எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மயங்கொலிப்பிழைகள் கதைத் திரி

Status
Not open for further replies.

மயங்கொலிப் பிழைகள்

அத்தியாயம் 1

அந்த பிரம்மாண்ட கார்ப்பரேட் நிறுவனத்தின் பொருளாதார மற்றும் நிதி ஆலோசனை துறையில் வரும் நிதி ஆண்டிற்கான திட்டங்கள் நிர்வாகத்தின் முன்னெடுப்புகள் மற்றும் அவர்களின் நிதிநிலை அறிக்கை , பங்குகள் பற்றிய விவாதங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தது.

அவள் அதீரை அந்த துறைக்கு மட்டுமல்ல அந்த நிதி சாம்ராஜ்யத்தையே கட்டி ஆள்பவள் , பல நிறுவனங்கள் அவளது பொருளாதார ஆலோசனைக்கு காத்து நிற்கும் அளவு திறம் பொருந்தியவள். அந்த நிறுவனத்தின் பங்குதாரர் மற்றும் இயக்குநர்களில் ஒருவள், தனது ஹை ஹீல்ஸ் ஒலி எழுப்ப கருநிற பேன்ட் மற்றும் முழுக்கை சட்டை மேலே ஒவர் கோட் மற்றும் கையில் மடிக்கணிணியுடன்

உள்ளே நுழைந்தவளின் காலடி ஓசை மட்டுமே பிசிர் இன்றி அனைவரின் செவியிலும் வந்து சேர அவ்விடம் அமைதியானது. முகமன்களுடன் வந்து தனது இடத்தில் அமர்ந்தாள் . தலைமை செயல் அதிகாரியிடம் திரும்பி அனும.தி வேண்டியவள் . தனது மடிக்கணிணியை
இயக்கி உரையாற்ற தொடங்கினாள்.

"இந்த நிதி ஆண்டிலிருந்து மருத்துவ தளபாடங்கள் தயாரிப்பில் நமது நிறுவனம் கால் பதிக்க இருப்பதாலும் அதற்கான நிதி மற்றும் விற்பனை குறித்த திட்டங்கள் தீர்மானங்கள் பற்றிய வரைவுகள் பரிந்துரைகள் பற்றி நாம் விவாவதிக்க இருக்கிறோம்."

அவளது கண்கள் அந்த அறையில் அனைவரது கவனமும் தன் மீது குவிந்து இருப்பதை உறுதி செய்து கொண்டவள்
மேற்கொண்டு பேசலானாள்.

" நமது சத்துபானம் பல ஆண்டுகளாக இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் வரும் நிகர லாபம் உலகம் முழுவதும் வரும் லாபத்திற்கும் இடையே வேறுபாடு மிக குறைவு சரியாக சொல்வது என்றால் இரண்டும் சமம் ."

விற்பனை துறை தலைவரை கண்களில் பார்த்து உதடுகளை சுழித்து இகழ்ச்சி புன்னகையை கொடுத்தாள். எதிரணியில் அவர் இருப்பதை அவள் அறிந்ததால் தானே இப்படி தீடீர் சந்திப்பு விஷயம் வெளியேகசியும் முன் ஏற்பாடு செய்தாள்.

"இந்தியாவில் நமது விற்பனை உரிமையை இந்த எம்.எம் நிறுவனத்திற்கு விற்பதன் மூலம் அவர்கள் இந்தியாவில் கால் ஊன்ற வழி கிடைக்கும் அதே சமயம் அவர்களிடம் இந்தியா முழுவதும் நமது தளபாடங்களை விற்பனை செய்யும் உரிமையை பெறுவது மட்டுமல்ல உலகம் முழுவதும் கூட விற்பனை செய்யும் போது நமது இலாபம் அதை விட அதிகம்.
இந்த ஒப்பந்தம் நமக்கு அதிக நன்மையை பெற்று தரும் ."என உரைத்தவள்

கடந்த கால நிதி நிலை அறிக்கை விற்பனை அறிக்கை என அனைத்தின் அடிப்பிடையில் கருத்துகளை எடுத்து கூறி மறு மொழி எதுவும் இன்றி அதனை ஏற்க செய்தவள், ஆவணங்களில் கையொப்பம் இட்டு நிமிரும் போது மாலை வந்திருந்தது.

அனைவருக்கும் கை குலுக்கல் மற்றும் சிறு தோளணைப்புடன் விடை கொடுத்தாள். அவளது உதவியாளினி லீனா அவளது உத்தரவிற்கு காத்திருப்பதை பார்த்தவள்,

"மற்ற வேலைகளை இனி திங்கள் அன்று பார்த்துக் கொள்ளலாம், இப்போது , நீங்கள் செல்லலாம் மிஸ் லீனா. "என தனது உதவியாளரை அனுப்பி வைத்தாள்.

அங்கிருந்த சுழற் நாற்காலியில் ஆசுவாசமாக அமர்ந்து இருகரங்களையும் தூக்கி சோம்பல் முறித்தவள் அகம் மகிழ்சியில் இருந்தது.

தன் மகிழ்ச்சியை கொண்டாட எண்ணமிட்டபடி தனது மனி கட்டில் இருந்த கடிகாரத்தில் நேரம் பார்த்தவள் அது முன் மாலை பொழுதை காட்ட,
இப்போது அழைத்தால் தான் அங்கு சென்று சேர்வதற்கும் அவன் வரவும் சரியாக இருக்கும் என யோசித்து தனது அலைபேசியில் இருந்து அந்த எண்ணிற்கு அழைத்தாள், அழைப்பை ஏற்றுபேசிய மறுமுனைக்கு ஒரு ஹோட்டலின் பெயரை கூறியவள் இன்று இரவு எட்டு மணிக்கு என்று விட்டு அலைபேசியை அனைத்து விட்டு எழுந்தாள்.

தளத்தை விட்டு இறங்கும் முன் தன்னை சரி செய்து கொள்ள அறைக்கு சென்றாள்.
அதீரை அந்த நிறுவன நிர்வாக இயக்குநர்களில் ஒருவளும் என்பதால் அவளுக்கு தனி அலுவலக அறை அதன் உட்புறம் சிறு படுக்கை வசதி மற்றும் குளியல் அறை உண்டு ஏனெனில் வேலையின் தீவிரம் அதிகமாகும் போது சில நேரங்களில் வீடு திரும்ப நேரம் இருக்காது .அது போன்ற நேரங்களில் இங்கேயே தங்கிக் கொள்வாள் இப்போது கூட அவள் இந்த பேச்சு வார்த்தையின் ரகசியம் கருதி ஒரு வாரமாக வீட்டிற்கு செல்லவில்லை.

இன்று தான் வெற்றிகரமாக தனது பேச்சுவார்த்தையை முடித்து வெற்றி பெற்றிருக்கிறாள். அதை கொண்டாடத்தான் தயாராகிக் கொண்டிருக்கிறாள்.

கண்ணாடி அவளை பிரதிபலித்ததை நினைத்து பெருமை கொண்டது. அசாதாரணங்கள் சேர்ந்து செய்த சாதாரணம் இவள் என்று

அதிக சிரத்தை எல்லாம் இல்லை , தோளை தாண்டி இறங்கிய கூந்தலை விரித்து விட்டாள். பிறகு இழுத்து கூந்தல் மாட்டியில் இறுக்கினாள் .
ஒரு ஜீன்ஸ் மேலே ஒரு இளநீல சர்ட் என மாற்றி தன்னை சரி பார்த்தவள் தனது உடைமைகளுடன் இறங்கினாள்.

அந்த பப் அதற்குரிய அத்தனை கல்யாண குணங்களுடன் அதன் உச்சபட்ச பரபரப்பில் இருந்தது. காரை நிறுத்தியவள் சாவியை , அதனை அதன் நிறுத்துமிடத்தில் நிறுத்தவென நியமிக்கப்பட்ட பணியாளர் கையில் வீசியவள் , உள்ளே விரைந்து விட்டாள்.

பாரில் காக்டெய்ல் கலக்கும் இடத்திற்கு சென்றாள். அந்த பணியாளர் அவள் முன் வந்து முகமன் கூறியவன்

"மேடம் யுவர் ஆர்டர் ப்ளீஸ்? "என அவளுக்கு வேண்டியதை விசாரித்தான்.
"மன்ஹாட்டன் " என தனது விருப்பத்தை உரைத்தாள்

"த்ரீ மினிட்ஸ் " என்றவன்
ஒரு கிளாஸை எடுத்து அதனுள் பனிக் கட்டிகளை போட்டு தனது ஜிக்கர்ஸ் எனும் அளவு கோப்பையினால் ஸ்வீட் வெர்மோத்தை ஒரு முறை அளந்து ஊற்றி பின் விஸ்கியை இரண்டு கோப்பை என ஊற்றி மேலே கசப்பு சுவை தரும் திரவம் சில துளி சேர்த்தவன் நீள கலக்கும் சிறு கரண்டி கொண்டு கலக்கி அதை ஆரஞ்சினால் அலங்கரித்து அவளிடம் தரும் வரை
அங்கேயே நின்று அவன் கலவை தயாரிப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள்.
(காக்டெய்ல் என்பது ஆல்ஹால் மற்றும் ஆல்ஹஹால் அல்லது ஆல்ஹஹால் மற்றும் புதிய பழச்சாறுகளை குறிபிட்ட விகிதத்தில் கலந்து தயாரிக்கப்படும் கலவை)
அந்த சிவந்த திரவம் அடங்கிய கோப்பையை கையில் ஏந்தி சில மிடறு அருந்திய படி சுற்றி கண்களை சுழற்றியவளிடம்
நானும் உங்களுடன் இணைந்து கொள்ளலாமா?
(May I join with you) என அவளிடம் வந்து நின்றான் அவன்.

தேர்வு செய்யப்பட்ட மாடலை போல உடல் மிக கவனமாக பராமரிக்கப்பட்ட உடற்கட்டு , என பெண்களை மயக்கும் அனைத்து புற தோற்றத்திலும் சற்று கூடுதல் கவனம் செலுத்தி பேரழகனாகத்தான் இருந்தான்.

