந்த உத்தரவை ஏற்றுக் கொண்ட இருவரும். தங்களுடைய அலுவலை வீட்டிற்குள்ளேயே முடித்துக் கொண்டனர்.


கிஷானுடைய வீட்டை அடைந்ததும், காரை நிறுத்தி, இருவரும் இறங்கிச் சென்றனர்.


"வாங்க மாப்பிள்ளை, வாங்க சிஸ்டர்" என்று முகமெல்லாம் புன்னகையுடன் அவர்களை வரவேற்றான் கிஷான்.


"ஹாய்" என்றவாறு மஹதனும், மௌனாவும் இல்லத்தினுள் நுழைந்தனர்.


"டைனிங் டேபிளை செட் பண்ணனும். பாத்திரங்களைத் தயாராக வைங்க" என்று பணியாளர்களுக்கு உத்தரவிட்டுக் கொண்டிருந்தார் சித்ரலேகா.


"டேய்! சத்தியமாக எங்களால் நிறைய சாப்பிட முடியாது. அதுவும் நான்வெஜ் வேற! பாத்து செய்டா" என்று நண்பனிடம் கெஞ்சினான் மஹதன்.


"ஆமாம் ண்ணா. இன்னும் விட்டால், வயிறு வெடிச்சிடும்!" என்று கதறினாள் மௌனா.


"சரி சரி. கதறாதீங்க. வெஜ் தான் சமைச்சிருக்கோம். அதுவும் லைட் ஃபுட்" என்றவன்,


"ம்மா! மஹதனும், மௌனாவும் வந்துட்டாங்க" என்று தன் அன்னையை அழைத்தான் கிஷான்.


பணியாளர்களுக்கான வேலையைக் கொடுத்து விட்டு, இவர்களை வரவேற்க வந்தவர்,


"வாங்க டா ம்மா" என அவ்விருவரையும் அழைத்து, முதலில் உட்கார வைத்தவர்,


"தண்ணீர் குடிங்க. நான்வெஜ் இல்லை. வெஜ் தான் செஞ்சிருக்கேன்" என்று கூறி, மஹதன் மற்றும் மௌனாவின் வயிற்றில் பாலை வார்த்தார் சித்ரலேகா.


"தாங்க்யூ ம்மா" என்று நன்றி கூறியவன், நண்பனை அருகில் அழைத்து,"நான் சொன்ன மெனு தான?" என்று அவனிடம் கேட்டு, உறுதிப்படுத்திக் கொண்டான் மஹதன்.


"அதே தான்டா!" என்ற கிஷான், அவர்களிருவரையும் டைனிங் டேபிளுக்கு அழைத்து வந்தான்.


அவர்களிடம் வாக்களித்தவாறே, மஹதன் சொன்ன சாப்பாடு வகையறாக்களைத் தான் சமைத்து வைத்திருந்தனர்.


அதைப் பார்த்ததும், முகத்தில் அடித்தாற் போல இல்லாமலும், சைவ உணவுகளாக இருக்கவும், திருப்தியானப் பார்வையைப் பரிமாறியவாறு உண்ணத் தொடங்கினர் மௌனாவும், மஹதனும்.


"உங்கப்பா எங்கேடா?"


"அவர் ஆஃப்ஸூக்குப் போயாச்சு" என்றான் கிஷான்.


"அவரும், எங்கப்பாவும் கூட வேலையைப் பார்க்கப் போய்ட்டாங்க! நான் மட்டும் தான் இன்னும் கம்பெனி பக்கமே போகாமல் இருக்கேன்!" என்று முணுமுணுத்தவாறு சாப்பிட்டான் மஹதன்.


"வீட்டிலேயும் கேட்டுப் பார்த்தார். அத்தை இவரை வெளியே போகவே விடலை ண்ணா!" என்று கூறிச் சிரித்தாள் மௌனா.


அதைக் கேட்டதும் சித்ரலேகாவிற்கும் சிரிப்பு பொங்கி வந்து விட்டது.


"ஹாஹா! நானும் நம்ம ஹோட்டலுக்குப் போயிட்டு இருக்கேனே! நீங்க வந்தீங்கன்னு தான், இன்னைக்கு லீவ்" என்று ஒழுங்கு காட்டி அவனுக்கு வெறி ஏற்றினான் கிஷான்.


மௌனாவின் முகம் கூம்பி போய் விட்டது அவன் சொன்னதைக் கேட்டு.


ஏனெனில், அந்த விடுதியில் தானே, அவள் வேலை செய்கிறாள்.


அதைப் புரிந்து கொண்ட கிஷான்,"நீ கவலைப்படாதே ம்மா. உன் வேலை அங்கேயே தான் இருக்கு. ஹனிமூன் முடிச்சுட்டு வந்து ரீ - ஜாயின் செய்துக்கோ!" என்று அவளுக்கு உறுதி அளித்தான்.


"தாங்க்யூ ண்ணா" என்று நிம்மதியாக கணவனுடன் உணவுண்டு முடித்தாள் மௌனா.


"நானும் அங்கே பார்ட்னர் தான்! அப்பப்போ வருவேன்!" என்று விஷமத்துடன் கூறினான் மஹதன்.


அப்போதும், இப்போதும், எப்போதும் இந்த வாக்கியத்தை மட்டும் மறக்காமல் கூறி விடுவான் அவன்.


அப்படிச் சொல்ல மட்டும் செய்யாது, தனது மனம் கவர்ந்த மங்கையைப் பார்க்க வந்து விடுவான் அவர்களது தங்கும் விடுதிக்கு.


அவர்களுக்கு ஜீரணமாக ஏதுவான பானம் ஒன்றையும் வழங்கினர் சித்ரலேகாவும், கிஷானும்.


இப்படியாக, புகுந்த வீடு மற்றும் சொந்தங்கள் மட்டும் அல்லாமல், தங்களது நண்பர்கள் வீட்டினர் வழங்கிய, மறு வீட்டு விருந்தில் கலந்து கொண்டு, அதை வெற்றிகரமாக முடித்தனர் மஹதன் மற்றும் மௌனா.


"இங்கே ஹனிமூனுக்குப் போகலாம்னு டிஸைட் செய்திருக்கீங்க?" என்று வினவினார் கௌசல்யா.


தாங்கள் யோசித்து வைத்திருந்த நாட்டின் பெயரைச் சொல்லவும்,"நானே டிக்கெட் புக் செய்துடறேன். நீங்க பிரஸ் மீட்டுக்கு ரெடியாகுங்க" என்று கூறி, அதைச் செயல்படுத்தினார் திருமூர்த்தி.


இதைக் கிஷானிடம் சொன்ன மஹதன்,"நீயும், முகியும் கூட வந்துருங்க டா!" என்று அவனிடம் கூறினான்.


