தீபாகோவிந்த்
Moderator
மயங்கொலிப் பிழைகள்
அத்தியாயம் 1
அந்த பிரம்மாண்ட கார்ப்பரேட் நிறுவனத்தின் பொருளாதார மற்றும் நிதி ஆலோசனை துறையில் வரும் நிதி ஆண்டிற்கான திட்டங்கள் நிர்வாகத்தின் முன்னெடுப்புகள் மற்றும் அவர்களின் நிதிநிலை அறிக்கை , பங்குகள் பற்றிய விவாதங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தது.
அவள் அதீரை அந்த துறைக்கு மட்டுமல்ல அந்த நிதி சாம்ராஜ்யத்தையே கட்டி ஆள்பவள் , பல நிறுவனங்கள் அவளது பொருளாதார ஆலோசனைக்கு காத்து நிற்கும் அளவு திறம் பொருந்தியவள். அந்த நிறுவனத்தின் பங்குதாரர் மற்றும் இயக்குநர்களில் ஒருவள், தனது ஹை ஹீல்ஸ் ஒலி எழுப்ப கருநிற பேன்ட் மற்றும் முழுக்கை சட்டை மேலே ஒவர் கோட் மற்றும் கையில் மடிக்கணிணியுடன்
உள்ளே நுழைந்தவளின் காலடி ஓசை மட்டுமே பிசிர் இன்றி அனைவரின் செவியிலும் வந்து சேர அவ்விடம் அமைதியானது. முகமன்களுடன் வந்து தனது இடத்தில் அமர்ந்தாள் . தலைமை செயல் அதிகாரியிடம் திரும்பி அனும.தி வேண்டியவள் . தனது மடிக்கணிணியை
இயக்கி உரையாற்ற தொடங்கினாள்.
"இந்த நிதி ஆண்டிலிருந்து மருத்துவ தளபாடங்கள் தயாரிப்பில் நமது நிறுவனம் கால் பதிக்க இருப்பதாலும் அதற்கான நிதி மற்றும் விற்பனை குறித்த திட்டங்கள் தீர்மானங்கள் பற்றிய வரைவுகள் பரிந்துரைகள் பற்றி நாம் விவாவதிக்க இருக்கிறோம்."
அவளது கண்கள் அந்த அறையில் அனைவரது கவனமும் தன் மீது குவிந்து இருப்பதை உறுதி செய்து கொண்டவள்
மேற்கொண்டு பேசலானாள்.
" நமது சத்துபானம் பல ஆண்டுகளாக இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் வரும் நிகர லாபம் உலகம் முழுவதும் வரும் லாபத்திற்கும் இடையே வேறுபாடு மிக குறைவு சரியாக சொல்வது என்றால் இரண்டும் சமம் ."
விற்பனை துறை தலைவரை கண்களில் பார்த்து உதடுகளை சுழித்து இகழ்ச்சி புன்னகையை கொடுத்தாள். எதிரணியில் அவர் இருப்பதை அவள் அறிந்ததால் தானே இப்படி தீடீர் சந்திப்பு விஷயம் வெளியேகசியும் முன் ஏற்பாடு செய்தாள்.
"இந்தியாவில் நமது விற்பனை உரிமையை இந்த எம்.எம் நிறுவனத்திற்கு விற்பதன் மூலம் அவர்கள் இந்தியாவில் கால் ஊன்ற வழி கிடைக்கும் அதே சமயம் அவர்களிடம் இந்தியா முழுவதும் நமது தளபாடங்களை விற்பனை செய்யும் உரிமையை பெறுவது மட்டுமல்ல உலகம் முழுவதும் கூட விற்பனை செய்யும் போது நமது இலாபம் அதை விட அதிகம்.
இந்த ஒப்பந்தம் நமக்கு அதிக நன்மையை பெற்று தரும் ."என உரைத்தவள்
கடந்த கால நிதி நிலை அறிக்கை விற்பனை அறிக்கை என அனைத்தின் அடிப்பிடையில் கருத்துகளை எடுத்து கூறி மறு மொழி எதுவும் இன்றி அதனை ஏற்க செய்தவள், ஆவணங்களில் கையொப்பம் இட்டு நிமிரும் போது மாலை வந்திருந்தது.