அவன் குரலுக்கு செவி சாய்த்தபடி அவன் புறம் திரும்பியவள் அதிர்ந்து போனாள் பிறகு அவனை சற்று உற்று பார்த்த பிறகு தான் அவள் அறிந்த அவனுக்கும் , இவனுக்கும் சில வித்தியாசங்கள் இருப்பதை அறிந்தவள் இதை மட்டும் என முடி வெட்டு கையில் இருக்கும் டாட்டூ ஆடைகளை சரி பண்ணிட்டா இவன் அவனே தான் என எண்ணமிட்டவள், வருங்காலத்தில் அதையே தான் செய்ய போகிறோம் அந்த சூழ்நிலையில் விதி தன்னை நிறுத்த போகிறது என அறியாதவள்,

அவனுக்கு பதில் உரைத்தாள் சிறு சிரிப்புடன்
ya Why not ? what do you Prepare whiskay , Rum or anything elese?
என மேலும் உரையாடலை வளர்த்தாள். அவன் நோக்கமும் அது தானே அதையும் அதீரை அறிந்து தான் இருந்தாள்.அவள் தானே அலைபேசி வழியே அவனை தொடர்பு கொண்டு இங்கே அழைத்திருந்தாள்.
தனது கையிலும் டக்கியூலா எனும் ஆல்ஹஹால் திரவ கோப்பையை ஏந்திய அவனும் அவளுடன் இணைந்து நடந்த படி ஒரு மேஜையை நோக்கி நகர்ந்தனர்

அங்கே ஒரு இடத்தில் DJ யின் பணியில் விதவிதமான பாடல்கள் ஒலித்தபடி இருக்க அதற்கு ஏற்றபடி பலர் ஆடிய படி இருக்க

தனது கட்டை விரலால் அந்த புரத்தை காட்டியவன்
அங்கே செல்ல வேண்டுமா என்றவனுக்கு
வேண்டாம் என்றவள் ஏற்கனவே தான் பதிவு செய்த மேஜையில் அமர
அவளுக்கு எதிரில் அமர்ந்தான் .

உங்கள் பெயர்? என்றவனுக்கு
அதீரை என்றவள்
யுவர் ஸ்? என்றாள் ,
டாவின்சி என்றவன் அங்கு வந்த பணியாளரிடம் இருந்து இரு கோப்பைகளை எடுத்தவன் ஒன்றை தானும் மற்றொன்றை அவளுக்கு தந்தவன் எதிர்புறம் இருந்து அவள்புறம் வந்திருந்தான்.
உங்களை பற்றி சொல்லுங்கள் என்றவனுக்கு தனது நிறுவனத்தின் பெயரையும் அங்கு தனது இடத்தையும் கூறினாள்.
உங்களை பற்றி கூறுங்கள் டாவின்சி
என்றவளது கரங்களை பிடித்து கொண்டவன் மெல்ல நீவியபடி நெருக்கத்தை அதிகரித்தவன்,
என்னோட பேர் டாவின்சி, இங்க ப்ளோரிடாவுல ஆர்ட் கேலரி வைச்சிருக்கேன், மாடலிங் என்னோட பேஷன் அதுக்குதான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன் , என்றவன் கரங்கள் இடம் மாற தொடங்கியது.

அதன் பின் இருவரின் பேச்சுவார்த்தை இதழ்களினுள் முடிந்தது. மிகநெருங்கிய இருவரும் கொண்டாட அந்த அறை களைத்திருந்தது .
அலைபேசியின் அழைப்பில்
மெத்தையில் துயில் கொண்டு இருந்தவள் டாவின்சியில் அனைப்பில் இருந்து விலகி அலைபேசிக்கு பதில் அளித்தாள்.
நேரமாகிவிட்டதை உணர்ந்து கலைந்து கிடந்த தனது ஆடைகளை சேகரித்துக் கொண்டு குளிக்க சென்றாள்.

குளித்து கண்ணாடியின் முன் தோற்றத்தை சீர் செய்தவளை பின்னிருந்து அனைக்க வந்தவனை , கண்ணாடியை பார்த்தபடியே
"அங்கேயே நில் (stay there) டாவின்சி ", என்றவள் அவனுக்கான பணத்தை எடுத்து மேஜை மீது வைத்தவள்,
"தங் யூ பார் யுவர் கம்பெனி " அதாவது நேற்றைய உன் ஒத்துழைப்புக்கு நன்றி இதில் இதை தாண்டி இனி நமக்குள் ஒன்றும் இல்லை எனும் வகையில் அவனை திரும்பி கூட பாராமல் அறையில் இருந்து வெளியேறி இருந்தாள்.

அவள் அதீரை அப்படித்தான் , காதல் திருமணம் போன்றவற்றில் நம்பிக்கை அற்றவள், தனது எண்ணங்கள் செயல்கள் சுதந்திரத்தில் யாருடைய தலையீடையும் விரும்பாதவள், இது போன்று திருமணமாகமல் இரவுகளுக்கு ஒருவனுடனான உறவு தவறல்லவா என்றால் ,
நான் யாருடைய கணவனையும் அழைக்கவில்லை வற்புறுத்தவும் இல்லை. என் காதலனுக்கோ கணவனுக்கோ நம்பிக்கை துரோகம் செய்யவில்லை , அவனுடைய தேவை பணம் எளிதில் சில மணி நேரங்களில் கூடவே சந்தோஷமும் …
இது போன்று கட்டுப்பாடற்று உணர்வுகளை தறிகெட்டு அலைய விடுவது தவறல்வா என்றால்
பசி, தாகம் , போல இதுவும் ஒரு உணர்ச்சி அவ்வளவு தான் , இதற்கு தேவையில்லாமல் அதிக முக்கியத்துவம் தருவது தான் பல பிரச்சனைகளுக்கு காரணம்
மேலும் நாட்டில் இதைவிட பெரிய பிரச்சனைகள் இருக்கு அத பாருங்க இல்லை உன் குடும்பத்தை பாரு அதை விட்டு விட்டு என் தணிப்பட்ட விஷயத்தை பற்றி பேச உணக்கு உரிமை கிடையாது
இது அதீரையின் நிலைப்பாடு இது பற்றி யாரும் அவளிடம் கேட்டது இல்லை , அந்த வாய்ப்பு யாருக்கும் கிடைத்ததது இல்லை அவளது வளம் வேலை சுற்றத்தின் நிலை இதை செய்திருந்தது.

அவள் தாய் தந்தையர் இருவருமே ,இது தங்கள் மகளது சுதந்திரம் என கண்காணிப்பையும் பண்பாட்டின் முக்கியத்துவத்தை கூறி வளர்க்க வேண்டிய காலத்தில் பணம், பார்ட்டி என அலைந்து விட்டு இப்போது வருத்தம் கலந்த புன்னகையுடன் நழுவுபவர்கள்.

முன்பு இவர்கள் சுதந்திரத்திற்க்கு அதீரை குறுக்கீடு செய்ய கூடாது என அவளுக்கு செல்வத்தையும் கல்வியையும் தந்தவர்கள் அன்பு பண்பாடு ஒழுக்கம் பற்றிய புரிதல் தரவில்லை , விளைவு அவள் சுயம் அவளே பார்த்து கேட்டு படித்து பெற்று வளர்த்துக் கொண்டாள்.

 
அத்தியாயம் 2

அமெரிக்காவின் நியூஜெர்சி

அந்த இல்லம் தெய்வீககளையுடன் இருந்தது. ஒரு இல்லத்தை கோவிலாக்குவதும் கல்லறையாக்குவதும் அந்த வீட்டின் பெண் தான்.

நாற்காலியில் அமர்ந்திருந்த அவளின் வாசவார் குழல் இடைதாண்டி நீண்டிருக்க , அதில் பூசிஇருந்த எண்ணெய் போக சீயக்காய் (சிகைக்காய்) தேய்த்து விட்டு , வெந்நீர் ஊற்றி அலசியவனுக்கு அலைபேசியிலிருந்து அழைப்பு வந்தது. அந்த ஒசையை கேட்டவள் ,

அவன் கையிலிருந்த ஹேண்ட் ஷவரை (கை நீர் தூறி இப்படி போட்டா புரியாது )
வாங்கிக் கொண்டாள் .
"ரொம்ப நாழியா போன் அடிக்கறது , நீங்க போய் அங்க யாருன்னு பாருங்கோ யாராவது முக்கியமானவாளா இருக்க போறா? "
என நாற்காலியில் இருந்து எழ போனவளின் தோளில் கை வைத்து அழுத்தி
" முதல்ல நீ உட்காரு " என அவளை அமர வைத்தவன் தான் எண்ணெய் பூசிய இடங்களுக்கு மீண்டும் சீயக்காய் பூசி கூந்தலை தேய்த்தவன்
" ஏன்டி அதுவா முக்கியம்?
மீதி சேவகமும் முடிச்சிட்டுதான் போவேன் ", என்று கையில் சோப்பை எடுக்க
"ஒன்னும் தேவையில்லை நானே குளிச்சிக்கறேன் , நீங்க முதல்ல இங்கருந்து வெளில போங்கோ" என அவன் முதுகில் கரம் வைத்து
புன்னைமரக்கண்ணன் அவனை
வெளியில் தள்ளி கதவை அடைத்தவள்
மீதி குளியலை முடித்து வெளியே வந்தவள், உடையை மாற்றி கூந்தலை தளர பின்னிலிட்டவள்.

அன்று வரலெட்சுமி விரதம்என்பதால் , மிக அழகாக அம்பாளை அலங்கரித்து வணங்கியவள், பூஜை செய்து விட்டு தன்னவனை வணங்கி தன் முன் குங்குமத்தை நீட்டிய அந்த தெய்வ மங்கையை கடிந்து கொள்ள கூட மனம் வரவில்லை அவனுக்கு

"நீரு இந்த கால்ல விழறத செய்ய வேண்டாம்னு எத்தன தடவை சொல்றேன் , மத்த விஷயங்கள எல்லாம் நான் சொல்லாமலே புரிஞ்சி நடக்கற நீ, இந்த ஒரு விஷயத்தை மட்டும் மாத்திகோயேன் , நீ மட்டும் தான் விழுனுமா இனிமே நீ என் கால்ல விழுந்த நானும் உன் கால்ல விழுவேன் "
என்றவன் தானும் விழப் போக
"அச்சச்சோ என்னன்னா இதெல்லாம்.." என பதறி விலகினாள்.

என்ன பொருத்த வரைக்கும் கணவன் , மனைவி இருவரும் சமம் . என்றவனுக்கு அவளின் புன்னகை மட்டுமே பதிலாக கிடைத்தது.