"டேய்! நாங்க உங்களை ஃபாலோவ் பண்ண மாட்டோம். டிஃப்ரன்ட் ஆக யோசிப்போம்" என்றான் கிஷான்.


"ஓஹோ! அப்போ இதுவரைக்கும் அப்படித் தான், வித்தியாசமாக யோசிச்சீங்களா பார்ட்னர்?" என்று நண்பனைக் கிண்டலடித்தான் மஹதன்.


"யெஸ்" என்று பதிலளித்தான் கிஷான்.


மஹதன் மற்றும் மௌனாவின் திருமணத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் உலகிற்குச் சொல்ல வேண்டிய நாளும் வந்தது.


ஏற்கனவே, நேரலையில் பார்த்திருந்ததால், அதிலிருந்தும் சில கேள்விகளைக் கேட்டனர் பத்திரிக்கை நிருபர்கள்.


அவற்றிற்கு எல்லாம், மிகவும் பொறுமையாகப் பதில் கூறினர் மஹதனும், மௌனாவும்.


"இவங்க உங்க ஃப்ரண்ட் கிஷானோட ஹோட்டலில் ஃப்ரண்ட் ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்ட் ஆக வேலைப் பார்த்தவங்க தான?" என்று ஒருவர் கேட்கவும்,


"ஆமாம்" என்றான்.


மௌனாவைக் கேள்வி கேட்டால் மட்டும் பேச வேண்டும் எனக் கூறி இருந்தான் மஹதன்.


"அதுக்கு முன்னாடி, உங்க ஹோட்டலில் தான் வேலைப் பார்த்தாங்க. முதல் நாளிலேயே ஏதோ பிரச்சனை ஆகி, அங்கிருந்து ரிலீவ் ஆகிட்டாங்க. கரெக்ட் ஆ?" என்றார் மற்றொருவர்.


"கரெக்ட் தான்" என்று அவருக்குப் பதில் கூறி, மனைவியைப் பார்த்தான்.


அவளுக்கோ, இதில் முக்தாவின் பெயர் வந்து விட்டால், அவளைச் சமாதானம் செய்வது கடினம் என்பது தான் மனதினுள் நெருடிக் கொண்டிருந்தது.


"நீலகண்டன் சாரோட டாட்டர், முக்தா கூட தான பிராப்ளம் ஆச்சு?" என்று மௌனாவைக் கண்டு, அக்கேள்வியை உதிர்த்தான் அந்நிருபன்.


அவள் நினைத்தபடியே, முக்தாவின் பெயர் அடிபட்டு விட்டது. இப்போது என்னப் பதில் சொன்னால், அவளுக்கும் இழுக்கு வராமல் இருக்குமென யோசித்துப் பேச வந்தாள் மௌனா.


ஆனால், அதற்குள், "குறுக்கிடறதுக்கு மன்னிக்கவும். இது எங்களோட கல்யாணத்துக்கான அஃபிஷியல் அனவுன்ஸ்மென்ட்டுக்கானப் பிரஸ் மீட். இதில், மத்தவங்களை இன்வால்வ் பண்ண விரும்பலை. முக்தாவைப் பத்தின ஒரு அப்டேட் வரும். அதில் அவங்ககிட்டயே கேளுங்களேன்! என் வொய்ஃப்பை விட்டுடுங்க" என்று அழுத்தமாக உரைத்தான் மஹதன்.


"ஓகே சார். உங்களோட ஸ்டேட்டஸூக்குக் குறைவாக இருக்கிற பொண்ணைக் கல்யாணம் செய்துக்கக் காரணமென்ன?"


"இந்த ஸ்டேட்டஸ், பணத்தையெல்லாம் தாண்டி தான் நாங்க லவ் பண்ணிக் கல்யாணம் செய்ததால், இந்தக் கொஸ்டீன்ஸ் அநாவசியமானதுன்னு நினைக்கிறேன். சோ, எந்தப் பதிலும் எங்கிட்ட இல்லை" என்று தீர்க்கமாக கூறினான்.


"உங்க வொய்ஃப் கிட்டக் கேள்வி கேட்கலாமா?"


"யெஸ்.‌.. ஷ்யூர்" என்றான் மஹதன்.


"ஹலோ மேம்! காங்கிராட்ஸ்! உங்களோட கல்யாணம் நடந்து முடியிறதுக்குள்ளே என்னென்னப் பிரச்சனைகள் நடந்துச்சு? அதை எப்படி சால்வ் பண்ணீங்க?" என்ற கேள்வியை முன் வைத்தார் ஒரு நிருபர்.


"என்னது? நீங்களே எல்லாத்தையும் முடிவு செய்துப்பீங்களா?" என்றவள்,


கணவனின் புறம் திரும்பி,"ஏங்க அவர் சொன்னதைக் கேட்டீங்களா?" என்று சிரித்தாள் மௌனா.


"ஹாஹா! நீயே அதுக்குத் தெளிவானப் பதிலைச் சொல்லிடு ம்மா" என்று மனைவியைப் பேச விட்டு, அமைதியாகி விட்டான் மஹதன்.


"எங்க கல்யாணப் பேச்சு எடுத்ததில் இருந்து, இப்போ வரை, எந்த சண்டையும் வரவே இல்லை சார். என்னோட அப்பா, அம்மா அப்பறம் இவரோட பேரன்ட்ஸ், மட்டும் இல்லாமல், ஃப்ரண்ட்ஸ் கிட்ட இருந்து கூட, எந்த வித எதிர்ப்போ, சங்கடமோ வரலை. நாங்க எல்லாரும் என்ஜாய் பண்ணோம்" என்று மலர்ந்து விகசித்த வதனத்துடன் விவரித்தாள்.


அதிலேயே அவள் மற்றவரது உந்துதல் இன்றி, சுயமாகப் பேசுகிறாள் என்பதை உணர்ந்து கொண்ட நிருபர்கள் அடுத்தப் பேச்சை எடுத்தனர்.


"அந்தப் பிராப்ளத்தைப் பத்தி தான் பேசக் கூடாது. ஆனால், நீங்களும், முக்தாவும் ஃப்ரண்ட்ஸ் ஆக இருக்கீங்களா? ஏன்னா, அவங்க மேரேஜ் செய்துக்கப் போற கிஷான், உங்க ஹஸ்பண்டோட ஃப்ரண்ட்! அதான் கேட்டேன் மேம்!"


"நாங்க இப்போ பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ் ஆக இருக்கோம் சார். இனி, எப்பவும் அப்படியே தான் இருப்போம்!" என்று திட்டவட்டமாக கூறினாள் மௌனா‌.


இவர்களுடைய பேட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும், ஜோடிகளின் பதில்களைக் கேட்டு, மனம் குளிர்ந்து போயினர்.


அதுவும் முக்தாவிற்கு, மஹதன் மற்றும் மௌனாவின் விடைகள் புன்னகையைத் தருவித்தது.