அனைவருக்கும் கை குலுக்கல் மற்றும் சிறு தோளணைப்புடன் விடை கொடுத்தாள். அவளது உதவியாளினி லீனா அவளது உத்தரவிற்கு காத்திருப்பதை பார்த்தவள்,
"மற்ற வேலைகளை இனி திங்கள் அன்று பார்த்துக் கொள்ளலாம், இப்போது , நீங்கள் செல்லலாம் மிஸ் லீனா. "என தனது உதவியாளரை அனுப்பி வைத்தாள்.
அங்கிருந்த சுழற் நாற்காலியில் ஆசுவாசமாக அமர்ந்து இருகரங்களையும் தூக்கி சோம்பல் முறித்தவள் அகம் மகிழ்சியில் இருந்தது.
தன் மகிழ்ச்சியை கொண்டாட எண்ணமிட்டபடி தனது மனி கட்டில் இருந்த கடிகாரத்தில் நேரம் பார்த்தவள் அது முன் மாலை பொழுதை காட்ட,
இப்போது அழைத்தால் தான் அங்கு சென்று சேர்வதற்கும் அவன் வரவும் சரியாக இருக்கும் என யோசித்து தனது அலைபேசியில் இருந்து அந்த எண்ணிற்கு அழைத்தாள், அழைப்பை ஏற்றுபேசிய மறுமுனைக்கு ஒரு ஹோட்டலின் பெயரை கூறியவள் இன்று இரவு எட்டு மணிக்கு என்று விட்டு அலைபேசியை அனைத்து விட்டு எழுந்தாள்.
தளத்தை விட்டு இறங்கும் முன் தன்னை சரி செய்து கொள்ள அறைக்கு சென்றாள்.
அதீரை அந்த நிறுவன நிர்வாக இயக்குநர்களில் ஒருவளும் என்பதால் அவளுக்கு தனி அலுவலக அறை அதன் உட்புறம் சிறு படுக்கை வசதி மற்றும் குளியல் அறை உண்டு ஏனெனில் வேலையின் தீவிரம் அதிகமாகும் போது சில நேரங்களில் வீடு திரும்ப நேரம் இருக்காது .அது போன்ற நேரங்களில் இங்கேயே தங்கிக் கொள்வாள் இப்போது கூட அவள் இந்த பேச்சு வார்த்தையின் ரகசியம் கருதி ஒரு வாரமாக வீட்டிற்கு செல்லவில்லை.
இன்று தான் வெற்றிகரமாக தனது பேச்சுவார்த்தையை முடித்து வெற்றி பெற்றிருக்கிறாள். அதை கொண்டாடத்தான் தயாராகிக் கொண்டிருக்கிறாள்.
கண்ணாடி அவளை பிரதிபலித்ததை நினைத்து பெருமை கொண்டது. அசாதாரணங்கள் சேர்ந்து செய்த சாதாரணம் இவள் என்று
அதிக சிரத்தை எல்லாம் இல்லை , தோளை தாண்டி இறங்கிய கூந்தலை விரித்து விட்டாள். பிறகு இழுத்து கூந்தல் மாட்டியில் இறுக்கினாள் .
ஒரு ஜீன்ஸ் மேலே ஒரு இளநீல சர்ட் என மாற்றி தன்னை சரி பார்த்தவள் தனது உடைமைகளுடன் இறங்கினாள்.
அந்த பப் அதற்குரிய அத்தனை கல்யாண குணங்களுடன் அதன் உச்சபட்ச பரபரப்பில் இருந்தது. காரை நிறுத்தியவள் சாவியை , அதனை அதன் நிறுத்துமிடத்தில் நிறுத்தவென நியமிக்கப்பட்ட பணியாளர் கையில் வீசியவள் , உள்ளே விரைந்து விட்டாள்.
பாரில் காக்டெய்ல் கலக்கும் இடத்திற்கு சென்றாள். அந்த பணியாளர் அவள் முன் வந்து முகமன் கூறியவன்
"மேடம் யுவர் ஆர்டர் ப்ளீஸ்? "என அவளுக்கு வேண்டியதை விசாரித்தான்.
"மன்ஹாட்டன் " என தனது விருப்பத்தை உரைத்தாள்
"த்ரீ மினிட்ஸ் " என்றவன்
ஒரு கிளாஸை எடுத்து அதனுள் பனிக் கட்டிகளை போட்டு தனது ஜிக்கர்ஸ் எனும் அளவு கோப்பையினால் ஸ்வீட் வெர்மோத்தை ஒரு முறை அளந்து ஊற்றி பின் விஸ்கியை இரண்டு கோப்பை என ஊற்றி மேலே கசப்பு சுவை தரும் திரவம் சில துளி சேர்த்தவன் நீள கலக்கும் சிறு கரண்டி கொண்டு கலக்கி அதை ஆரஞ்சினால் அலங்கரித்து அவளிடம் தரும் வரை
அங்கேயே நின்று அவன் கலவை தயாரிப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள்.