நீராவிற்கு சிறுவயது நினைவு வந்தது. தன் தாய் வேதவதி ,தந்தை மணிவண்ணனை வணங்கியதை பார்த்தவள் தந்தையிடம்

" ஏம்ப்பா அம்மா உங்க கால்ல விழறா , அது வாடா நீரு குட்டி என தன்னை தூக்கி மடியில் வைத்தபடி ஊஞ்சல் ஆடியவர் , உங்கம்மாக்கு குறுக்கு பிடிச்சிண்டுத்தோ என்னவோ ?" என்றார். சிரித்தபடி

நேரொருவரில்லாளோ " இல்லை எனக்கு உண்மையான காரணத்தை சொல்லுங்கோப்பா " என கொஞ்ச

"ஏதுக்கும் நீ உங்கம்மாட்ட முதல்ல ஒரு தடவை கேளேன்" என்றார் மணிவண்ணன்,

"அம்மா நீங்க முதல்ல சொல்லனுமாம் " என்று தன் பாதங்கள் சத்தமிட தாயிடம்
சென்றவள் கூற , பூஜையறையில் இருந்து இவர்களது உரையாடலை கேட்டு கொண்டிருந்த வேதவதி தான் ஏற்றி வைத்த விளக்கை சேவித்து புன்னகையுடனே எழுந்திருந்தாள்.

நேரொருவரில்லாளின் இருபுற பிண்ணலுக்கும் பூ வைத்தபடி
"ஆம்படையான்தான் ஒரு பொண்ணுக்கு பகவானுக்கு சமானம்னு பெரியவா சொல்லுவா ", என்று பதிலுரைத்ததும்

"ஆம்படையான் ஆண்டவனா " என முழித்த பெண்ணைக் கண்ட

மணிவண்ணன் சிரித்தபடி எழுந்து வந்தவர் , " உங்கம்மா பிள்ளையார் மாதிரி இங்க இருந்தாலும் என்ன மட்டும் சேவிச்சி நான் கோவிக்கு போய் அம்பாளுக்கு எல்லாம் சேவகமும் பண்ணிற சேர்க்கற என்கைங்கர்யத்தோட பலன அடைஞ்டுறா "
N
என்றவர் நேரொருவல்லாளின் தலையை மெல்ல தடவியவர் , அவளிடம்
தாலி கட்டின ஒரு காரணத்துக்காக ஒருத்தன் ஒரு பொண்ணுக்கு கடவுளாக முடியாது நீருக்குட்டி என்ன பொருத்தவரைக்கும்

" ஒரு பொண்ணு ஒருத்தர பகவானுக்கு நிகராநிணைக்கனும்னா அதுக்கான தகுதி அவனுக்கு இருக்கனும். அதுமட்டுமில்லாம இன்னோன்னும் இருக்கு நீரு அவன் தான் எல்லாம்ன்னு பகவான் கிட்ட எவ்வளவு அன்பு நம்பிக்கையோட சரணடையறோமோ அது மாறி , நாம தான் எல்லாம்னு வரவாளோட அன்புக்கும் நம்பிக்கைக்கும் அவன்பாத்திரமா இருக்கனும். அதே அன்பையும் நம்பிக்கையும் அவன் அவளுக்கும் கொடுக்கவேண்டும்.அது இல்லாத ஒருத்தனை எந்த பெண்ணும் மதிக்க மாட்டாள். "

மகளுக்கு தான் கூறுவது சற்று குழப்பதை ஏற்படுத்தி இருக்கிறது. என புரிந்து கொண்டவர் ,
" சரி .. நீ நான் அம்மா எல்லாரும் ஏன் பாட்டிய சேவிச்சோம்?"

"அவா பெரியவா அதான் " என்றாள்.
"அதபோல அம்மாவ விட நேக்கு வயசு ஜாஸ்தியோன்னோ அதான் "
" சரி வா , நோக்கு பிடிச்ச பால்திரட்டு கிளறி இருக்கேன் அப்பா எடுத்துக் கோ "
என்றபடி உணவருந்த இட்டு சென்றார்.

நீருவை பொறுத்தவரையில் அது பின்னாளில் உண்மையாகி நிக்கோலஸ் அவளது கடவுள், நண்பன் , உறவு , சேவகன், அரசன் அனைத்துமானதும் அந்த நிகழ்வுகளும் நினைவுக்கு வர மனம் தந்தையையும் கடந்த காலத்தையும் நினைவுபடுத்த சிரிப்பு மறைந்தது.

சில இழப்பின் வலிகள் இறக்கும் வரை மாறாது. என்றாலும் தாங்கியபடி தள்ளி வைத்து பார்த்து கடத்தி விடுகிறோம் . எனினும் கடந்து வருவது என்பது இறந்தவரின் பாதிப்பு ஒருவர் மனதில் அவர்கள் இருப்பின் போது ஒருவருடைய வாழ்வில் ஏற்படுத்தும் பங்களிப்புகளின் ஆழத்தை பொறுத்துதான் கடத்துவதும் அல்லது கடந்து வருவதும்,

நொடியில் அதை மாற்றி தன் நிலைக்கு திரும்பி இருந்தாள்.அவன் நெற்றியில் திருநீறு வைத்தவள், முந்தானையால் மூக்கின் மேல் சிதறி இருந்த திருநீறை துடைத்தபடி

"கடவுள் அப்படிங்கற இடத்தை நாம யாருக்கு தருவோம். நம்மள காப்பவர்களுக்கு , நமக்கு அனைத்துமாகவும்இருக்குறவங்களுக்கு தான்.அப்ப எனக்கு எல்லா மா இருக்குற நீங்க என்னோட கடவுள் இல்லாம யாரு?" என்ற அவள் தான் அவனுக்கு எல்லாமாக இருந்தாள் .

" அது மட்டும் இல்லை கடவுள் என்றால் அனைத்தும் அறிந்தவர் அனைத்தினுள்ளும் இருப்பவர் அது போலத்தான் நீங்க எனக்கு "

நீருவுக்கு அவனும் அவளைப் பற்றிய அனைத்தும் அறிந்தவன் அவளினுள் நிறைந்தவன் அவனே,அவளது உணர்வு ,உலகம், உயிர் என அனைத்தும் அவனைச் சுற்றி மட்டுமே சுழலும் .

அவன் நிக்கோலஸ் சீராக வெட்டபட்ட முடி , தினமும் செய்கின்ற உடற்பயிற்சியில் பெற்ற தேகக் கட்டு , எந்த தவறான பழக்கமும் இல்லை என்பதை அறிவிக்கும் முகம்,

நிக்கோலஸ் ஜெனிபருக்கு சில உறவு மற்றும் பிரிவுகளுக்கு பின்பு முதல் கணவர் எட்வர்ட்கு பிறந்தவன் .
நிக்கோலஸின் மூன்றாவது வயதில் கருத்து வேறுபாட்டில் இருவரும் பிரிந்து விட அதனை தொடர்ந்து ஜெனிபர் நிக்கோலஸின் , ஐந்தாவது வயதில் செய்த இரண்டாவது திருமணத்தை ஏழாவது வயதில் முறித்துக் கொண்டார். மீண்டும் அவனது பதினைந்தாவது வயதில் ஜார்ஜை காதலித்து அவருடன் சேர்ந்து வாழ்ந்தவர் நிக்கோலஸின் இருபத்தி மூன்று அகவையில் மணம் முடித்து இன்று வரை அவருடன் வாழ்கிறார்.
ஆனால் அவனைப் பொறுத்தவரையில் அவன் அன்னை அற்புதமான மனுஷி அவனை வளர்த்திலோ , கல்வியளித்ததிலோ , அன்பு செலுத்துவதிலோ எந்த குறையும் வைத்ததில்லை. ஆனால் குடும்ப உறவு தந்தை பாசம் கிடைத்தது இல்லை.

தனது குழந்தைகளுக்கு தன்னைப்போல பல தந்தைகள் குழப்பங்கள் வேண்டாம் , என முடிவு செய்தவன். அதனாலேயே நிக்கோலஸ் ஒருவளை மட்டுமே காதல் செய்வது அவளையே திருமணம் செய்து இறுதி வரை அவள் அவனுக்காகவும் அவன் அவளுக்காக மட்டுமே என்ற உறுதியானகோட்பாடுகளின் பின் தன் அலைபாயும் மனதையும் உணர்வுகளையும் கட்டி வைத்திருந்தவன் , டேட்டிங் மீட்டிங் போன்ற எந்த சுழலுக்கும் சிக்கவில்லை. இராணுவத்தில் பணியாற்றியவன், ஒரு விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்தவன்,
கல்வி மற்றும் பண்பாட்டு பரிமாற்றத்திற்காக அவளது பல்கலைகழகம் தேர்வுசெய்து அனுப்பிய மாணவியரில் ஒருவளாக இங்கு அமெரிக்காவிற்கு வந்திருந்த நோரொருவரில்லாளை கண்டான்.

அவனோ கண்டவுடன் நேரொருவரில்லாள் மேல் காதலில் விழுந்தான். இவன் காதலை கூற அலைய அவளோ இவனை நிமிர்ந்தும் பார்த்தாள் இல்லை.

நேரொருவரிலில்லாளுக்கு தெரிந்திருந்து, தன் இதயமும் உணர்வுகளும் அவனுடன் பினைந்திருக்கிறது என்று , நிக்கும் அதை அறிந்து தான் இருந்தான் .

சப்திக்கும் தன் காலடிகளில் தயங்கும் நீரஜாவின் நடையில் அவள் தன்னை உணர்வதையும் , நிமிராத அவள் முகம் தன் நிழல் கண்டு பொலிவதையும் , அவள் உணர்வுகள் தன்னில் கலந்து இருப்பதையும் உணர்ந்தவன். அவன் வராத தினங்களில் அவள் தேடலையும் கண்டு கொண்டவன்

நேராவின் பின் சுற்றுவதை விட திருமணம் செய்து கொண்டு விடுவதுதான் , அவள் காதலை பெறுவதற்கு இருக்கும் ஒரே வழி என அறிந்து கொண்டான்.

அவனுக்கு இது புதிது ஒரு பெண்ணிடம் கவரப்படுவது பிறகு அவளை கவர்வது பேசி பழகி சுற்றி காதலை உணர்வது பின்பு அவளுக்கு அதை உரைப்பது சேர்ந்து வாழ்வது மேற்சொன்ன அத்தனையிலிலும் தாக்கு பிடித்தால் திருமணம் இல்லை பிரிவு என எளிதாக
புரிந்து பழகியிருந்தவனுக்கு

தன் முகம் நிமிர்ந்தும் பாராமல் கடை விழியில் தன் நிழலிலும் தன்னையறியும் நேரொருவரில்லாளை பிடித்திருந்தது . தனது பண்பாட்டில் இருந்து சற்றும் விலகாத கண்ணியம் கலந்த அவள் உடை மற்றவர் முன் நிமர்ந்த நடை, சிதறாத கவனம் .