இவர்களுக்கு அடுத்தபடியாகப் பேட்டிக் கொடுக்கத் தாயாராக இருந்தனர் கிஷானும், முக்தாவும்.


"வேற ஏதாவது கேள்விகள் இருக்கா?" என்று வாய் திறந்தான் மஹதன்.


அவர்களது நெற்றியடி பதில்களை எதிர் கொண்டதால்,"இல்லை சார். உங்களோட பேட்டி முடிஞ்சது" என இருவரையும் அனுப்பி விட்டனர்.


  • தொடரும்
 

Shalini shalu

Moderator
அவர்கள் அவ்விடம் விட்டுச் சென்றதும், தங்களது திருமணத்தைப் பற்றிய அறிவிப்பைக் கொடுக்க, வந்து அமர்ந்தனர் கிஷானும், முக்தாவும்.

அனைவருக்கும் வணக்கம் வைத்தவர்கள் பேச ஆரம்பிக்கும் முன்னர்,"உங்க கல்யாணமும் கூடிய விரைவில், நடக்கப் போகுது, அதைப் பத்தி சொல்லுங்க சார்" என்றான் ஒரு பத்திரிக்கையாளன்.

"யெஸ்!" என்று இருவரும் புன்னகைத்தனர்.

"முக்தா மேடம்!" என ஆரம்பித்தவரின் மீது கவனம் பதித்தாள்.

அவளை விடவும் கூரியப் பார்வையைக் கொண்டு இருந்தான் கிஷான்.

"ம்ம்… சொல்லுங்க சார்" என்று பதில் சொல்லத் தயாரானாள் முக்தா.

"நீங்களும், மிஸஸ்.மௌனா மேடமும் ஃப்ரண்ட்ஸ்ஸா?" என்று எடுத்தவுடனேயே இப்படியான கேள்வியை முன் வைத்தான்.

"ஆமாம். அதான் அவங்களே சொல்லிட்டாங்களே!" என்று சிரித்தாள்.

"ஆனால், அதுக்கு முன்னாடி, அவங்களைத் தாக்கினதுக்காக, உங்களை ஜெயிலுக்கு அனுப்பி வச்சாங்களே! அதைப் பத்தி சொல்லுங்க" என்று முக்தாவின் வாயைக் கிளறினார்கள்.

அந்தக் கேள்வியில், கோபத்தில் தன் கை முஷ்டியை மடக்கிக் கொண்டான் கிஷான்.

"யூ ஆர் கரெக்ட்! நான் அவங்ககிட்ட பிரச்சினை பண்ணேன். அவங்களை ஹர்ட் செய்தேன். அதனால், மிஸஸ்.மௌனா என்னைக் கம்ப்ளைனட் கொடுத்து ஜெயிலுக்குள்ளே அடைச்சாங்க" என்று சாதாரணமாக கூறினாள் முக்தா.

"இவங்க ஏன் இதையெல்லாம் சொல்லிட்டு இருக்காங்க?" என்று கணவனிடம் கேட்டாள் மௌனா.

"இதை சொல்லிட்டால், இனிமேல் இந்தக் கேள்வி எல்லாம் மறுபடியும் வராதுல்ல? அதான்" என்று அவளுக்கு விளக்கினான் மஹதன்.

அதற்கிடையில்,"எதனால் அப்படி பண்ணாங்கன்னு விளக்கமாகச் சொல்ல முடியுமா?" என்று வினவினார்கள்.

"நீங்க அவங்ககிட்ட கேட்டீங்களே? கல்யாணத்தில் ஸ்டேட்டஸ் பிரச்சனை வரலையான்னு, அது தான், என்னை அப்படி நடந்துக்க வச்சது! நான் மட்டுமே இந்த உலகத்தில் அதிசயப் பிறவியாக வந்து பிறந்திருக்கேன், எனக்குத் தான் எல்லாமே பெஸ்ட் ஆக கிடைக்கும்னு பேராசைப்பட்டேன். அதுக்குக் கிடைச்சத் தண்டனை தான் அந்தப் போலீஸ் கம்ப்ளைன்ட்!" என்று அலுங்காமல் உண்மையைக் கூறினாள் முக்தா.

"இதில் பெஸ்ட்ன்னு நீங்க சொன்னது, மஹதன் சாரைத் தான? ஏன்னா, நீங்க அவரைத் தான் காதலிச்சதாகவும், கல்யாணம் செய்துக்கப் போறதாகவும் உறுதியாக இருந்தீங்களாம்! அதுக்குக் குறுக்காக, மௌனா மேடம் வந்ததால் தான், உங்களை அரெஸ்ட் பண்ணாங்களாம்!" என்று அவள் காவல் நிலையத்திற்குச் சென்று வந்த நிகழ்வை, நினைவுபடுத்திக் கேட்டு, முக்தாவிடமிருந்து, அதன் உள்ளடக்கத்தைத் தெரிந்து கொள்ள முயற்சித்தனர்.

"ஆமாம்" என்றவளது ஒற்றை வார்த்தையில், அவ்விடமே அமைதி அடைந்து விட்டது.

அருகிலிருந்த கிஷான் கூட, இன்னும் இறுக்கம் தளராமல் அப்படியே இருந்தான்.

"அப்போ அவர் எனக்குப் பெஸ்ட்ன்னு நினைச்சேன். ஆனால், அவருக்கு என் மேல் லவ் இல்லவே இல்லை. ஒரு ஃபேமிலி ஃப்ரண்ட் ஆகத் தான் பார்த்தார்! நான் தான், அவரை லவ் பண்றேன்னு நினைச்சிட்டு சுத்தினேன். அதுவும் என்னோட தப்பு தான்! ஆனால், மஹதனோ, எனக்குப் புரிய வைக்க முயற்சி செய்தார், அதுக்கப்புறம் தான், எனக்கும் புத்தின்னு ஒன்னு இருக்கிறது ஞாபகம் வந்துச்சு! அப்பறம் எல்லாத்தையும் சரி செய்ய, டிரை பண்ணி, அதில் கொஞ்சம் சக்ஸஸூம் கிடைச்சிருச்சு!" என்று நேரானப் பார்வையுடன் கூறியவளை மெச்சிக் கொண்டான் கிஷான்.

அவன்‌ மட்டுமில்லாமல், முக்தாவின் தந்தையான நீலகண்டனும் மகளின் சாமர்த்தியத்தை எண்ணிப் பெருமிதம் அடைந்தார்.

"அதுக்கப்புறம் எப்படி கிஷானை லவ் பண்ணீங்க?" என்ற கேள்வியும் உடனே வந்தது.

"ஏன் மஹதன் எனக்கு 'நோ' சொன்னதும், உலகமே நின்னுருச்சா என்ன? எனக்கு லவ் வரவே கூடாதுன்னு ஏதாவது இருக்கா என்ன?" என்று கேட்டு விட்டுக் கிஷானைப் பார்த்தாள் முக்தா.