(காக்டெய்ல் என்பது ஆல்ஹால் மற்றும் ஆல்ஹஹால் அல்லது ஆல்ஹஹால் மற்றும் புதிய பழச்சாறுகளை குறிபிட்ட விகிதத்தில் கலந்து தயாரிக்கப்படும் கலவை)
அந்த சிவந்த திரவம் அடங்கிய கோப்பையை கையில் ஏந்தி சில மிடறு அருந்திய படி சுற்றி கண்களை சுழற்றியவளிடம்
நானும் உங்களுடன் இணைந்து கொள்ளலாமா?
(May I join with you) என அவளிடம் வந்து நின்றான் அவன்.
தேர்வு செய்யப்பட்ட மாடலை போல உடல் மிக கவனமாக பராமரிக்கப்பட்ட உடற்கட்டு , என பெண்களை மயக்கும் அனைத்து புற தோற்றத்திலும் சற்று கூடுதல் கவனம் செலுத்தி பேரழகனாகத்தான் இருந்தான்.
அவன் குரலுக்கு செவி சாய்த்தபடி அவன் புறம் திரும்பியவள் அதிர்ந்து போனாள் பிறகு அவனை சற்று உற்று பார்த்த பிறகு தான் அவள் அறிந்த அவனுக்கும் , இவனுக்கும் சில வித்தியாசங்கள் இருப்பதை அறிந்தவள் இதை மட்டும் என முடி வெட்டு கையில் இருக்கும் டாட்டூ ஆடைகளை சரி பண்ணிட்டா இவன் அவனே தான் என எண்ணமிட்டவள், வருங்காலத்தில் அதையே தான் செய்ய போகிறோம் அந்த சூழ்நிலையில் விதி தன்னை நிறுத்த போகிறது என அறியாதவள்,
அவனுக்கு பதில் உரைத்தாள் சிறு சிரிப்புடன்
ya Why not ? what do you Prepare whiskay , Rum or anything elese?
என மேலும் உரையாடலை வளர்த்தாள். அவன் நோக்கமும் அது தானே அதையும் அதீரை அறிந்து தான் இருந்தாள்.அவள் தானே அலைபேசி வழியே அவனை தொடர்பு கொண்டு இங்கே அழைத்திருந்தாள்.
தனது கையிலும் டக்கியூலா எனும் ஆல்ஹஹால் திரவ கோப்பையை ஏந்திய அவனும் அவளுடன் இணைந்து நடந்த படி ஒரு மேஜையை நோக்கி நகர்ந்தனர்
அங்கே ஒரு இடத்தில் DJ யின் பணியில் விதவிதமான பாடல்கள் ஒலித்தபடி இருக்க அதற்கு ஏற்றபடி பலர் ஆடிய படி இருக்க
தனது கட்டை விரலால் அந்த புரத்தை காட்டியவன்
அங்கே செல்ல வேண்டுமா என்றவனுக்கு
வேண்டாம் என்றவள் ஏற்கனவே தான் பதிவு செய்த மேஜையில் அமர
அவளுக்கு எதிரில் அமர்ந்தான் .
உங்கள் பெயர்? என்றவனுக்கு
அதீரை என்றவள்
யுவர் ஸ்? என்றாள் ,
டாவின்சி என்றவன் அங்கு வந்த பணியாளரிடம் இருந்து இரு கோப்பைகளை எடுத்தவன் ஒன்றை தானும் மற்றொன்றை அவளுக்கு தந்தவன் எதிர்புறம் இருந்து அவள்புறம் வந்திருந்தான்.
உங்களை பற்றி சொல்லுங்கள் என்றவனுக்கு தனது நிறுவனத்தின் பெயரையும் அங்கு தனது இடத்தையும் கூறினாள்.