ஆடவர்களை தொட்டு பேசாமல் கட்டியணைத்து பாசம் காட்டாமல் இருகரம் குவித்து வணங்கி அவர்களை தனது சகோதரனாக பாவிக்கும் , அந்த நேசமிக்க நடத்தை பிடித்தது.

அவன் அமெரிக்காவை தாயகமாக கொண்ட தாய் தந்தைக்கு பிறந்து அந்த கலாச்சாரத்தில் வளர்ந்தவன் , இங்கு படிக்க வந்த நீருவை கண்டதும் காதல்
அவளை பற்றி அறிய அவளது பண்பாட்டையும் ஒருவனுக்கு ஒருத்தி கோட்பாடும் பற்றி அறிந்தவன்
அந்த ஒருவன் தானாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாடு பற்றி அறிந்து கொண்டான்.

எந்நேரமும் உடையலாம் எனும் நிலையில் தோன்றும் காதலில் நம்பிக்கை உறவை விட, திருமணம் எனும் பந்தத்தின் அடிப்படையில் உறுதி செய்யபட்ட காதலின் பாதுகாப்பு உறவு எதிர்காலத்திற்க்கு நல்லது எனும் புரிதலுக்கு வந்தவன். நீரஜாவை அதற்கு முன் வந்த சில தடைகளை கடந்துமுறைப்படி மணந்து கொண்டான். இன்று வரை நீரஜாவின் நிக்கி மட்டுமே , வேடிக்கைக்கு கூட தனது பெயரை மற்ற பெண்களுடன் சேர்த்து பேச அனுமதிக்க மாட்டான்.தன்னவளுக்காக மட்டும் தான் தன் மனம் மற்றும் செயல் என நினைக்கும் நிகரில்லாத அன்பு வண்ணம் அவன்.

குங்குமத்தை நீருவின் நெற்றியில் வைத்தவன். அந்த சிமிழை வாங்கி பூஜை அறையில் வைத்தான். அவளை அலுங்காமல் சிதறய பவளமல்லியை கசங்காமல் இருவிரல் நுனி கொண்டு அழுத்தாமல் மெல்ல பற்றி கூடையில் சேர்ப்பது போல் கரங்களில் அள்ளி நெஞ்சோடு சேர்த்து கொண்டான்.

கூடத்தில் இருந்த நாற்காலியில் அமர்த்தியவன் தான் கீழே அமர்ந்து அவள் பாதங்களை மெல்ல பிடித்து விட்டான் .

அந்த தாமரைகள் சற்று பூசியது போல் வீங்கி இருந்தன.
"இல்லையே இவளுக்காக நானும் உப்பு சேர்ப்பது இல்லையே பிறகு இது எப்படி?" என யோசித்தபடி மேலே பார்க்க

சூல்தாங்கிய அந்த ரோஜாவோ , இரண்டு கரங்களிலும் இனிப்பு எடுத்து கொண்ட குழந்தை அதை சரியாக மறைக்க தெரியாமல் அன்னையிடம் மாட்டிக் கொண்டதும் திகைத்த விழியில் கதை கூற அது புனையும் கதையை ஏறக்காத தாயை மயங்க செய்ய மயக்கும் சிரிப்பையும் தருமே அது போல ஊறுகாய் சாப்பிட்டதை அவன் கண்டுபிடித்து விட்டதில் குழந்தையாகி நின்றாள் நேரொருவரில்லாள்.

நீரு என அவன் சிறு குரல் உயர்த்தலில் இனி சாப்பிடவில்லை என்றவள் முகத்தில் இருந்த சிறுபிள்ளை கோவம் அவனை கட்டி இழுக்க , இழுத்து முத்தம் வைத்தான் .அதில் நாணம் கொண்டவள் அவன் டீசர்ட்டின் கழுத்து கரையை பிடித்துக் கொண்டவள் மார்பில் புதைந்து
முகம் மறைத்துக் கொண்டாள்.

அவளுக்கு இது போன்று கூடத்தில் யாரும் வந்து விடக் கூடும் என்ற தருணத்தில் வரும் அச்சம் அவனை விட்டு சற்று தள்ளி நிறுத்த அந்த பரம்பரை அச்சத்தை தாண்டி அவளை முத்தாடுவதும் அதனை தொடரும் அவளது கிறக்கம் யாரும் வந்து விட்டால் என சுழலும் அவள் விழிகளின் தவிப்பு அவனுக்கு தித்திக்கும் போதை

தன் மீது கவிழ்ந்திருக்கும் அந்த தாமரையின் செவி மடல் அருகே குனிந்தவன் , "ஏய் நீரு இது நம்ம வீடு தான் வாசல் கதவும் பூட்டி தான் இருக்கு"
என்றவன் மேலும் எதுவும் கூறும் முன்
தன் மென் விரல்களினால் அவன் அதரங்களை மூட மிக சரியாக காலிங் பெல் ஓசை கேட்டது.

பதறி விலகிய அவளை
" ஏய் நீரு ரிலாக்ஸ் .. " என அமர வைத்து விட்டு , தான் எழுந்து சென்று கதவை திறந்தான்.
 

அத்தியாயம் 3

பக்கத்து வீட்டு சிறுமி செரீனா இவர்களை தேடி வந்திருந்தாள்.

"ஹாய் நிக் மார்னிங் நீரு "

என்று பெரிய மனுசி போல் உள்ளே வந்து நீருவின் அருகில்அமர்ந்த சின்னவள்,

அவள் கரங்களில் இருந்த வளைகளை பார்த்து , ஆர்வத்துடன் அதை தட்டி ஒலி எழுப்பி முன்னும் பின்னும் அசைத்து விளையாடியவள் ,

" இட் இஸ் சோ ப்யூட்டிபுல் "

என்று விழி விரித்து கூறிய சின்னவளை, தூக்கி தன் மடியில் அமர்த்திக் கொண்டான் நிக். அவன் இருபுறமும் கால் போட்டுக் கொண்டு அவன் மார்பில் கண்ணத்தை மோதி விளையாடியபடி கேள்விகளை கேட்டாள் குழந்தை.

"நீங்க ஏன் இவ்வளவு வளையல்கள் போட்டு இருக்கீங்க ஆன்டி ?"

என்ற குழந்தையின் கன்னம் தொட்டு முத்தம் இட்டவள் , சிரித்தபடி

" அது இவ்வளவு வளையல்போட்டுகிட்டா அதுலேர்ந்து வர்ர சத்தம் கேட்டு , நீரு வயத்தில இருக்கற பேபி ஹேப்பியா இருக்கும் அதான் "

என்றாள் .அதன் நெற்றியில் முத்தமிட்டு


"உனக்கும் தரவா வளையலும் சாக்லேட்டும்"

என்க . சரி என்பதாய் தலையை அசைத்த அந்த மல்லிகை செண்டிற்கு மேலும் ஒரு முத்தம் வைத்தாள்.
அதற்குள் செரீனாவை தேடி வந்த அவள்தாய் நீருவின் விளக்கங்களை கேட்டபடி உள்ளே வந்த அவள்

"நன்றி நீரு உங்கள் விளக்கங்களுக்கு
இவை எனக்கு தெரியாது "

என்றிருந்தார் .செரீனா கொஞ்சம் சுட்டி குழந்தையாதலால் இங்கே அடிக்கடி ஓடி வந்துவிடுவாள். இதோ இன்றும் செரீனா அவருக்கு போக்கு காட்டி விட்டு வந்திருக்க அவர் அவளை தேடி வந்தவர் நீரு கூறிய விளக்கத்தை செவிமடுத்திருந்தார் . அதைப் பற்றி சற்று நேரம் பேசிவிட்டு அவள் கொடுத்த வளையல் மற்றும் இனிப்புகளுடன் செரீனாவை அழைத்துக் கொண்டு திரும்பினார்.


அதீரை வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தாள். அப்போது அவளுக்கு வந்த அழைப்பில் ஒளிர்ந்த எண் கொடுத்த வெளிச்சத்தில் இன்னும் அதிகம் மின்னியது அவள் முகம். அலைபேசியை அனைத்தவள், அந்த வீட்டினுள் வாகனத்தை நிறுத்தினாள். கீழே இறங்கியவள் வரவேற்பறைக்குள் நுழைந்தவள்

" நீரு .."

என்ற சந்தோஷ கூச்சலுடன் அவளை கட்டியணைத்து கன்னத்தில் நச்சென்ற முத்தம் ஒன்றை வைத்தாள். அதீரைக்கு அலைபேசியில் முயன்று கொண்டிருந்தவள் , இவளைக் கண்டதும் நாற்காலியில் இருந்து இவளை வரவேற்க எழுந்தவள் , அதீரையின் செயலில் கூச்சம் கொண்டு

"சீ இதென்னடி பழக்கம் கட்டி புடிச்சிண்டு முத்தம் கொடுத்துண்டு , இஷிக்காம நின்னு பேசவே நோக்கு தெரியாதா "

என்ற நேரொருவல்லாளின் கரம் கன்னத்தை துடைத்து கொண்டாலும் முகம் தன் தோழியை கண்டதில் மலர்ந்திருந்தது .

"தாய்மை பாசத்துடன் கன்னம் தடவியவள் பாரு ஒழுங்கா சாப்பிடறதே இல்லை கன்னம் எல்லாம் உள்ள போயி
கழுத்து எலும்பு குழி விழுந்து என்ன டயட்டோ , வேலையோ "

என்றவளை மீண்டும் கட்டிக் கொண்டவள்.

" எல்லாம் உன்ன பார்க்காத ஏக்கம் தான் நீரு "

என்றாள். அந்தக் கால நடிகர் ஒருவர் ஸ்டைலில் அதில் வெட்கிய நீரு, அதீரையை விலக்க முயற்சி செய்தவளாய்

"தள்ளி நில்லுடி சும்மா சும்மாகட்டிண்டு"

என்றவளை இழுத்து கொண்டு அருகில் இருந்த சொகுசு நாற்காலியில் பொத் என்று விழுந்தவளை

"உனக்கு எப்போ பாரு எல்லாம் அவசரம் வேகம் சித்த நிதானமா நடந்துக்கவே தெரியாதா ,கொஞ்மாச்சு பொம்பனாட்டி மாறி இருக்கியா எப்ப பாரு ரெளடியாட்டமா இரு"

என கடிந்து கொண்டாள் நீரு. நீருவின் இரு தோள் மீதும் தன் கரங்களை வைத்து அவள் முகம் பார்த்த அதீரை

" நீதான் மடிசஞ்சியா இருக்க , என்னையும் உன்னோட சேர்க்க ட்ரை பண்ணாத டியர் , பாரு நீயெல்லாம் எக்னாமிஸ்ல பிஹெச்டி வாங்கினன்னு சொன்னா எவனாச்சும் நம்புவானா?"