"இல்லை மேடம்" என்று அசடு வழியக் கூறினார் அந்த நிருபர்.

"உடனே, நான் கிஷானை லவ் பண்ணலை ங்க! அவரோட அப்ரோச் அண்ட் கேரக்டரைப் பார்த்து, புரிஞ்சிக்கிட்ட அப்பறம் தான், நானும் என் சம்மதத்தை சொன்னேன். இவர் எனக்கு லைஃப் பார்ட்னர் ஆக கிடைச்சதுக்கு ரொம்பவே சந்தோஷப்பட்றேன்!" என்று கூறி, தனது நேசம் வழியும் விழிகளுடன் தன்னவனைக் கண்டாள் முக்தா.

"ஆமாம். நான் தான், முக்தாவுக்குப் புரபோஸ் செய்தேன். முதல்ல அவங்களுக்கு என் மேல இன்ட்ரெஸ்ட் இல்லை. என்னால் அவங்களை ஃபோர்ஸ் பண்ணவும் முடியாது. இடையில், அவங்க வெளிநாட்டுக்கு வேலைக்குப் போயிட்டாங்க. அப்பவும் நான் வெயிட் பண்ணேன். அங்கேயிருந்து வந்ததும், என்னோட காதலை உணர்ந்து, முக்தாவும் என்னை விரும்பினாங்க!" என்று கூறி முடித்தான் கிஷான்.

"முக்தா மேடம் முன்னாடியே இன்னொருத்தர், அதுவும் உங்களோட க்ளோஸ் ஃப்ரண்டையே லவ் பண்ணியிருந்தாங்க! இப்போ நீங்க புரபோஸ் செய்யவும், ஓகோ சொல்லிட்டாங்கன்னு உங்களுக்கு எதுவும் உறுத்தலையா சார்?" என்று முக்தா எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடிய வினாவை எழுப்பி விட்டு, அவனைப் பரிகாசம் செய்த திருப்தியில், தோரணையாக அமர்ந்திருந்தான் ஒரு பத்திரிக்கையாளன்.

"எத்தனை தடவை சொல்றது சார்! அப்படி ஒரு விஷயம் நடந்ததாகவே நாங்க ஞாபகம் வச்சுக்கலை.அதான், இப்படி ஒரே ஃபேமிலியாக இருக்கோம்" என்று அழுத்திக் கூறினான் கிஷான்.

"ப்ச்! இத்தோட பிரஸ் மீட்டை முடிச்சிக்கலாம்" என்று வெறுப்புடன் கூறினார் சித்ரலேகா.

தனது மகன் மற்றும் வருங்கால மருமகளின் முந்தைய காலக் கதை, இப்போது மீடியாவின் முன்பும், மக்களின் முன்னிலையிலும், கடை பரப்பி வைத்துக் கொண்டு இருப்பது அவருக்கும் எரிச்சலாக இருந்தது.

"இருங்க சம்பந்தியம்மா.கிஷானும், முக்தாவும் சுவிட்சுவேஷனை சூப்பரா ஹேண்டில் செய்றாங்க" என்றார் நீலகண்டன்.

"ஆமாம் லேகா ம்மா" என்று மனைவியை அமைதியாக இருக்கச் சொன்னார் காஞ்சியப்பன்.

"நீங்க இதையே கேட்டுட்டு இருக்கீங்க. ஆனால், எங்களோட காதலை உறுதி செய்து, கல்யாணப் பந்தத்தில் இணையப் போறோம்ன்றதை, உங்களுக்கும், மக்களுக்கும், எங்களோட ஃப்ரண்ட்ஸூக்கும் இன்ஃபார்ம் பண்ணத் தான், மீடியாவுக்கு முன்னாடி வந்துருக்கோம். இப்போ அதைச் சொல்லியாச்சு. இனி, எங்களோட எங்கேட்ஜ்மெண்ட் அண்ட் மேரேஜ் நடக்கும் போது, லைவ் அப்டேட்ஸ் வந்துரும். தாங்க்ஸ் ஃபார் கம்மிங்!" எனத் தங்களது இரு கரம் கூப்பி நன்றி தெரிவித்தனர் முக்தா மற்றும் கிஷான்.

"நீ எந்த இடத்திலேயும் உடைஞ்சு போகலை டா ம்மா!" என்று மகளை உச்சி முகர்ந்து அணைத்துக் கொண்டார் நீலகண்டன்.

தனது தந்தைக்குத் தலைகுனிவைக் கொண்டு வரவில்லை என்ற நிம்மதியுடன் அவ்வணைப்பில் அடங்கி விட்டவள்,

ஆனாலும், கிஷானுடைய வீட்டாருக்கு இழிவைத் தந்து விட்டோமோ? என்ற பரிதவிப்பில், அவர்களை நிமிர்ந்து பார்த்தாள் முக்தா.

"டக்கு டக்குன்னு நீ சொன்னப் பதிலைக் கேட்டு எங்களுக்குப் புல்லரிச்சுப் போச்சுடா ம்மா!" என்று அவளைப் பாராட்டினார் சித்ரலேகா.

அதற்குப் பிறகு தான், அவர்களிடம் முகம் காட்டினாள் முக்தா.

"வெல் டன் முகி!" என்று மஹதனும், மௌனாவும் அவளுக்கானப் பாராட்டைத் தெரிவித்தனர்.

"அதுக்கெல்லாம் காரணம், நீங்க எல்லாரும் தான்!" என்று மனதாரக் கூறினாள்.

அந்தக் கோலாகலத்தில், தானும் இணைந்து கொண்டு, தன் காதலியைக் கொண்டாடித் தீர்த்தான் கிஷான்.

இன்றுடன், தங்களுடைய, மற்றும் மஹதன் & மௌனாவுடைய, கடந்த கால வாழ்க்கையும், அதில் நிகழ்ந்த கசப்புகளும் பத்திரிக்கையாளர்களும், மற்றவர்களும் மறந்து விட வேண்டுமென்று வேண்டிக் கொண்டார்கள்.

- தொடரும்
 

Shalini shalu

Moderator
மஹதனும், மௌனாவும் தங்களது தேன்நிலவிற்காக ஏற்பாடுகள் செய்ய நினைக்கும் போது, தோழியைச் செல்பேசியில் தொடர்பு கொண்டு பேசினாள் அகதா.

"ஹாய் அகி" என்று களிப்புடன் கூறினாள்.

"அம்மா உன் கூடப் பேசனும்னு சொன்னாங்க. இதோ கொடுக்கிறேன்" என்ற தகவலை அவளிடம் தெரிவித்து, அன்னபூரணியிடம் செல்பேசியைத் தந்தாள் அகதா.