உங்களை பற்றி கூறுங்கள் டாவின்சி
என்றவளது கரங்களை பிடித்து கொண்டவன் மெல்ல நீவியபடி நெருக்கத்தை அதிகரித்தவன்,
என்னோட பேர் டாவின்சி, இங்க ப்ளோரிடாவுல ஆர்ட் கேலரி வைச்சிருக்கேன், மாடலிங் என்னோட பேஷன் அதுக்குதான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன் , என்றவன் கரங்கள் இடம் மாற தொடங்கியது.
அதன் பின் இருவரின் பேச்சுவார்த்தை இதழ்களினுள் முடிந்தது. மிகநெருங்கிய இருவரும் கொண்டாட அந்த அறை களைத்திருந்தது .
அலைபேசியின் அழைப்பில்
மெத்தையில் துயில் கொண்டு இருந்தவள் டாவின்சியில் அனைப்பில் இருந்து விலகி அலைபேசிக்கு பதில் அளித்தாள்.
நேரமாகிவிட்டதை உணர்ந்து கலைந்து கிடந்த தனது ஆடைகளை சேகரித்துக் கொண்டு குளிக்க சென்றாள்.
குளித்து கண்ணாடியின் முன் தோற்றத்தை சீர் செய்தவளை பின்னிருந்து அனைக்க வந்தவனை , கண்ணாடியை பார்த்தபடியே
"அங்கேயே நில் (stay there) டாவின்சி ", என்றவள் அவனுக்கான பணத்தை எடுத்து மேஜை மீது வைத்தவள்,
"தங் யூ பார் யுவர் கம்பெனி " அதாவது நேற்றைய உன் ஒத்துழைப்புக்கு நன்றி இதில் இதை தாண்டி இனி நமக்குள் ஒன்றும் இல்லை எனும் வகையில் அவனை திரும்பி கூட பாராமல் அறையில் இருந்து வெளியேறி இருந்தாள்.
அவள் அதீரை அப்படித்தான் , காதல் திருமணம் போன்றவற்றில் நம்பிக்கை அற்றவள், தனது எண்ணங்கள் செயல்கள் சுதந்திரத்தில் யாருடைய தலையீடையும் விரும்பாதவள், இது போன்று திருமணமாகமல் இரவுகளுக்கு ஒருவனுடனான உறவு தவறல்லவா என்றால் ,
நான் யாருடைய கணவனையும் அழைக்கவில்லை வற்புறுத்தவும் இல்லை. என் காதலனுக்கோ கணவனுக்கோ நம்பிக்கை துரோகம் செய்யவில்லை , அவனுடைய தேவை பணம் எளிதில் சில மணி நேரங்களில் கூடவே சந்தோஷமும் …
இது போன்று கட்டுப்பாடற்று உணர்வுகளை தறிகெட்டு அலைய விடுவது தவறல்வா என்றால்
பசி, தாகம் , போல இதுவும் ஒரு உணர்ச்சி அவ்வளவு தான் , இதற்கு தேவையில்லாமல் அதிக முக்கியத்துவம் தருவது தான் பல பிரச்சனைகளுக்கு காரணம்
மேலும் நாட்டில் இதைவிட பெரிய பிரச்சனைகள் இருக்கு அத பாருங்க இல்லை உன் குடும்பத்தை பாரு அதை விட்டு விட்டு என் தணிப்பட்ட விஷயத்தை பற்றி பேச உணக்கு உரிமை கிடையாது
இது அதீரையின் நிலைப்பாடு இது பற்றி யாரும் அவளிடம் கேட்டது இல்லை , அந்த வாய்ப்பு யாருக்கும் கிடைத்ததது இல்லை அவளது வளம் வேலை சுற்றத்தின் நிலை இதை செய்திருந்தது.
அவள் தாய் தந்தையர் இருவருமே ,இது தங்கள் மகளது சுதந்திரம் என கண்காணிப்பையும் பண்பாட்டின் முக்கியத்துவத்தை கூறி வளர்க்க வேண்டிய காலத்தில் பணம், பார்ட்டி என அலைந்து விட்டு இப்போது வருத்தம் கலந்த புன்னகையுடன் நழுவுபவர்கள்.
முன்பு இவர்கள் சுதந்திரத்திற்க்கு அதீரை குறுக்கீடு செய்ய கூடாது என அவளுக்கு செல்வத்தையும் கல்வியையும் தந்தவர்கள் அன்பு பண்பாடு ஒழுக்கம் பற்றிய புரிதல் தரவில்லை , விளைவு அவள் சுயம் அவளே பார்த்து கேட்டு படித்து பெற்று வளர்த்துக் கொண்டாள்.