எனக் கேட்க , தன் தோள் மீதிருந்த அவள் கரங்களை எடுத்து தன் கரங்களுக்குள் வைத்துக் கொண்ட நீரு

"அதுக்காக கழுத்துல கட்டி தொங்க விட்டுண்டு டா அலைய முடியும் ? "

என்றாள். பதிலுக்கு அதீரை

" அலைய வேண்டாம் ,படிச்ச படிப்புக்கு வேலையாவது பார்க்கலாம்ல.. உனக்கு இருக்க நாலட்ஜ்கு நீயெல்லாம் ஈஸியா பெரிய இடத்துக்கு வந்துடுவ"

என்று அவளை வேலைக்கு அழைத்தாள். மெல்ல அவளை பார்த்து சிரித்த நீருவோ

" உனக்கு இந்த வாழ்கை பிடிச்சிருக்கு அதீ ஆனா என்ன கேட்டா நேக்கு இந்த சம்பாத்தியம் , இந்த அதிகாரம் வேண்டாம்"

"அப்புறம் ஏன் நீரு அவ்வளவு படிச்ச?"

"எனக்கு படிக்கறதுக்கு பிடிக்கும் படிச்சேன், மேலும் என்ன பொறுத்தவரை படிப்புங்கறது அறிவு சம்மந்தப்பட்டது. நான் வேலைக்கு போய் அத யாருக்கும் நிறுபிக்க வேண்டியதில்லை.மேலும் நான் வேலை பார்த்து ஜீவனம் நடத்த வேண்டிய சூழ்நிலை இல்லை , சோ அந்த இடத்துக்கு தேவை படற இன்னோருத்தர் வந்தா அவரோட பொருளாதாரம் உயரும் .இந்த விஷயத்தை பற்றி எத்தனை தடவ கேட்டாலும் என் பதில் இதான் "

என்ற நேரொருவரில்லாள் முகம் பார்த்த அதீரை

"அதே மாதிரி தான் எனக்கும் நான் , நான் என்ன செய்யனும் செய்ய கூடாதுங்கறது என் சுதந்திரம் "
என்றாள் நிமிர்வுடன் .

"ஆனா அது அடுத்தவாள எந்தவிதத்திலும் பாதிக்க கூடாது "

என்று பதில் உரைத்த நீருவிடமும் அதே நிமிர்வு இருந்தது. அந்த அத்தோடு விஷயம் முடிந்தது என்பதாய்

"சரி சரி வாய தொற"

என அவளின் வாயில் இனிப்பை திணித்தாள்.

"ஸாரி நீரு அன்னிக்கு ஆபிஸ் மீட்டிங்ல மாட்டிக்கிட்டேன்"
என விளக்கம் சொல்ல வந்தவளை

"போறும் உன்னோட விளக்கம், இப்ப உன்ன கூப்படது சின்னதா ஒரு ட்ரீட் நம்ப மூன்று பேருக்கு மட்டும் "
என்றவளை

"ஏய் .."

என மகிழ்வுடன் அவள் கரம் பற்றி சுற்ற அதில் நீரஜாவுக்கு தலைசுற்ற தொடங்கியது , அவள் கை நழுவி கீழே விழுந்து விடுவாளோ என அவளை தாங்கிக் கொண்டான் நிக், அதீரையை முறைக்க அவளோ இதற்கெல்லாம் அஞ்சவா என்பதான ஒரு பார்வையை கொடுத்தவள்

"இங்க பாருங்கமிஸ்டர் நிக், நீங்க இங்க இரண்டு மாசம் படிக்க வந்த பொண்ண லவ் பண்ணி,கூட்டு பயிற்சின்னு அவ ஊருக்கு போய் கல்யாணம் பண்ணிட்டு வந்து சாவதானமா ,ஒரு கெட்டு கெதர் வைச்சி என்னய ஏமாத்திட்டு இப்ப வளைகாப்புக்கு விழாவுக்கு வரலன்னு மூஞ்சிய தூக்கினா பயந்துருவமா"

என்றபடி நீருவின் அருகில் வந்தவள்

"நான் என் நீரு குட்டிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன் , உங்களுக்கு முன்னாடி
அவ எனக்கு ப்ரண்ட் "

என்றபடி அவள் அருகில் அமர முயல , ஏற்கனவே தன் மனைவியை அதீரை உரிமை கொண்டாடியதிலும் முத்தமிட்டதிலும் பொறமையில் இருந்தவன் ,பட்டென நீருவை அவள் இருந்த இருக்கையில் இருந்து இழுத்து தூக்கி தன் மடியில் அமர்த்தி இரு தோளை சேர்த்து ஒரு கரம் தழுவ முன்புறம் மறு கரம் வளைய , வெட்கத்தில் குனித்த முகத்தை கண்ட பெருமையுடன்

"ஆனா என் மனைவி "

என அவள் மீது தன் உரிமையை அறிவிக்க.

"வைச்சிக்கோயேன் யார் வேண்டாம்னு சொன்னது "

என்றபடி காமிராவை தூக்கிக் கொண்டு,

" இப்படியே ஒரு போஸ் கொடுங்க "

என இருவரையும் அழகாக புகைப்படத்தில் கொண்டுவந்திருந்தாள்.
அதீரையும் நிக்கும் பள்ளியில் இருந்து தோழர்கள் , மேலும் நீரு இங்கு மாணவியாக வந்திருந்த போது முதலில்அவளிடம் நட்புக் கரம் நீட்டியவள் அதீரை,
நிக்கும் அதீரையின் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவன் எனினும் அவன் தாய் ஜெனிபரே இன்னும் பார்த்து கொள்கிறார்.

அதீரை இருக்கும் இடத்தில் இருந்து , இப்போது நிக் இருக்கும் வீடு ஒரு மணி நேர பயணத்தில் இருந்தது. இந்த தனி வீட்டை நிக்கோலஸ் நீரு திருமணம் செய்யும் முன் தான் அவர்கள் இருவருக்காகவும் வாங்கியிருந்தான்.
நீரு மற்றும் நிக் காதல் பற்றி அவளுக்கு
தெரியும் ,

உணவு மேசையில் அதீரையை அமர வைத்து அவளுக்கு உணவு பரிமாரியவளிடம்

" நீயும் உட்காரு நீரு நாம சேர்ந்தே சாப்பிடலாம் "

என்றபடி நிக் அவளுக்கும் ஒரு தட்டை வைக்க, மூவரும் ஒன்றாக ஏதோ கதைகளை பேசியபடி உணவருந்தி முடித்தனர்.
 
அத்தியாயம் 4

உணவு மேசையை ஒழுங்குபடுத்தியவள் அங்கு இருந்த பாத்திரங்களை அடுப்படியில் கொண்டு வைத்தாள். தட்டுகளை தேய்ப்பதற்கு போட்டவள்
அந்த சூப் இருந்த கின்னத்தை மட்டும் மூடி மறைத்து வைத்தாள்.

உணவு முடித்து வந்த அதீரையிடம் பால் பாயாஸ கிண்ணத்தை கொடுத்தாள் .

"சூப்பர் நீரு எனக்காக செஞ்சியா ? "

என்றபடி வாங்கிக் கொண்டவள்

"சொல்லி இருக்கலாம்ல நானே வந்து எடுத்துப்பேனே , எதுக்கு அங்கும் இங்கும் அலையற?."

என்ற அதீரைக்கு பதில் நிக்கிடம் இருந்து வந்தது.

"அது அதியோடது இந்தா, இது உன்னோடது "

என சூப் நிறைந்த தன் கையில் இருந்த கின்னத்தை மனைவியிடம் கொடுத்தவன் ,

"நான் மத்த எல்லாத்தையும் எடுத்து வைச்சிட்டு வரதுக்குள்ள சாப்பிட்றுக்கனும் "என வைத்தான்.
சூப்பை கையில் வைத்துக்கொண்டு ,

அப்பாவி போன்ற பாவணையை முகத்தில் கொண்டு வந்தவள் ,

"இன்னிக்கு மட்டும் லீவு விட்டுடுங்கோளேன் , நாளைக்கு சமத்தா குடிச்சிடுவேன் சரியா?"

அரக்கில் கரும் பச்சை கரையிட்ட மெல்லிய வகை பட்டு சேலை கட்டியிருந்த குழந்தையாய் அவள் கெஞ்ச , தோன்றியது ஜிமிக்கிகளாடும் சிறுமுகத்தை தூக்கி கொஞ்ச தோன்றியது . ஆனாலும் முயன்று
யசோதையின் பொய் கோபத்தை கொண்டு வந்து

"நோ..நீரு.. அவ்வளவையும் குடிச்சி தான் ஆகனும், இன்னிக்கு ஒழுங்கா சாப்பிடவே இல்லை" , என்றவனிடம்

"பால் வேனா குடிக்கறேனே ... " என்ற நீருவின் கோரிக்கைக்கு

"எதுக்கு அப்புறம் குடிக்கறேன் எனக்கு இப்ப வேண்டாம்ன்னு ஏமாத்த வா ,
ஒன்னும் தேவையில்லை "

என தன் கண் பார்வையில் நீருவை உட்கார வைத்தவன்

" நான் கிச்சன் சுத்தம் பண்ணி முடிக்கறதுக்குள்ள இத குடிக்கற " என நகர்ந்து விட ,

வேறு வழியின்றி ஒவ்வோரு ஸ்பூனாக மெல்ல குடித்துக் கொண்டிருந்தவளிடம் வந்த அதீரை.தன் பாயாஸ கிண்ணத்தை காலி செய்தபடி

"ஏன்டி ?நீரு, சூப் குடிக்கிறதுக்கு என்ன? நன்னா தானடி இருக்கு ? "
என்றவளுக்கு

"ஆமா போடி என்னடி ..இது உப்பும் இல்லாம ,உரைப்பும் இல்லாம, சப்பு சப்புன்னு ,பச்ச குழந்தைக்கு கொடுக்கறாப்பல , அதோட அசட்டு திதிப்பும் அதோட டேஸ்டும்... என
சலித்து கொண்டவள்,
ஒரு வத்தக் குழம்பு , புளி மிளகாய் ஒன்னும் இப்ப சாப்பிட விடுறது இல்லை.".