"மௌனா‌ செல்லம்! அங்கே உனக்கு எல்லாம் செட் ஆகிடுச்சா?" என்று முதலில் மகளைப் பற்றிய விசாரிப்பை ஆரம்பித்தார் அவளது அன்னை.

"ஆமாம் மா. நான் ஓகேவா இருக்கேன்" என்று அவரிடம் நேர்மறையானப் பதிலைக் கூறினாள் மௌனா.

"சரி ம்மா" என்று திருப்தியுடன் கூறியவர்,

"அப்பறம், நாங்க ஊருக்குக் கிளம்பலாம்னு இருக்கோம் டா" என்று மகளிடம் சொன்னார் அன்னபூரணி.

"ஏன் ம்மா இவ்ளோ சீக்கிரமாகப் கிளம்புறீங்க?" என ஏமாற்றத் தொனியில், தாயிடம் வினவினாள் மௌனா.

"ஆமாம் டா. நீங்க ஹனிமூனுக்குப் போகிறதுக்கு முன்னாடியே, கிளப்பிடலாம்னு தான்" என்றார் அன்னபூரணி.

"ம்ஹ்ம்! நாங்க இன்னைக்குத் தான், ஹனிமூனுக்கானப் பிரிப்பரேஷனை (ஆயத்தங்கள்) ஸ்டார்ட் பண்ணோம்" என்றாள் மகள்.

"நீங்க எப்போ போகப் போறீங்க?" எனக் கேட்டார் அவளது தாய்.

மௌனா,"இரண்டு நாளில் போகனும் மா" என விடையளித்தாள்.

"அப்பா பேசனும்ன்றார் டா" என்று தன் கணவரிடம் செல்பேசியைத் திணித்தார் அன்னபூரணி.

"தன்னை நிலைப்படுத்திக் கொண்டு,"ப்பா!"என்று தந்தையை அழைத்தாள்.

"மௌனா ம்மா! எப்படி டா இருக்க?" என்று பாசம் பொழிந்தது அவரது குரலில்.

"நல்லா இருக்கேன் ப்பா. என்றவள்,
"இவ்ளோ சீக்கிரமாக என்னை விட்டுப் பிரிஞ்சு, வேற ஊருக்குப் போகனும்னு உங்க எல்லாருக்கும் ஆசையா அப்பா?" என மனம் தாளாமல் தந்தையிடம் கேட்டு விட்டாள் அவரது மகள்.

"ஐயோ! இல்லைடா ம்மா. நாங்க அங்கே போனதும், உங்களோட ஹனிமூன் ட்ரிப் முடிஞ்சு, வர சொல்லலாம்னு இருக்கோம் டா" என்று அவளுக்குப் புரிய வைத்தார் சிவமணி.

"சரிங்க அப்பா.நீங்க ஊருக்குப் போன, அடுத்த நாள், நாங்களும் கிளம்பப் போறோம்" என்று தந்தையிடம் தெரிவித்தாள் மௌனா.

"முன்னாடியே கிளம்பினால், உங்களை வழியனுப்பி விட்டுட்டுப் போகலாம்னு நினைச்சோம் டா" என்று கூறினார் சிவமணி.

"இருக்கட்டும் ப்பா" என்றவள், அவர்கள் புறப்படும் தேதியைக் கேட்டுக் கொண்டு, அகதாவிடம் பேசினாள்.

"அகி!" என இவளது அழைப்பு, மௌனாவின் தோழிக்கு, கவலையான உணர்வுகளைக் கொடுத்தது.

"மௌனா…" என்று தயங்கிப் பேசினாள் அகதா.

"ம்ம்… நீங்க கிளம்புற டேட் சொன்னாங்க" என இயல்பாகப் பேச முனைந்தாள் மௌனா.

இவ்விடத்தில், இவளது மற்றும் அகதாவின் உரையாடல்கள் சாதாரணமாக இருக்கலாம் தான்! ஆனால், தானே எப்போதாவது பார்த்துச் செல்லும் தன் பெற்றோருடன் வாழ்நாள் முழுவதும் இவள் தங்கப் போகிறாள் என்பதை மௌனாவால் ஏற்றுக் கொள்ள முடியுமா? என்ற எண்ணம் அகதாவிற்குள் எழுந்தது.

மௌனாவின் உள்ளத்திலும், இந்த உணர்வின் மிச்சம் இருந்தது போலும்! அனால் தான், இருவருக்கிடையேயான சம்பாஷணைகள், இப்படி தடுமாற்றம் காண்கிறது.

"ஓஹ்… ஓகே மௌனா. நீ எப்போ இங்கே வர்ற?" என்று அவளைக் கேட்டாள் அகதா.

"அவர்கிட்ட கேட்டுட்டு சொல்றேன்" என்று தோழியுடன், சிறு உரையாடலை முடித்துக் கொண்டு அழைப்பை வைத்தாள் மௌனா.

தன் கணவனிடம் வந்தவளோ,"என்னங்க! எங்கப்பா, அம்மாவும், அகியும் ஊருக்குப் போகப் போறாங்களாம்" என்று அவர்கள் புறப்படும் தேதியையும் அவனிடம் கூறினாள் மௌனா.

"சரிம்மா. நீ ஏன் டல் ஆக இருக்கிற?" என்று அவளிடம் கனிவாக வினவினான் மஹதன்.

தன் வீட்டினர் கிளம்புவதை விட, வேறெதுவோ மனைவியை வருத்துகிறது, என்பதை புரிந்து கொண்டு தான் கேட்கிறான் அவளிடம்.

"அவங்க கிளம்புறாங்கள்ல? அதான் ங்க" என்று பதிலளித்தவளை, இழுத்து அணைத்துக் கொண்டவன், "வேறெதுவோ இருக்குடா. அதைச் சொல்லு" என அவளது மனநிலையைப் பற்றிக் கேட்டான் மஹதன்.

"வேறென்ன?" என்று கணவனை நிமிர்ந்து பார்த்தவளை,"நீயே சொல்லிடு ம்மா" என்று அவள் உண்மையை உரைக்க உந்தினான் மௌனாவின் கணவன்.

"அப்பா, அம்மாவும், அகியும் என்னை மறந்துருவாங்களா மஹி?" என்று நிலைகுலைந்து போய் அவனிடம் கேட்டாள் மௌனா.

"ஏன்டா இப்படி யோசிக்கிற?" என்று அவளது நெற்றி முடியை சீராக்கிய படி கேட்டான் மஹதன்.

"இப்போ கூட அவங்க கிட்டப் பேசும் போது, அந்த பாதுகாப்பின்மை ஃபீல் ஆச்சு ங்க!" என்று விழிநீருடன் விவரித்தாள் அவனுடைய மனைவி.

"அத்தையும், மாமாவும் உன்னை மறக்கிறதுக்கு வாய்ப்பே இல்லை. அப்பறம், அகதாவோட வாழ்க்கையில், இரண்டாவது அத்தியாயத்தை, நீ தான் ஆரம்பிச்சுக் கொடுத்து இருக்கிற! அப்போ, அவங்க உன்னை எப்படி மறப்பாங்க? உனக்கு வந்த இந்த இன்செக்யூர் ஃபீல் மாதிரி, அவங்களுக்கு கில்ட்டி ஃபீல் வந்திருக்கும் தானே?" என்று கேட்டான் மஹதன்.

"ஆமாம் ங்க" என உணர்ந்து கூறினாள் மௌனா.

"அப்போ உன்னையும் சமாதானம் செய்து, அவங்களுக்கும் புரிய வைடா" என அவளுக்கு வலியுறுத்தினான்.

"ஷ்யூர்! தாங்க்ஸ் மஹி" என்றாள் கண்கள் மின்ன.

"ஆஹான்!" என்றவன், அவளது இதழைத் தன் வசமாக்கிக் கொண்டான் மஹதன்.
________________________

இங்கோ,'நான் என்ன தான் பண்றது கடவுளே? எனக்குள்ளே உருவாகிற குற்ற உணர்வுக்கு முடிவே கிடையாதா? என்னை எப்போ நிம்மதியாக வாழ விடப் போறீங்க?' என்று மானசீகமாக வேண்டிக் கதறிக் கொண்டு இருந்தாள் அகதா.

அதாவது, முதலில் தீபக் மற்றும் அவனது தாயின் நிலை கண்டு, அது தன்னால் தான் எனக் குற்ற உணர்ச்சியில் இருந்தவள், அதன் பின்னர், தீபக்கின் வார்த்தைகளைக் கேட்டு, மஹதனுடன் தன்னைச் சேர்த்து வைத்துப் பேசியதால், அவனுடைய மரியாதை போய் விட்டது என எண்ணிக் குமைந்தாள், இப்போது, மௌனாவின் பெற்றோரை அவளிடமிருந்து தான், பறித்துக் கொண்டு போவதைப் போல உணர்ந்தவள், அதையும் நினைத்து வருந்தியவள்,"சாரி மௌனா! நான் பேசாமல் ஹாஸ்டலுக்கே போயிட்றேன்" என்று இயலாமையுடன் பேசிக் கொண்டவள், அதை அன்னபூரணி மற்றும் சிவமணியிடமும் உரைத்து, அவர்களது அனுமதியைப் பெறுவதற்காக காத்திருந்தாள் அகதா.

"நீ எப்பவும் ஒரே மனநிலையில் இருக்க மாட்டியா?" என்றார் சிவமணி.

அதில், வெளுத்த முகத்துடன்,"அது வந்தும்மா…" என்று இழுத்தாள் அகதா.

"விடுங்க. அவளும், மௌனாவும் பேசிக்கட்டும்" என்று, மகளுக்குச் செல்பேசியில் அழைத்து விட்டார் அன்னபூரணி.

- தொடரும்

அடுத்தப் பதிவு இறுதி அத்தியாயம் மற்றும் எபிலாக் ஃப்ரண்ட்ஸ்.
 

Shalini shalu

Moderator
"ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள்.

"மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி.

"என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா.

"ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது.

"நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி,

மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார்.

தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா.

அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி.

அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா.

அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வால் எத்தனை பேர் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அவள் உணரத் தவறி விட்டாள்.

"வீட்டுக்குப் போய்ப் பார்த்துட்டு, அப்பறம், அவங்களை வழியனுப்பி வைக்கனும் ங்க" எனத் தன் கணவன் மஹதனிடம் கூறினாள் மௌனா.

"போகலாம் மா" என்றதும்,

"இந்த அகதாவை எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியலை ங்க!" என்று கவலையுடன் அவனிடம் சொன்னாள்.

"ஏன் இப்போ என்னாச்சு?" என்று மனைவியிடம் வினவினான் மஹதன்.

"இன்னும் ஒரே மைண்ட்செட்லயே இருக்கா" என அவளது எண்ணவோட்டங்களைப் பற்றி அவனிடம் கூறினாள் மௌனா.

"நீ தான் அவங்களை சரி பண்ண முடியும். அந்த தீபக்கோட இஷ்யூ நம்ம மேரேஜ் டைம்ல நடந்ததால், அவங்களும், நீயும் அதிகமாகப் பேசிக்க முடியலை. அதான், உன்னாலேயும் அவங்களுக்கு எந்த அட்வைஸூம் செய்ய முடியலை. இப்போ தான், டைம் இருக்கே? பேசிப் புரிய வை" என்றான் அவளது கணவன்.

அவன் சொன்ன யுக்தியும், தனக்குச் சரியென்று தோன்றவும், அதையே செயல்படுத்த எண்ணியவள்,"அத்தை! முதல் நாளே போய் அவங்க கூட தங்கிட்டு, வழியனுப்பி விட்டுட்டு வரவா?" என்று கணவனின் தாயிடம் கேட்டாள் மௌனா.

"சரிடா ம்மா" என்றவர்,

மகனிடம்,"மஹத்! நீயும் கூடப் போற தான்?" என்று கேட்டார் கௌசல்யா.

அதற்கு மஹதனோ,"ஆமாம் மா. நானும் தங்கிட்டுத் தான் வருவேன்" என்றான் அவரிடம்.

"சம்பந்திங்க ஊருக்குக் கிளம்புறாங்களாம் ங்க. மஹதனும், மௌனாவும் அங்கே தங்கிட்டு வர்றோம்னு சொன்னாங்க" எனத் தன் கணவரிடம் தகவல் தெரிவித்தார் கௌசல்யா.

"அப்படியா கௌசி ம்மா? நான் சிவமணி சம்பந்தி கிட்டக் கால் பண்ணிப் பேசிக்கிறேன்" என்றார் திருமூர்த்தி.

அதேபோல், அவரும், கௌசல்யாவும், மௌனாவின் பெற்றோருக்குக் கால் செய்து, அவர்களது பயணத்தைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டவர்கள், சிவமணி மற்றும் அன்னபூரணியை, மனதார வாழ்த்தி அனுப்பினார்கள் திருமூர்த்தி மற்றும் கௌசல்யா.
__________________

சிறிது நேரத்திற்கு, முன் தான், தங்கள் வீட்டிற்கு வந்திருந்த மாப்பிள்ளையையும், மகளையும் குடிக்கப் பழரசம் கொடுத்து உபசரித்தார் அன்னபூரணி.

"நான்வெஜ் சாப்பிடுவீங்களா? சிக்கன் எடுத்துட்டு வரவா?" என்று இருவரிடமும் வினவினார் சிவமணி.

"அச்சோ! வேண்டாம் மாமா!" என்று அலறினான் மஹதன்.