என புலம்பியபடி
சூப்பை ஒரு வழியாக காலி செய்தாள்.

நிக்கோ நீருவும் அதீரையும் பேசியதை கேட்டபடி வேலைகளை முடித்தான். அவனுக்கு சிரிப்பு வந்தது .அவளுடைய புலம்பல்களை கேட்டு , திருமான புதிதில் எங்கேனும் விருந்துக்கு போனால் அவள் படாத பாடு பட்டு போவாள். எந்த உணவு வகையில் எது சேர்த்து இருக்கிறதோ என திண்டாடி விடுவாள் .அதற்கு பயந்தே வர மறுத்து விடுவாள். வந்தால் அவனை விட்டு அகலமாட்டாள்.

மசக்கையின் போது இந்த உணவுகளின் வாடை கூட பிடிக்கவில்லை என ஒதுக்கி இருந்தாள். இப்போது இரத்த அழுத்தம் கூடியதால் வேறு வழியின்றி அவன் கட்டாய படுத்தி உண்ண வைத்து இருக்கிறான்.

கர்ப்பிணி பெண் சாப்பிட்ட உடன் மூச்சு முட்டுவது போல் இருக்க கூடத்தில் மெதுவாக நடை பயின்று கொண்டிருந்தாள்.

அவள் சிரமப்படுவது கண்டவன்,

"நீரு, இத வேனா மாத்திக்கறியா, ஈஸியா இருக்கற மாதிரி ஏதாவது போட்டுக்கறியா?"

என அவள் ஆடையை சுட்டி கேட்க

"வேண்டாம்.." என்பதாய் தலையசைத்தவள் லேசாகமூச்சு வாங்க, அவன் புயத்தை கொழும்பென தளிர் கரம் கொண்டு சுற்றிய அந்த கனிதாங்கிய கொடி அவன் தோள் மீது தலை சாய்ந்தபடி சற்று நேரம் அமர்ந்திருந்தாள்.

அதீரையும் அவனும் நிர்வாகம் குறித்து பேச ஆரம்பித்தவர்கள் பேச்சுவார்த்தை நீள அவளால் நீண்ட நேரம் அமர முடியாமல் இலேசாக இடுப்பு வலிக்க எழ முயன்றவளை தடுத்தவன்

அந்த நீண்ட சொகுசு இருக்கையை சரி செய்து அவன் மடி மீது தலை வைத்து ஒரு புறம் சாய்த்து படுக்க வைத்தான். ஒரு கையால் லேசாக நீருவின் இடுப்பு பகுதியை நீவிக் கொண்டே , அதீரை கூறிய அலுவலக விஷயங்களை கேட்டு கொண்டிருந்தான். நீருவும் வலி குறைய உறங்கி இருந்தாள்.

கோப்பில் இருந்த தகவல்களை படித்தவன் அதில் தன் கருத்துகளையும் சில இடங்களில் திருத்தங்களையும் கூறி தெளிந்த பின் தனது கையெழுத்தை இட்டான்.

"வெயிட் அதீ இப்ப வரேன் "

என்றவன் , தன் மடியில் துயில் கொண்ட அந்த வெண்ணிலவை ,வானம் மேகத்தை தாங்குவது போல் தன் பரந்த கை கொண்டு ஏந்தியவன் , அம்மஞ்சு நிகர்த்த பள்ளியில் அவளை இட்டான். அவளை கண்ணிமையாது பார்த்துக் கொண்டிருந்தான்.

தாய் வேலைக்கு செல்லும் நேரம் அறிந்த குழந்தை , அவளை பிரிய மனம் இன்றி கண்களின் வளையத்தில் அவளை வைத்திருப்பதும் அவள் இல்லை எனில் அழுவதும் அவளைக் கண்டதும் பாய்ந்து சென்று இடுப்பில் ஏறிக் கொண்டு, இடுப்பை விட்டு இறங்காமல் அடம் செய்யுமே …. அதுபோல தன் பிரிவை தாங்க முடியாது பின்னேயே அலையும் தன்னவளின் அன்பின் நிலையைக் கண்ட அவன் நெக்குருகிப் போனான். அவள் நிலை இத்தகையது எனில் அவனோ...

அமுதூறும் மார்பின் வலியோடும் அன்பு வழியும் கண்களின் நீரோடும் வேறு வழியின்றி செல்லும் தாயின் நிலையில் அவன் இருந்தான்.

அதுவும் தனது மகவுகளை தாங்கிய அவளை தனியாக விட்டு செல்வதை நினைத்து நிக்கிற்கு நெஞ்சம் வலித்தது.
ஒரு பெருமூச்சுடன் அவளிடம் குனிந்து நெற்றி பரப்பில் ஒற்றை முத்தம் வைத்தவன், அவளுக்கு போர்வையை போர்த்தி விட்டு எழுந்தான் . தூக்கத்தில் கூட நிக் அருகில் இல்லை எனில் உடனே எழுந்து தேடி வந்து விடுவாள்.

நேரம் குறைவாக இருப்பதை உணர்ந்தவன், அதற்குள் அதீரையிடம் பேசி முடித்துவிட நினைத்தவனாய் கூடத்தை நோக்கி விரைந்தான்.

கோப்புகளை சேகரித்து அடுக்கி விட்டு அவனுக்காக காத்திருந்த அதீரையின் அருகில் சென்று அமர்ந்தவன்,

"அதீ … ராணுவத்தில இருந்து திரும்ப வேலைல சேர சொல்லி எனக்கு உத்தரவு வந்திருக்கு நான் திரும்ப வரவரைக்கும் நீதான் நீரு கூட இருந்து அவள பார்த்துகனும்" ,

என்றவன் ஒரு நிமடம் நிறுத்தி மூச்சை உள்ளிழுத்தவன் எப்படியும் இதை கூறித்தான் ஆக வேண்டும் என்பதாய்

"அதீ .. , ஒரு வேளை நான் திரும்ப வரலைன்னா கூட "

என்ற தன் தோழனை அனைத்துக் கொண்டாள் அதீரை .மெலிதாக தலையை ஒப்புதலாக அசைத்த அதீரையின் கண்களில் மென் கண்ணீர் படலம் திரையிட அதனை மறைத்து

" உன் பையன பார்க்க நீ வருவ "

சிறு சிரிப்பு மற்றும் நம்பிக்கையுடன் கூறினாள்.

"ஒன்னு இல்ல அதீ இரண்டு "

என்றவனின் முகம் இப்போதே மழலைகளை மடிதாங்கியது போன்ற நினைவில் மகிழ்வில் ஜொலித்தது,
அடுத்த நொடியே அது மாறி

"அம்மாவ நீரு கூட இருக்க சொல்ல முடியாது அதீ ,ஏன்னு உனக்கு தெரியும் "

என்ற நிக்கின் முகத்தில் யாரும் இன்றி தனியாக அவளை விட்டு வேதனை பெரிதாக மனதில் எழ அது முகத்திலும் விழிகளிலும் வழிய நின்றான்.

அதனை கண்ட அதீரை

" ம்ஹும் .."

என மறுப்பாய் தலையாட்டியவள் ஆறுதலாக அவனது தோளில் தனது கரம் பதித்து அழுத்தினாள்.

நிக் தனக்கு இருபத்தி மூன்று வயதில் தந்தை என வந்த வரை இன்னும் அவன் மனம் ஏற்கவில்லை , அவனை பொருத்தவரை அவர் தன் தாயின் கணவர் அவ்வளவே மேலும் ஜெனிபரும் தனது தனிப்பட்ட வாழ்கையில் நிக் நுழைவதை விரும்பாதவராய் கணவருடனேயே தனித்து வாழ வேண்டும் எனும் முடிவுடன் இருந்தார்.

ஜெனிபரை பொருத்தவரை நிக் வளர்ந்து விட்டான். இனி அவன் வாழ்கை அவன் இஷ்டம், இனி தான் தனக்காக வாழவேண்டும் என்பது அவரது முடிவு.

நிக்கிற்கும் அவர்களுக்கு இடையே துருத்தி கொண்டு இருக்க விருப்பமில்லை. எனவே தான் அவன் இராணுவத்தில் சேர்ந்தது. தனியாக வந்ததும்.

நீருவுக்கு அவரை தன்னுடன் இருக்க சொல்ல இஷ்டம் என்றாலும் , இதில் அவள் உள்நுழைவது பல குழப்பங்களுக்கு வித்திடும் என்பதால்
அமைதி காக்கிறாள்.

நிக் நகர்ந்த சில நிமடங்களிலேயே தூக்கம் கலைந்து விட்ட நீரு , அவனை தேடி கூடத்திற்கு வந்தவள்

அதீரையிடம் ,

"நான் திரும்ப வருவேனா இல்லையா தெரியாது இது என்னோட லாஸ்ட் ட்ரிப் பா கூட இருக்கலாம்"

என்ற வார்தையை அவன் கூறி முடிக்கும் முன் விரைந்து வந்தவள் தன் கரம் கொண்டு நிக்கோலஸ் வாயை மூடியிருந்தாள்.

கண்களின் நீர் வழிய அவள் நின்ற கோலம் , மனதை பிளக்க அவளை இறுக தழுவிக் கொண்டவன் அவள்கண்ணீரை துடைக்க

அவர்களின் அந்த தனிமையை கெடுக்க
விரும்பாதவளாய்,அதீரை அந்த இடத்தை விட்டு மெல்ல அகன்று தோட்டத்திற்கு வந்திருந்தாள்.

தன்னவனின் கையை எடுத்து தன் கரங்களுக்குள் வைத்துக் கொண்டு அவன் கண்களை பார்த்தவள்

" நீங்க திரும்ப வரனும் வருவேள் "

என்றாள். அவள் முகத்தில் தெரிந்த உறுதி , அவள் காதலின் நம்பிக்கையில் அந்த கண்களில் ஒளியை கண்ட நிக்கோலஸ் அவளுக்காக எந்த நிலையிலும் மீண்டு வர உறுதி கொண்டான்.

அதீரை தோட்டத்தில் நின்றவளுக்கு ஒரு சலனம் தன் வாழ்வு முறையின் மீது இது போன்று தன்னை தாங்கவும் ஒருவன் இருந்தால் நன்றாக இருக்குமே? என தோன்ற அடுத்த நொடி..
குடும்பம், குழந்தை என்ற கமிட்மென்ட்ஸ் வேண்டாம் ...அது எப்போதும் துன்பம், இப்படியே ...
சம்பாதிக்க செலவு செய்ய, ஒரு தொல்லையும் இன்றி நன்றாக தானே இருக்கிறது. என ஒரு சிந்தனை ஒட..