அந்தளவிற்கு, அவனுடைய வயிறு நிறைய, அசைவ உணவுகளைப் பதம் பார்த்திருந்தான்.

"சரி, சரி! மாப்பிள்ளை. வேறென்ன சைவத்தில் செய்யறது?"என்று மகளிடம் கேட்டார் சிவமணி.

"அதான் விருந்து சம்பிரதாயம் எல்லாம் முடிஞ்சிருச்சே மாமா? அப்பறம் என்ன? எப்பவும் போலவே சமைங்க‌. தனியாக கவனிப்பு வேண்டாம்" என்று அவர்களிடம் உறுதியாக கூறி விட்டான் மஹதன்.

"ஆமாம் ப்பா" என அதை ஆமோதித்தாள் மௌனா.

அதனால், சிவமணியும், காய்கறி வாங்கி வரக் கடைக்குச் சென்று விட்டார்.

"டிரெஸ் மாத்திட்டு வருவோம். வா" என்று மனைவியை அழைத்துப் போனவன்,"கிஷானைப் பார்த்துட்டு வந்துடறேன் மா. அதுக்குள்ளே, நீ அகதா கிட்டப் பேசு" என்றான்.

அவர்களிருவரும் வந்ததும்,"அத்தை!" என்று அன்னபூரணியை அழைத்து,

"நான் வெளியே கிளம்பறேன். மாமா வந்ததும் சொல்லுங்க. வீட்டுக்கு வர்றேன் அத்தை" என அவரிடம் கூறி விட்டுப் போய் விட்டான் மஹதன்.

"நான் சமையலுக்குத் தேவையானதை தயாராக எடுத்து வைக்கிறேன்" என்று சமையலறைக்குப் போன அன்னபூரணியைப் பின் தொடரப் பார்த்த அகதாவிடம்,"நீ என் கூட வா" என்று கூறி, அறைக்கு இழுத்துப் போனாள் மௌனா.

அவளது இழுப்பிற்கு இசைந்து கொடுத்துப் போன அகதாவோ, உள்ளே சென்றதும்,"என்னாச்சு ம்மா?" என்றாள்.

"தெரியாத மாதிரியே கேட்கிறியே?" என்று அவளைக் கூரியப் பார்வையால் துளைத்தவள்,

"எல்லாத்தையும் சொல்லு! இனிமேலும், எதையும் மிச்சம் வச்சு, ஊருக்குப் போனதுக்கு அப்பறமும் அதை நினைச்சு ஃபீல் பண்ணாத!" என்று அவளது கரங்களை விடாமல் பிடித்துக் கொண்டாள் மௌனா.

"சொல்றேன் மா" எனத் தயங்கிக் கூறியவள், அதற்குப் பிறகு, அனைத்தையும் ஒப்புவித்தாள் அகதா.

தோழியின் வாய்மொழியாக கேட்ட அனைத்தையும் மறுபடியும் தனக்குள் ஒரு தடவை சொல்லிக் கொண்ட மௌனாவோ,"இதுக்கு நீ இவ்ளோ ஃபீல் பண்ணி, ஹாஸ்டலுக்குப் போறேன்னு சொல்ற! அப்படித்தானே?" என்றவள்,

அகதாவின் சுருங்கிய முகத்தைப் தனது கைகளால் பற்றி,"ஏன்டா அகி, உனக்கு எங்க மேலே நம்பிக்கை இல்லையா? உன்னோட கடந்த காலத்தை மறக்க நாங்க ஹெல்ப் பண்ண மாட்டோம்னு நினைக்கிறியா?" என்று மென்மையாக வினவினாள் தோழியிடம்.

"ஐயோ! உங்களை எப்படி நான் அப்படியெல்லாம் நினைப்பேன் மா. என்னால் யார் கூடவும் சந்தோஷமாக, நிம்மதியாக இருக்க முடியாது போல!" என்று அவளிடம் வேதனையுடன் கூறினாள் அகதா.

"அந்த தீபக்கோட இப்போதைய நிலைமை என்னன்னு உனக்கு லைவில் காட்டச் சொல்லவா?" என்று தோழியிடம் கேட்டாள் மௌனா.

"வேண்டாம் மௌனா! அப்பறம் எனக்கு உயிரே போகிற மாதிரி வலிக்கும்! இது எல்லாத்துக்கும் நான் தானே காரணம்ன்னு, லைஃப் லாங் உறுத்திக்கிட்டே இருக்கும்!" என்று கண்ணீர் சிந்தினாள் அகதா.

"ஊஃப்! நான் சொல்றதைக் கேளு! உன் லைஃப்ல பாஸ்ட்ல நடந்தது எல்லாம் கிளோஸ் ஆகிடுச்சு. தீபக்குக்கான தண்டனை கிடைச்சிருச்சு. அவங்க அம்மாவும் திருந்தி, வேலைக்குப் போய் சம்பாரிச்சு அவங்களோட தேவையைப் பாத்துக்கிறாங்க! அம்மாவும், பையனும் உன்னை மறந்து போயிருப்பாங்க! நீ என்னடான்னா அதையே பிடிச்சு தொங்கிட்டு இருக்கிற!" என்று தனது பொறுமையை சோதிக்கும் தோழிக்கு முயன்று அறிவுரை வழங்கினாள் மௌனா.

"அப்படியா? அவங்க ரெண்டு பேரும் என்னை மறந்துருப்பாங்களா?" என்று கண்களைத் துடைத்துக் கொண்டே, அவளிடம் வினவினாள்.

"ஆமாம் அகி. நீ தான் ஞாபகம் வச்சிட்டு இருக்கிற! அதை தான் தூக்கிப் போடுன்னு சொல்றேன்" என்றாள் மௌனா.

அவளும் தான், இந்த விஷயத்தை எத்தனை தடவைகள் பேசிப் புரிய வைக்க முடியும்? மௌனாவிற்கும் எரிச்சல் மூண்டது தான்! ஆனால், தோழியின் மனம் புரிந்ததால், அவளுக்குப் பக்கபலமாக இருந்து, அகதாவை மீட்டெடுக்க முயன்றாள்.

"ம்ஹ்ம். எப்படி? இந்தக் கம்மியான நாளில், என்னை மறந்துருப்பாங்கன்னு சொல்ற?" என்று அடுத்தக் கேள்வியைக் கேட்டாள் தோழி.

"நீ இப்படி கேட்பன்னு தான், லைவ் டெலிகாஸ்ட் செய்யவான்னு கேட்டேன் அகி!" என்று கூறினாள் மௌனா.

"ஐயோ! அதெல்லாம் என்னால் பார்க்க முடியாது ம்மா! ஆளை விடு! என்னை அவங்க மறந்ததே போதும்!" என்று ஒரு முடிவுக்கு வந்தாள் அகதா.