இருக்கிறது. எல்லாம் இருக்கிறது. உன்னிடம் எதற்காக?, யாருக்காக?, என்ற நோக்கம் இருக்கிறதா ?உன்னிடம்?
சில நிமிட சுகத்திற்கு பின் தோன்றும் இன்பம் சரி? நிம்மதி இருக்கிறதா ? மறுபுறம் மனம்தேட

நினைவுக்கு வந்தவள் அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை. வாகனத்தை கிளப்பிக் கொண்டு வந்து விட்டாள்.

அதீரையின் மனம் இன்னும் எவ்வளவோ இதைப் பற்றி யோசிக்க தோன்றினாலும் , எல்லாவற்றையும் விட இப்போது முன்னனியில் நீருவின் நலமே முக்கியம் எனப்பட அவற்றை தள்ளி வைத்துவிட்டு

அலைபேசியின் வழி தான் வீட்டிற்கு செல்வதை நிக்கிடம் கூறியவள்.

" டாட் அன்ட் மாம் இரண்டு பேரும் வெளிநாடு போயிருக்காங்க , நீருவ அங்க அலைய வைக்கறத விட நான் அங்க வரது தான் நல்லது "

என்றவள் விடை பெற்று அலைபேசியை வைத்தவள்,அது சார்ந்த சில திட்டமிடல்களில் இறங்கினாள்.
 
அத்தியாயம் 5

இரண்டு மாதங்களுக்கு பிறகு
தெற்கு சூடானின்
அமெரிக்க அமைதிப்படை முகாம்.

தெற்கு சூடான் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்று . இப்போது புதிதாக சுதந்திரம் பெற்ற இளம் நாடு,

நைல் நதியவள் அரவணைப்பும் , இயற்கையின் அருளிய எண்ணெய் வளம் தாது வளங்கள் நிறைந்த நாடு விவசாயம் பூர்வ தொழில் இத்தனை இருந்தும் ..

பேராசைக் கண்களில் பட்டதன் விளைவு,
அதிகாரத்தில் இருப்பவர்களிடம் பிரிவினை ,தன்னலம் முக்கியமாக போக உள்நாட்டு போர். அதுவும் சில ஆண்டுகள் நீடித்ததன் கொடூரம், சில இலட்சம் இறப்பு, பல இலட்சம் மக்கள் அகதிகளாய் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்.

விவசாயிகள் விவசாயம் செய்ய இயலாமல் போராளிகளாகவும் எண்ணெய் வயல் கூலிகளாகவும் அகதிகளாகவும் மாறுபட்டு போனதன் பயன் உணவுத் தட்டுப்பாட்டு , உருவாக்கப்பட்ட பஞ்சம் பல்லாயிரம் உயிர்களை பலி வாங்குகிறது. ஜநாவும் , உலக நாடுகளும் அமைதிக்காய் போராடுகின்றனர்.

இவன் நினைத்த உடன் மனைவிக்கு பேச கூடிய சூழல் களத்தில் ஏது ?
சில முறை நீருவுக்கு அழைத்து பேசியவனுக்கு அதன் பிறகு பேச சூழல் அமையவில்லை


தெற்குசூடானின் தலைநகர் ஜுபே யில் இருந்து சில நூறு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு முகாமில் நிக் பணியமர்த்தப்பட்டு இரண்டு மாதங்களாகிறது

தனது அறையில் இருந்தும் வெளியே வந்தவன், வழக்கம் போல தனது மெல்லோட்டம் எனும் ஜாகிங் போவதற்கு தயாரான உடைகளுடன் இருந்தான் .
POC (Protection of Civilians) பாதுகாக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியின் வழியே ஒட ஆரம்பித்தான்.

அங்கு வீடுகள் இல்லை அனைத்தும் வெள்ளை நிற கூடாரங்கள் , அமைதி படையினரால் வழங்கப்பட்ட தார்பாய் கொண்டு மூடப்பட்டிருந்தன. வீடுகளை சுற்றி சில மூங்கில்குச்சிகள் கொண்டு செய்த படல்களை கொண்டு வேலிகள் அமைத்திருந்தனர்.

சிலருக்கு வெறும் கூடாரம் மட்டும் , இன்னும் சிலருக்கு நடைபாதை ஒர கடைகள் போல் நாற்புறமும் நான்கு குச்சிகள் மேலே மட்டும் வெண்ணிற சாக்குபைகளை கிழித்து மூடியிருக்க மற்ற இடங்கள் திறந்து கிடக்க அதன் கீழ் சில குடும்பங்கள் ,

இவற்றை பார்த்து முதலில் மனம் பதறிப் போனான். இது போன்ற வறுமையின் நிஜதரிசனத்தை அவன் இதுவரை எந்த போர் களத்திலும் கண்டதில்லை . போர்கள் மனித உயிர்களை மட்டும் காவு கொள்வதில்லை. எப்படி கோரமாக சிதைக்க முடியுமோ அத்தனை கோரமாக
சிதைத்து கொண்டிருப்பதை கண்டவன் தற்போது தான் ஒருவாறு சகித்து தன்னை மீட்டுக் கொண்டிருக்கிறான்.

அன்றைய தனக்கான பணிகளை மூளைக்குள் திட்டமிட்டு அடுக்கியபடி ஓடிக் கொண்டிருந்தவன் எதிரில்

இடுப்பில் குழந்தையும் தலையில் ஒரு பெரிய வாளியுமாய் , வந்து கொண்டிருந்தாள் அந்த பெண் மேலே சட்டை போன்ற துணி இடுப்பில் பாவாடை போன்ற துணியை முடிச்சு போட்டு இருந்தவள் சால் போன்ற துணியைக் கொண்டு வலது கைக்கு கீழாகவும் மார்பு முதுகை மறைத்து இரு நுனிகளையும் சேர்த்து இடது
தோளின் மேல் முடிச்சிட்டு இறுக்கி இருந்தாள்.

இடுப்பில் இருந்த குழந்தையை கீழே விழுந்து விடாமல் ஒரு துணி கொண்டு தன்னுடன் சேர்த்து கட்டி இருந்தாள். கழுத்தில் சில மணிகளை கொண்ட மாலை அணிந்திருந்தாள்.
இவனைக் கண்டதும் பாதையிலிருந்து சற்று ஒதுங்கிக் கொண்டவள் சிரித்தபடி
குழந்தையில் காதில் எதையோ கூற அதற்குள் அருகில் நெருங்கி இருந்த
நிக்கை கண்டதும் அந்த குழந்தை புன்னகைத்தது. அதைக் கண்டதும் தானும் புன்னகைத்தபடி அதன் கன்னம் தடவியவன் கையசைத்து விட்டு ஒட்டத்தை தொடர்ந்தான்.

அந்த பெண் பெயர் மேரி அவள் குழந்தை பெயர் மேத்யூ அவர்களை இங்கு கொண்டு வந்து சேர்த்ததும் அவன்தான்.

தலைநகர் ஜுபேயில் உள்ள அவனது தலைமை அலுவலகத்திற்கு கணக்குகள் மற்றும் தகவல்களை சமர்பிப்பதற்காக சென்றவன் அன்று தன் மனைவியுடனும் பேசிவிட்டு அந்த மகிழ்ச்சியிலே வாகனத்தை இயக்கிக் கொண்டு வந்தான்.



கண்களில் விழுந்தது சாலையோரமாய்
கீழே விழுந்து கிடந்த மேரியும் மேத்யூவும் தான். இவர்களை சுற்றி சிலர் நிற்க வண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்கியவன் ஓடிச் சென்று பார்த்ததில்
மயங்கி இருப்பது தெரிந்தது.

குடிநீர் எடுத்து வந்தவன்அதனை முகத்தில் தெளித்தவன் அதனை பருக கூட ஜீவனற்று கிடந்த அவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக புகட்டியவன்
பிறகு அவர்களை வாகனத்தில் அமர வைத்தான் . அப்போதும் கூட அவளது உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.

நீண்ட தூரம் நடந்தது சில நாட்களாக தொடரும் பட்டினி ஊட்டச்சத்து குறைபாடு அனைத்தும் அவளை இறப்பின் விளிம்பில் நிறுத்தியிருந்தது.

அவர்களை தங்களது முகாமிற்கு அழைத்து வந்தவன் , தக்க நேரத்திற்கு தாயையும் சேயையும் மருத்துவர்களிடம் ஒப்படைத்ததில் இரண்டு பட்டினி சாவுகள் தடுக்கப்பட்டிருந்தன.

மேரி பேசக் கூடிய நிலைக்கு வந்த பிறகு
அவள் கூறிய தகவல்கள் அப்பப்பா…, துயரத்தின் உச்சம்

நான்கு நாட்களுக்கு முன்பு மேரியின் ஊரில் இரு இனக்குழுக்களுக்கு இடையே வெடித்த பகையில் தீடீரென்று சந்தையில் புகுந்து இரு தரப்பும்சுட இடையில் பல அப்பாவிகள் பலியாகினர். தப்பி பிழைத்த பொதுமக்கள் கிடைத்த வீடுகளுக்குள் புகுந்து தங்களை காத்து கொண்டனர். வீடுகளுக்குள்ளும் புகுந்து சுட ஆரம்பித்தனர்.

மேரியின் வீட்டினுள்ளும் ஒரு இனக்குழுவை சேர்ந்த சில அப்பாவிகள் புகுந்தனர். அவர்களை துரத்தியபடி வந்த
வெறியர்களும் உள்ளே நுழைந்து என்ன ஏது என விசாரிக்க கூட இல்லைஅவளது கணவனை அவள் கண் முன் சுட்டு தள்ளியவர்கள் மற்றவர்களையும் தேடி சுட ஆரம்பிக்க , கணவனுக்காக அழகூட இயலாதவளாய் உறங்கிக் கொண்டிருந்த தனது குழந்தையை தூக்கிக் கொண்டவள் , பின் பக்கமாக
தப்பி வந்தாள் .

அகதிகள் முகாமிற்கு நடந்தே நான்கு நாட்களாக உணவு நீரின்றி வர பல நாட்கள் சரியான உணவு இன்மை அதிர்ச்சி அனைத்தும் சேர்ந்து அவளை மயங்க வைத்து இருந்தது.