"ம்ஹ்ம்! இனிமேல் இதைப் பேசவே கூடாது! ஊருக்குப் போகிற அப்போ, எல்லாத்தையும் மறந்துட்டுப் போகனும்!" என அவளுக்கு அறிவுறுத்தினாள் மௌனா.

அதற்குள், கறி எடுத்து வந்திருந்தார் சிவமணி. அதைக் கழுவி வைத்து விட்டு, மசாலாவைத் தயார் செய்து கொண்டிருந்தார் அன்னபூரணி.

"அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணுவோம். வா" என்றாள் மௌனா.

அவ்விருவரும், சமையலறைக்குப் போனார்கள்.

"இன்னும் ரெடி ஆகலை ம்மா" என்று அவர்களிடம் சொன்னார் அன்னபூரணி.

"நாங்க உங்களுக்கு உதவ வந்தோம் மா" என்று காய்கறிகளை நறுக்க உதவினார்கள்.

ஆனால், "மௌனா! நீ கத்தியைக் கையில் எடுக்காதே!" என்று மகளுக்குக் கட்டளையிட்டார் அன்னபூரணி.

"நீ இங்கே வந்து அப்பாகிட்ட உட்காரு" என்று மகளைத் தன்னுடன் இருத்திக் கொண்டார் சிவமணி.

அவளுடன் இணைந்து, பற்பல விஷயங்களைப் பேசி, நேரத்தைக் கடத்தினார் மௌனாவின் தந்தை.

அவ்விடைவெளியில், அகதாவும், அன்னபூரணியும் சமையலைப் பார்த்தார்கள்.
__________________

தங்களுடைய தங்கும் விடுதிக்குத் தான் போயிருக்கிறான் மஹதன்.

நண்பன் வந்ததும், அவனை வரவேற்று, அலுவலக அறையில் உட்கார வைத்துப் பேசிக் கொண்டு இருந்தக் கிஷான்,"நீ ரவுண்ட்ஸ் போயிட்டு வாடா" என்றான்.

"ஆமாம். எப்படியும், நீ எல்லாத்தையும் பார்த்துக்குவ - ன்னுத் தெரியும். அதான், நான் இவ்ளோ நாளாகத் தலையிடலை!" என்று கூறி விட்டு, விடுதியைச் சுற்றி வந்தவன், நண்பனின் மேல் வைத்த நம்பிக்கை எப்போதும் வீண் போகாது மற்றும் தன்னை ஏமாற்றியதில்லை என்பதை இன்றும் உணர்ந்து கொண்டு, அலுவலக அறைக்குத் திரும்பியவன்,"நீ பர்ஃபெக்ட் ஆக வச்சிருக்கிற டா!" என்று கிஷானைத் தட்டிக் கொடுத்தான் மஹதன்.

"தாங்க்ஸ் நண்பா!" என்று மனமகிழ்ந்தான் கிஷான்.

அந்தச் சமயம், சிவமணியிடமிருந்து அவனுக்குச் செல்பேசி அழைப்பு வந்தது.

"ஹலோ மாப்பிள்ளை, சாப்பாடு ரெடி. நீங்க வீட்டுக்கு வரலாம்" என்று தன்மையாக அழைத்தார் தன் மருமகனை.

"சரிங்க மாமா. இதோ கிளம்புறேன்" என்று அழைப்பை வைத்தவன், கிஷானிடம்,"அங்கே எனக்காக வெயிட் பண்றாங்க டா. நான் போயிட்டு வரேன்" என நண்பனிடம் கூறினான் மஹதன்.

"ஓகேடா" என்று அவனை அனுப்பி வைத்தான் கிஷான்.
__________________________

"மாப்பிள்ளைக் கிட்டப் பேசியாச்சு ம்மா. வந்துட்டு இருப்பார்" என்றார் சிவமணி.

அவன் வருவதற்குள், டேபிளில் உணவுப் பாத்திரங்கள் அனைத்தையும் எடுத்து வைத்தனர்.

மஹதனும் வந்து விட, இந்த முறை, எதற்கும், எங்கும் நழுவாமல், அவனையும், மௌனாவையும் நன்றாக உபசரித்தாள் அகதா.

அதிலேயே, அனைவருக்கும் அவளை நினைத்துக் கவலைப்பட்டுக் கொள்ள இனித் தேவையிராது என்ற எண்ணம் தோன்றி விட்டது.

மஹதனுக்கும், மௌனாவிற்கும் ஒரு அறையை ஒதுக்கிக் கொடுத்து விட்டு, சிவமணி ஹாலில் படுத்துக் கொள்ள, அன்னபூரணியும், அகதாவும் ஒரு அறையில் தஞ்சம் புகுந்தனர்.

அன்னை, தந்தையுடன் தான் கழித்தப் பொழுதுகளைப் பற்றித் தன் மன்னவனிடம் விவரித்துக் கொண்டே போனாள் மௌனா.

அவள் உறங்கும் வரை, அதைப் பொறுமையாக கேட்டான் மஹதன்.

ஒரே கட்டத்தில், அவனது துணைவியும் தூங்கி விட, இவனும் நித்திரை கொண்டான்.
__________________

“பேசாமல் காரிலேயே போகலாம்ல நீங்க?” என்று தன் மாமனார், மாமியாரிடம் வினவினான் மஹதன்.

“இல்லை மாப்பிள்ளை… பஸ்ஸிலேயே போய்க்கிறோம். கார், செக்யூரிட்டிஸூன்னு அங்கே போய் நின்னா, ஊரில் இருக்கிறவங்க மிரண்டு போயிடுவாங்க” என்று விளக்கம் அளித்தார் சிவமணி.

பேருந்து நிலையத்திற்குச் செல்லும் வழியில் தான் இந்த உரையாடல் நிகழ்ந்து கொண்டுள்ளது.

“அது கூட ஓகே மாமா. ஆனால் உங்களை இப்படியே பாதுகாப்பு இல்லாம அனுப்பி வைக்க என்னால் முடியாது. உங்களை ஃபாலோவ் பண்ணி, பாடிகார்ட்ஸ் காரில் வருவாங்க. நீங்க வீட்டுக்குப் போனதும் அவங்க திரும்பிடுவாங்க” என்று உறுதியுடன் கூறினான் மஹதன்.

பேருந்தில் சிவமணி, அன்னபூரணி மற்றும் அகதாவுடன் சிறிது நேரம் தாங்களும் இருக்கைகளில் அமர்ந்திருந்தனர் மஹதன்
மற்றும் மௌனா.

அந்த நேரத்தில், திருமூர்த்தியும், கௌசல்யாவும் அழைத்து, அவர்களுக்கு வாழ்த்துக் கூறி, பத்திரமாகச் செல்லுமாறு, வலியுறுத்தி விட்டு வைத்தனர்.

- தொடரும்
 
Status
Not open for further replies.
Top