இப்போது இங்கு POC யில் தங்கி இருக்கிறாள். அவளுக்கென்று தொழில் ஒன்றை கற்றுக் கொண்டு முன்னேற முயன்று கொண்டிருக்கிறாள்.

உடற்பயிற்சியை முடித்து திரும்பிய நிக்கோலஸ்,குளித்து தனது இராணுவ உடையில் கண்காணிப்பு பணிக்காக தயாராகி வந்தான்.

அவனும் அவனுடைய வீரர்களும் தினமும் ஆறு மணி நேரம் நடந்து அவர்களது எல்கைக்கு உட்பட்ட பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வர்

நிக்கிற்கு தனி வாகனம் உண்டு . அதிலும் ரோந்து பணியை மேற்கொள்ளவான். எனினும் தெற்கு சூடானின் சாலை வசதிகள் மிகவும் மோசம்

பெரும்பாலான இடங்களில் வெறும் மண் தடங்களே அதுவும் களிமண் சதுப்பு நிலங்களில் முட்டி அளவுக்கு புதைய , நாற்பது டிகிரி வெயிலில் வழி தவறி விடாமல் சுற்றி வந்து,

உள்ளூர் போராட்ட குழுவினர் மற்றும் இராணுவத்திடம் இருந்து மக்களை பாதுகாப்பது என்பது எளிதல்ல , அவர்களின் தாய்நிலம் அது ஆனால் அமைதி படை வீரர்களுக்கு பெரும் சவால்

இன்று காலை ரோந்து பணிக்கு வீரர்கள்
செல்லும் போது தானும் அவர்களுடன்
இணைந்து கொண்டான். அனைவரும் அவர்களது ராணுவ உடையும் தலையில் தொப்பியும் முதுகில் தங்களுக்கு தேவையான தண்ணீர் உட்பட சில உடைமைகளையும் ஒரு பையில் முதுகில் தாங்கியவர்கள் . கையில் ஏந்திய துப்பாக்கியோடு நடக்க வாகனத்தை மட்டும் மாற்று பாதையில்
வரும் படி பணித்திருந்தான்.

நீர் வற்றிய வண்டல்கள் சில இடங்களில் சகதியும் சேருமாய் இருக்க பல இடங்கள் நன்கு காய்ந்து புழுதி பறக்க இருந்தது.
வண்டங்களில் புற்களும் கரைகளில் புதர்செடிகளும் மண்டியிருக்க அவைகளுக்கு இடையே இரு கிராமத்தை இணைக்கும் மண் தடத்தில்
பயணித்து கொண்டிருந்தனர்.

அவர்களுடைய முகாமில் இருந்து ஒரு இரண்டு மணி நேர நடை பயணத்திற்கு பின் ஒரு கிராமத்தை அடைய அங்கு அது அவன் பார்வையில் பட்டது.

சட்டென தன் வீரர்களிடம் திரும்பி வாயில் விரல் வைத்து அமைதியை வலியுருத்தியவன் , புதர் வழி மெல்லமறுபுறத்தை உற்று நோக்க


நிக்கின் பார்வையில் பட்டது
புதருக்கு பின் நின்று கொண்டிருந்த
பதினைந்து வயது மதிக்கதக்க பெண்ணும் அவளை சுற்றி நின்ற சில இராணுவ வீரர்களும் தான் , அதில் ஒருவன் ஏதோ பேசியபடிஅந்த பெண்னை இழுத்து வாகனத்தில் ஏற்ற முயல்வதையும் , மற்றொருவனின் தவறான தொடுகையும் கண்டவனுக்கு அதிக நேரம் தேவைப்படவில்லை,
நிலைமையை புரிந்து கொள்ள .
இவர்கள் மறுபுறம் வந்து கொண்டிருந்ததால் அவர்கள் கவனத்தில் விழவில்லை .

சட்டென ஒரு குண்டு நிக்கின் துப்பாக்கியிலிருந்து வெளியேறி அந்த சிறுமியின் கரம் பற்றி இருந்தவனது தோளை பதம் பார்க்க , ஆ ... என்று கதறியபடி கரத்தை விலக்கியவன் , மறு கரத்தால் வழியும் இரத்த்தை மூடியபடி மண்டியிட்டு அமர்ந்தவன் சுற்றிலும் தேட

இதற்குள் பதறிய மற்ற அனைவரும் துப்பாக்கியை இயக்கும் முன் அவர்களை நிக்கின் வீரர்கள் சுற்றிவளைத்திருந்தனர்.

சுற்றிலும் சுள்ளிகளாக சிதறிகிடந்தன.
விறகு பொறுக்க வந்திருப்பாள் போலும்
அந்த பெண் கருப்பான ஒடிசலான தேகத்துடன் இருந்தாள் , கை கால்கள் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தன .
நிக் குடிநீர் புட்டியை நீரை நீட்ட , முதலில் பயந்தவள் பிறகு அவன் கண்களில் தெரிந்த அன்பில் நீரை வாங்கி பருகியவள் தன்னை ஆசுவாசபடுத்திக் கொள்ள


தன் கையில் இருந்த துப்பாக்கியை பின்புறம் நின்றிருந்தவனிடம் கொடுத்தவன் , காயம் பட்டவனை நெருங்கி ஒரு அறை வைத்தான். அதில் இரண்டு பற்கள் தெரிக்க ஒரு பக்க ஜவ்வு கிழிந்து கண்களில் பூச்சி பறக்க விழுந்து கிடந்தான். மற்றொறுவனுக்கு
விழுந்த மிதியில் இனி அவனுக்கு புத்திரபேரு இல்லை என மற்றவர்களுக்கு உறுதியாகிவிட , அனைவரும் நிக்கின் வீரர்கள் கட்டுபாட்டில் வந்து விட்டனர்.

காலடியில் கிடந்தவன் சட்டையை பற்றி மேலே தூக்கியவன் , கோபத்தில் காது மடல்கள் சிவக்க

" நீயெல்லாம் போர்... வீரன் நாட்டை காக்க வேறு போகிறாய்? , உன் தாய்க்கோ, சகோதரிக்கோ ,மனைவி, மக்களுக்கோ இப்படி ஒரு நிலை வந்துவிடக் கூடாது ..என்று தானே இரவு பகலாக போர் புரிகிறாய் , இவளும் உன் நாட்டு பெண் தானே…?"

எனக் கேட்க்க அவனுக்கோ வாங்கிய அறையிலும் உயிர் பயத்திலும் உறைந்து போயிருந்தவனுக்கு இவன் கோபத்தில்
கூறியது எதுவும் விளங்கவில்லை.

அதற்குள் அங்கு இருந்த ஒருவன் கோபமாக அவர்கள் நாட்டு மொழியில் ஏதோ கூற நிக்கிற்கு புரியவில்லை ,

அதற்குள் அந்த பெண் தானே கூறினாள்.

"என் தந்தை போராளிகள் குழுவை சார்ந்தவராம் அதனால் என்னை பழிவாங்குகிறார்களாம் . "

என்றவள் மிக ஏளனமாக விரக்தியாக சிரித்தவள்

" இந்த நாட்டு அரசாங்கத்துக்கு … இவர்களுக்கு கொடுப்பதற்க்கு சம்பளம்
இல்லையாம் ,அதற்கு சன்மானமாக எந்த பெண்களை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள அனுமதித்திருக்கிறதாம். உங்களால் அவர்களை எதுவும் செய்ய முடியாதாம்."

என்றவளுக்கு அதற்கு மேல் பேச வலு இருக்கவில்லை. ஏற்கனவே நடந்த போராட்டத்திலும் களேபரத்திலும் களைத்து இருந்தவள் தரையில் அமர்ந்து விட்டாள்.

தன் நண்பன் டேனியிடம் கண்களை காட்டி அவளை கவனித்து கொள்ளுமாறு கூறியவன்

தனது வாக்கி டாக்கியை எடுத்து ரோந்து பணியில் இருந்த வாகனத்தை அழைத்தான்.

சில நிமிடங்களில் வாகனம் இவர்கள் இருக்கும் இடம் வர அந்த பெண்ணை மருத்துவ முகாமிற்கு டேனியுடன் அனுப்பி வைத்தான்.

அந்த உள்நாட்டு ராணுவ வீரர்ளை அவர்களின் தலைமையகத்துக்கு தங்களது வாகனத்தில் அழைத்து சென்றான்.
இவர்களை கொன்று விடுவது தான் விருப்பம் என்றாலும் பணியில் அது போல செய்ய முடியாதே...

இவர்களை அவர்கள் தலையிடத்தில் ஒப்படைத்தவன் தலைவரை சந்தித்து விட்டு வந்தான்.

அந்தி சாய ஆரம்பிக்க சூரியனும் எதிரில் இருந்த மலை தொடர் படுக்கையில் துயில் கொள்ள ஏதுவாக மேகப் போர்வையை உதறி தயார் செய்ய
சிதறிய மேகம் சுற்றி எங்கும் பரவ,
கதிரவன் தன் ஆரஞ்சு கரங்களிலில் நைல்நதி பெண்ணை தீண்டி அவளை சிவக்க வைத்துக் கொண்டிருந்தான். அவளோ நாணம் மிக நிழல் ஆடையை போர்த்தியபடி வளைந்து வளைந்து நகர்ந்து கொண்டிருந்தாள்.

வாகனத்தை நிறுத்தியவன் கண்கள் பார்த்து கொண்டிருந்தன. ஆனால் மனம்?

இவற்றை ரசிக்கும் மனநிலையில் இல்லை நிக் , அவன் என்ன மாதிரியான மனநிலையில் இருக்க முடியும் ? இங்கு நடப்பவற்றை பார்த்த பிறகும்,

கண்கள் சுற்றப் புறத்தில் பதிந்தாலும் நினைவுகளில் வேறு ஓடிக்கொண்டிருந்தது.

மிகச் சரியாக அவனது வாக்கி டாக்கி ஒலித்தது எடுத்தவனுக்கு
"ஆல் ஆர் டெட் இன்... அட்டாக் "
என செய்தி கூறவும் தனது வசீகர புன்னகையை சிந்தியவன்
"காட் இட், ஓவர் " என்றவன் வாக்கி டாக்கியை பையில் வைத்தான்.

நதியின் கரையில் இருந்த அல்லி பூக்களை பார்த்தபடி மெல்ல நடக்க அவளின்நினைவு அவனுள் நீரோட்டமாய் சுழன்றது .
 
Status
Not open for further replies.
Top